ஏன் சிம்பு ஏன்!!!



இந்த மாதிரி போஸ் கொடுக்கப்போய் தான் எங்கத்தல அஜீத்தை கவுத்தானுங்க. இப்ப அடுத்தது நீயா?

‘‘ ‘கெட்டவன்’ உங்கள் சொந்தக் கதையா?’’

‘‘ஆமா! மறுக்க மாட்டேன். பெண்கள் நம்ம மேல ஏற்-படுத்துற பாதிப்பு இருக்கே, அது ஆழமான ஈடுபாடு. என் காதல் ஊருக்கே தெரியும். ஆனா, பார்த்துட்டே இருந்த, பேசிட்டே இருந்த, ஊறிட்டே இருந்த அன்பெல்-லாம் இப்போ என்னாச்சு?

சார், பெண் மனது நம்மை நினைக்கிறது, ராத்திரி அவங்க தூங்குற வரைக்கும்தான். அதுவே ஆண் மனது ஒரு பெண்ணை நினைக்கிறது சாகுற வரைக்கும். இதையும் ‘கெட்டவன்’ல சொல்றேன். ‘ஒரு மனுஷனுக்கு மூணு முகம் இருக்கு. நான் யாருன்னு உலகம் புரிஞ்சு வெச்சிருக்கிறது ஒரு முகம்; நான் யாருன்னு எனக்குள் உணர்ந்து- வெச்சிருக்கேனே... அது ஒரு முகம்; உண்மையான நான்கிறது மூணாவது முகம்’னு ஒரு தடவை கமல் சார் சொன்னார். நான் இந்த மூணு முகத்தையும் ‘கெட்டவன்’ல காட்டப் போறேன்.’’





something


ஏன்னா இப்பல்லாம் ஒரு கதை எழுதி படம் எடுத்தா அது என்கதைன்னு நாலு பேர் கேஸ் போடுறாங்க சார் இப்படி ஒரு மேட்டர் சொல்லிட்டா பிரச்சனை வராது பாருங்க. - இது நம்ம மேட்டரு.

சமீபத்தில் விகடனில் வெளியாயிருந்த கேள்வி பதிலில் இருந்து சுட்டிருக்கிறேன். படத்தையும் மேட்டரையும்.

மலரினும் மெல்லிய காமம்

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்

அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீ, அகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தாள். அகிலாவிற்கு ஆப்பிள் ஜூஸும் எனக்கும் ஜெயஸ்ரீக்கும் கோல்ட் காப்பியும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்.

நான் நேரடியாய் அவளிடம் "ஜெயா சாரி, நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது! மன்னிச்சிக்கோ." சொன்னதும் தான் தாமதம்.

"அது பரவாயில்லை இன்னிக்குப் பொழச்சிப்போங்க, இன்னொரு நாள் வைச்சிக்கிறேன் அதுக்கு. எப்ப ட்ரீட்?". அந்தப் பிரச்சனையை அதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.

"எதுக்கு ட்ரீட்." எதற்கென்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கக் கேட்டேன்.

"உங்களுக்குத் தெரியாதா?" இந்த முறை அகிலா குறுக்கே வந்து அவளைக் கிள்ளினாள்.

"ஏன் நீ தான் சொல்லேன்" அகிலா இந்தப் பிரச்சனையில் வருவதும் வெட்கப்பட்டு நிற்பதும் என்னை இன்னும் குஷியாக்க நான் அவளையும் சேர்த்து வம்பிழுக்க ஜெயஸ்ரீயிடம் கேட்டேன்.

"defloration" பெரிய ஆள் தான் அழகான வார்த்தையைக்க் கொண்டுவந்து திணித்தாள். அகிலா ஜெயஸ்ரீயை முறைக்க நான் மெதுவாய் அகிலாவிடம், "அப்படியா?" என்று கேட்க அப்பொழுது தான் வந்து சேர்ந்திருந்த ஆப்பிள் ஜூஸை என் தலையில் கவிழ்த்துவிட்டு போயேவிட்டாள். இருள் கவிழத் தொடங்கியிருந்த நேரம் ஜீஸ் கடையில் பெரிய கூட்டமில்லை, நான் வழியும் ஜூஸுடன் சிரித்துக் கொண்டிருந்தேன்.

ஜெயஸ்ரீ, "ஆனாலும் இப்படியா கேப்பாங்க. லூஸுங்கிறது சரியாத்தான் இருக்கு!"

---------------------------



நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள்

---------------------------

"கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள்.

நாங்கள் ஊட்டி செல்லத் தீர்மானித்தோம், என் பள்ளி இறுதி வரை அங்கே தான் படித்தேன் என்பதாலும் பெங்களூரில் இருந்து இரண்டு நாள் ஊர் சுற்ற சென்று வருவதற்கான இடங்களில் முக்கியமான ஒன்று என்பதாலும். புதிதாய் வாங்கியிருந்த ஹுண்டாய் கெட்ஸிலேயே சென்று வரலாம் என்ற என் திட்டதற்கு மறுப்பொன்றும் சொல்லவில்லை, அவள் முகத்தில் என் ஓட்டுநர் திறமையைப் பற்றிய சந்தேகம் இருந்தது மட்டும் பிரகாசமாய் தெரிந்தது. அவள் என்னுடன் வெளியில் இதுவரை வந்ததேயில்லை என்ற எண்ணம் என் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது. திட்டமிட்டது போலவே ஆறுமணிக்கு அல்சூர் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள், பேருந்து நிலையத்தில் இருந்து அவள் வீடு கூப்பிடு தூரம் தான். ஷோல்டர் பேக் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள், நான் பயந்தது எங்கே சென்று பின் சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று தான், நான் எதிர்பார்த்தது போலவே காரை நெருங்கியவள் பின் சீட்டைத் திறந்ததும் நான் கொஞ்சம் போல் அதிர்ந்து தான் போனேன். ஆனால் அவள் தன் பையை மட்டும் அங்கே வைத்துவிட்டு முன் சீட்டில் வந்தமர்ந்தாள், அவள் உதட்டில் புன்னகை அரும்பியிருந்தது.

"ஒரு நிமிஷத்தில் உன் மூஞ்சி என்ன கோணத்துக்கெல்லாம் போகுது, இப்பல்லாம் நீ என்ன நினைக்கிறேன்னு என்னால் சுலபமா கண்டுபிடிக்க முடியுது! தெரியுமா?"

எனக்கு அவள் குஷி மூடில் இருந்ததே மகிழ்ச்சியளித்தது. என்ன தான் அவள் என் ஏற்பாட்டிற்கும் ஆசைக்கும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவள் சந்தோஷமாய் இல்லாமல் என்னவோ போல் இருந்தால் மற்ற ப்ளானைத் தள்ளிப் போட்டு விட்டு சும்மா ஊர் மட்டும் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை அதற்கான அவசியம் இருக்காது போலிருந்தது.

"இப்ப என்ன தெரிஞ்சிக்கிட்ட?"

பெரும்பாலும் இது போன்ற கேள்விகளுக்கு அகிலா பதில் சொல்ல மாட்டாள். நான் அவள் பின்சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று பயந்தது அவளுக்குத் தெரிந்திருக்கும்.

"ம்ம்ம் உன் மொகரைக்கட்டை!"

என் மனம் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது, அவளுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். சட்டென்று தலையில் தட்டி,

"ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு! என்னா?" என்றாள்.

அவள் என்னைத் தொட்டுப் பேச மாட்டாள், மூன்றாண்டுகளில் நான் சில முறை தொட்டுப் பேசியிருப்பேன், வெகுசில சமயம் கைகளை பிடித்துக் கொண்டு விளையாடியிருப்பேன். ஆனால் சுவரிலிருந்து நீண்ட இன்னொரு குட்டிச் சுவர் போல் உணர்ச்சியற்றதாய் அவள் கைகள் இருக்கும் அப்பொழுதுகளில். அவள் தலையில் தட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் என் கண்கள் தானாய் அவள் மார்பு பக்கம் திரும்பியது. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை, அதுவும் அகிலாவிடத்தில் கொஞ்சம் இதைப்பற்றிய ஜாக்கிரதை உணர்வுடனேயே இருப்பேன். பெரும்பாலும் அட்டிட்டியூட் காண்பிக்கும் பெண்களிடம் கொஞ்சம் சீரியஸாய் வம்பிழுக்க அவர்களுக்குத் தெரியும்படி மார்புகளை வெறிப்பேன் சிறிது நேரம். ஆனால் அகிலாவிடம் அதுவரை செய்ததில்லை, அதாவது அவளுக்கு தெரியும் வகையிலோ அல்லது அவள் உணர்ந்து கொள்ளும் வகையிலோ அவள் மார் பகுதியை நோட்டம் விட்டதில்லை, ஆனால் அவளுக்குத் தெரியாமல் செய்திருக்கிறேன். இப்பொழுது அவளாய்ச் சீண்ட செய்திருந்தேன்.

அகிலா கைகள் நீட்டி நான் லாவகமாக இருக்கட்டும் என்று அணிந்து வந்திருந்த பெர்முடாஸால் மறைக்கப்படாத என் தொடைப் பகுதியில் கிள்ளினாள். அவளுடைய வலது கை விரல்களில் பராமரிக்கப்பட்ட நகங்கள் இருந்ததால், உண்மையிலேயே வலித்தது. நான் "அம்மா" என்று கத்தினேன் தொடர்ச்சியாய்.

"நீ செஞ்சது தப்பு, அப்படிப் பார்ப்பது அநாகரீகமாயிருக்கு! எந்தப் பொண்ணு கிட்டையும் அப்படி நடந்துக்கக்கூடாது" கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்.

"நான் சரிங்க மேடம்" என்று சொன்னதும் சகஜ நிலைக்கு வந்தவள். நான் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்களிலிருந்து என் பார்வை மார்பகத்திற்கு நீளத் தொடங்குவதும் பின்னர் நான் பெரு முயற்சி செய்து கட்டுப் படுத்துவதையும் பார்த்து, சப்தமாய் சிரித்தாள்.

"எத்தனை நாளுக்கு இதைச் செய்யப்போற நீ, இன்னும் இரண்டு நாளைக்கு? அப்புறம் 'சீ'ன்னு சொல்லி விடப்போற! எனக்கென்ன?" என்றவாறு மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். எனக்கென்னமோ பார்த்துத் தொலை என்று சொல்லிவிட்டது போலிருந்தது. அவள் எப்பொழுதும் அணியும் கொஞ்சம் தொல தொலா சுகிதார் அல்ல அன்று அவள் அணிந்திருந்தது, ப்ரேசியர் அதன் மேல் டாப்ஸ் ஒன்று அணிந்து மேல் அவள் சுகிதார் அணிவது தான் வழக்கம் இன்றும் அப்படித்தான் என்றாலும் இறுக்கமான சுகிதார் அவள் மார்பகங்களை இன்னும் எடுப்பாய்க் காட்டியது. கல்லூரிக் காலத்தில் இருந்தே பெண்களின் மார்புகளை நோட்டம் விடுவது தான் வேலை என்றாகியிருந்ததால், அகிலாவினுடையவை சராசரிக்கும் குறைவானவை என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். சுகிதார் அவள் அளவில் இல்லையென்பதால் தோள்பட்டையில் அவள் பிராவினுடையதும் டாப்ஸினுடையதுமாய் இரண்டு வெவ்வேறு வகையான உப்பல்களுடன் கண்களைத் துருத்துக் கொண்டிருந்தது.

"இந்த சுடி நீ போட்டு நான் பார்த்ததில்லையே! புதுசா?'

சட்டென்று கேட்ட கேள்வியால் திரும்பியவள்,

"என்னைய நீ அவ்வளவு நோட் பண்ணுவியா? ஆமாம் இது என் தங்கச்சியோடது! அவள் தான் கொடுத்தாள் போட்டுக்கோன்னு. ஏன் நல்லாயில்லையா?"

இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போலிருந்து, அவள் உடுத்தும் உடையைப் பற்றிக் கேட்டால் சொல்ல ஆயிரமாயிரம் உரையாடல்களைத் தயார் செய்து வைத்திருந்தேன், ஒன்றும் உதவவில்லை.

"ச்ச, சூப்பராயிருக்கு. நீதான் என் டைரி படிச்சியே! எனக்கு நீ பண்ணுற ட்ரெஸ்ஸிங்க் சுத்தமா பிடிக்காது. இந்த ட்ரெஸ்ஸில் நீ ரொம்ப அழகாயிருக்க!" என் கண்கள் தானாய் அவள் கண்களில் இருந்து டைவ் அடித்தது. இந்த முறை அவள் ஒன்றும் சொல்லவில்லை, முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை. ரசித்தாள். அவள் அழகை நான் ரசிப்பதை ரசித்தாள்.

நாங்கள் பெங்களூரை விட்டு வெளியில் வந்திருந்தோம், இனி மைசூர் போய் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டால் போதும் என்று நினைத்தேன். என்றைக்கும் இல்லா அதிசயமாய் ரோடு கொஞ்சம் ட்ராஃபிக்கா இருந்தது அதிகாலையிலேயே. நான் அகிலாவிடம்,

"அகிம்மா உனக்கு தூக்கம் வந்தா தூங்கு என்ன!" என்றேன்

"சரி" என்றவள் தூங்கப்போவதில்லை போலத்தான் இருந்தது, ரொம்ப தீவிரமாய் இரண்டு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். நான் எனக்குத் தெரிந்த கடக்கும் ஊரைப்பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் எதுவும் தெரியவேண்டுமென்றால் கேட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் மைசூர் வந்து காலை உணவு முடித்த பிறகு குண்டல்பேட் வழியாக ஊட்டி செல்லும் பாதையை எடுத்தேன். கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய சாலையாகையால் விளையாட்டுத்தனங்களை விடுத்து பக்கத்தில் அமர்ந்திருக்கும் தேவதையை மறந்து கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் அகிலா தூங்கவேயில்லை, அவள் கண் அசந்து கூட நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் டயர்டாக தோன்றத் தொடங்கியது, பெரும்பாலும் நண்பர்களுடன் செல்லும் பொழுது சிறிது நேரம் கழித்து யாரிடமாவது ஸ்டேரிங்கைக் கொடுத்துவிட்டு தூங்கப் போய்விடுவதுண்டு. பெங்களூரில் இருந்து ஊட்டி வரை இதுதான் முதல் முறை தனி ஆளாய் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அகிலா என்னைத் தொந்தரவு செய்யவில்லை, நான் சீரியஸாய் ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அமைதியாகிவிட்டிருந்தாள். நான் கொஞ்சம் போல் டயர்டாகியது தெரியத் தொடங்கியது டீ குடிக்கலாம் என்றாள், அவள் அத்தனை டீ குடிப்பவள் இல்லை என்பதால் எனக்காகத் தான் கேட்கிறாளென்று புரிந்தது. நாங்கள் ஒரு வழியாய் கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி ஊட்டி வந்த பொழுது மதியம் இரண்டாகியிருந்தது, பெங்களூரில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை என் டிரைவிங் பற்றி எதுவும் சொல்லாதவள், வளைவொன்றில் ஓரங்கட்டி நிறுத்தி வியூ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டாள், "நல்லா வண்டி ஓட்டுறீங்க! இங்க நிறைய தடவ வந்திருக்கீங்களோ?!"

அவள் கண்களில் சில்மிஷம் இல்லை, ஆனால் நான்,

"வந்திருக்கேன் இதான் முத தடவையா ஒரு பெண்ணோட!" இதற்கு நான் அகிலாவிடம் இருந்து லேசான கோபப்பார்வையை எதிர்பார்க்க அவளோ,

"ம்ம்ம் நம்பிட்டேன்" என்று சிரித்தபடி சொல்லி கலவரப்படுத்தினாள்.

நான் பரிதாபமாய் "அகிலம் நான் பொய் சொல்லலை, உண்மையிலேயே இதான் மொத தடவை ஒரு பொண்ணு கூட ஊட்டி வர்றேன். ஊட்டி மட்டுமில்லை எங்கையுமே என்னை நம்பு".

அவள் கொஞ்சம் இறங்கிவந்து, "ச்ச சும்மா சொன்னேன் தாஸ், உன்னைத் தெரியாதா?" என்று சொல்லி குடலுக்கு பியர் வார்த்தாள்.

"ஹாங் வண்டி ஓட்டுறதைப் பத்தி கேட்டள்ல, நான் இங்கத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன் அதனால எனக்கு ஹில் ஸ்டேஷன் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது!" கொஞ்சம் படம் காட்டியிருந்தேன்.

ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ஹோட்டல் பிருந்தாவனில் ஒரு டபுள் ரூம் கன்ப்ஃர்ம் செய்துவிட்டு ஹோட்டல் அறைக்குள் நுழையும் முன் ஒரு பரீட்சை அறைக்குள் நுழையப் போகும் மாணவனைப் போன்ற பயம் வந்தது, வயிற்றுத் தசைப் பகுதி இறுக்கிப் பிடிக்கப்பட்டது போல் இருந்தது. அதுவரை இருந்த டயர்ட்னஸ் காணாமல் போயிருந்தது, திரும்பி அகிலாவைப் பார்த்தேன் வேறெதையோ பார்ப்பதைப் போல் அவள் முகத்தில் அந்தப் பதற்றம் இல்லை.

அறைக்குள் வந்து தாழிட்ட பொழுது ஏனோ மனசுக்குள் தவறு செய்வது போன்ற ஒரு உணர்வு, கதவுக்குப் பின்னிருந்த குப்பைத் தொட்டியில் அந்த எண்ணத்தைப் போட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். அகிலா பாத்ரூம் சென்றுவிட்டு அப்பொழுது தான் வந்தாள், வந்ததும் வராததுமாய் மொத்த அறையையும் நோட்டம் விட ஆரம்பித்தாள். நான் அவளாய் செட்டில் ஆகட்டும் என்று பெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை துவக்கினேன். சேனல்கள் மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இடைப்பட்ட ஈஎஸ்பிஎன் டிவியில் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மாட்ச் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு நான் அகிலாவை மறந்து மேட்சில் ஆழ்ந்துவிட்டேன்.

"உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யார் தாஸ்?" கவனம் கலைந்து பார்க்க அகிலா கட்டிலில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள், என்னால் அந்தப் பொழுதை நம்பமுடியவில்லை.

"அகிம்மா, எனக்கு மார்க் வாஹ் தான் பிடிக்கும், நான் ஒரு தீவிர ஆஸ்திரேலிய சப்போர்ட்டர்!"

அவள் அப்படியா என்பதைப் போல் பார்த்தாள், பின்னர் மேட்சில் ஆழ்ந்துவிட்டாள், ஆனால் என்னால் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்றரை அடிதான் வித்தியாசம் இருந்தது. மூன்றாண்டுகளில் இந்த நொடியைப் பற்றி நிறைய கற்பனையை வளர்த்திருந்தேன், திருமணத்திற்கு முன் / பின் என்ற எல்லைகளில் வைத்து விரிந்திருந்த கற்பனை ஒரு முடிவை நோக்கி நகர்த்தவே முடியாததாய் இருந்தது. இந்தப் பொழுதில் அவள் நிராகரித்தாள், அடுத்தக் கணத்தில் அவள் நிராகரித்தாள் என்று மனம் பல்வேறு கணக்குகளை போட்டபடிதான் முடிந்திருக்கிறது. அவளுடைய நிராகரிப்பு என்பது எங்கள் கம்ப்யூட்டர் சைன்ஸ் ப்ளோ சாட்டில் வரும் Endஐப் போல. அவளை வற்புறுத்தும் எண்ணம் துளியும் கிடையாது, இப்பொழுதைக்கு மட்டுமல்ல திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படியே தொடர வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.

நான் மெல்ல அவளருகில் நகர்ந்து உட்கார்ந்தேன். அவள் ஒரு நொடி திரும்பி என்னைப் பார்த்தாள், அப்பொழுது அவள் கண்களை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு வெறுமை மட்டுமே இருந்தது அதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் டிவி பக்கம் திரும்பிவிட்டாள். நான் அவள் கைகளை அவளிடமிருந்து விடுவித்து என்னிடம் வைத்துக் கொண்டேன். இதற்கு முன் இப்படிச் செய்தது வெகு சில முறைதான் என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அவள் கைகள் காய்ச்சல் வந்தவளின் கரங்கள் போல் சூடேறியிருந்தன, என் கைகளின் தொடுதலால் அவள் கையில் இருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு நின்றன. அவளுக்கு பின்புறம் முதுகை நோக்கி அமர்ந்தவாறு இருந்தாலும் அவள் கண்களை மூடிக் கொண்டதை உணர முடிந்தது. மெதுவாய் அவள் முதுகில் விரல்களை ஓட்டினேன். அவள் கைகள் மரக்கத் தொடங்கியது, அது நான் எதிர்பாராதது அவள் தன்னை கூட்டுக்குள் கொண்டு செல்கிறாள் என்று உணரமுடிந்தது. நானாய் கைகளை எடுத்துவிடவே நினைத்தேன் ஆனால் மறுப்பு அவள் பக்கத்தில் இருந்து வரட்டும் என்று விட்டது என் தவறு தான்.

"தாஸ் இப்பவே இதைச் செய்தாகணுமா?" முடிந்தது, இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட என்னால் இதைப்பற்றி பேச முடியாது. என் கைகள் தானாய் அவள் முதுகிலலிருந்து அகன்றன, அவள் கைகளை விடுவித்தேன், அந்த மாற்றம் அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும், இயலாமையால் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது, அவள் மேல் கொஞ்சம் கோபம் வந்தாலும் அது நான் வண்டி ஓட்டிக் கொண்டு வந்த களைப்பால் வந்ததாகத்தான் இருக்க முடியும், என்னால் அகிலாவை கோபிக்க முடிந்தது கூட ஆச்சர்யமாக இருந்தது. அவள் கண்கள் என்னைக் கெஞ்சின, 'ப்ளீஸ் கல்யாணத்துக்குப் பிறகு இதைச் செய்து கொள்ளேன்' என்று. உண்மையில் எனக்கு அதில் பிரச்சனை இல்லை, நானே கூட என்னைக் காதலிக்கிறாய் என்றால் நாம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்ல நினைத்த பொழுது தான் அவள் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆண் மனம் கலவிக்கு அலைந்தது. என்னால் அகிலாவை அப்படிப் பார்க்க முடியவில்லை, நான் மெதுவாய் படுக்கையில் சாய்ந்த படி கண்களை மூடினேன் அவ்வளவுதான் தெரியும்.

கண்களைத் திறந்த பொழுது நினைத்துக் கொண்டேன், மன்மதன் தான் எழுப்பியிருக்க வேண்டுமென்று. அகிலா ஒரு டர்க்கி டவல் மட்டும் உடுத்தி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள், ஹமாம் சோப்பின் மணம் நாசிகளைத் துழைத்தது. அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும் என் பக்கம் திரும்பிச் சிரித்தவள் அசப்பில் பாலு மகேந்திரா படத்து ஹீரோயின்களைப் போலிருந்தாள் அவள் மாநிறம் இல்லை என்றாலும் கூட, அவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பமும் அவள் அசலும் சேர்ந்து என்னை நிலை கொள்ள முடியாதபடி ஆக்கின. எனக்கு இவை நிஜத்தில் தான் நடக்கிறது என்று தெரிந்தாலும் வேடிக்கைக்காக கைகளைக் கிள்ளிக் கொண்டேன், அவள் கைகளில் வைத்திருந்த சீப்பை என் மேல் வீசினாள்.

"மணி என்னாகுது தெரியுமா?" எனக்கு அப்பொழுது தான் நான் அதிக நேரம் தூங்கிவிட்டிருந்தது தெரிந்தது, என்னால் இது சனிக்கிழமை இரவா இல்லை ஞாயிற்றுக் கிழமை விடியலா என்ற குழப்பம் இருந்தது. கைகளில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்க்க ஒன்பதரை காட்டியது. ஜன்னல்களுக்கு வெளியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சனி இரவுதான் என்பது உறுதியாக. கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் தூங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது, தேவதை போல் ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு. அவள் முகத்திலும் அது தெரிந்தது.

"சாரி! நல்லா தூங்கிட்டேன்."

"இப்புடியா தூங்குவாங்க! நான் எப்படா 'இப்ப வாண்டாம்'னு சொல்லுவேன்னு காத்திக்கிட்டிருந்த மாதிரி தூங்கிட்ட நீ! ஏற்கனவே மூணு வருஷம் செய்தது போதாதுன்னு இங்க ஹோட்டலில் வந்து வேற ஏண்டி உயிரை வாங்குறன்னு சொல்ற என் மனசாட்சி கூட தனியா சண்டை போட்டிக்கிட்டிருக்கேன் ஏழு மணி நேரமா! தெரியுமா?"

நான் படுத்திருந்த கட்டில் நிச்சயம் தரையில் இல்லை.

"லஞ்ச் வாங்கிக் கொடுத்தியா நீ, என்ன ஆளுய்யா. இப்படித் தூங்குறவங்களை நான் எழுப்பவே மாட்டேன். நீயாதான் எழுந்துட்ட. எனக்கு பசி தாங்காதுப்பா நான் நல்லா லஞ்ச் ஆர்டர் செய்து சாப்டேன்." கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள், காதுக்குள் அவள் சொல்வது எல்லாம் மாற்றம் செய்யப்பட்டு இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சுசீலாவின் குரலில் சென்று கொண்டிருந்தது. கட்டிலில் குனிந்து அவள் தூக்கி வீசிய சீப்பை எடுக்க முயல, அவள் தலை முடி இரு பக்கங்களில் இருந்தும் முன்பக்கம் சரிந்தது. சரியாய் டவலில் முடிப்பை வலது கைகளில் பிடித்தபடி, இடது கையால் சீப்பை எடுத்து விட்டு அவள் நகர ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்த நான் தொப்பென்று மல்லாக்க மறுபுறம் விழுந்தேன்.

மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பியவள் வெள்ளை நிற டவலில் அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள், மார்பிலிருந்து முழங்கால் வரை வந்திருந்த அந்த டவல், அவளுடைய நிர்வாணத்தை விடவும் அதிக கிளர்ச்சியைத் தந்தது, அவளுடைய பரிமாணங்களை அந்தத் டவல் வேற எதாலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்று நான் நினைத்தேன். அவள் பக்கமிருந்து மெதுவாய் ஒரு வசனம். சாதாரண நாட்களாகயிருந்திருந்தால் நான் அதைக் கேட்டிருப்பதற்கான வாய்ப்பு கூட குறைவு தான்.

"இப்படியேவா! குளிச்சிட்டு வர்றியா?"

அவள் லேசாய் தலையைத் திருப்பி என்னை மோகக் கண்களுடன் பார்த்தாள், நான் நினைத்தேன், இங்கே முடிந்தது என்று. அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்தவன் அவளைப் பார்த்து புன்னகையொன்றை செய்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தேன். இதற்கு மேல் அவளால் மறுக்க முடியாது என்று தெரிந்ததும் மனம் குதியாட்டம் போட்டது, பந்தையத்திற்காக காத்திருக்கும் குதிரையைப் போலிருந்தது மனம். இதயத் துடிப்பு முறுக்கேற்றப்பட்ட ஒரு வலுவான எந்திரத்தின் வேகத்தில் இருந்தது, என் வசத்தில் இல்லை. அவள் உபயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த சோப்பில் அவள் மனம் வந்தது. எனக்கு இன்னொரு விஷயம் சட்டென்று மனதிற்குள் வந்தது, இந்தத் துடிப்பில் போனால் அவளுடைய நிர்வாணம் என்னை கீழே அழுத்தித் தள்ளிவிடும் என்று நான் எப்பொழுதும் செய்யும், 'அபிராமி அந்தாதி' பாடல்களை மனதிற்குள் வேகமாக நினைக்கத் தொடங்கினேன். சிறுவயதில் மனனம் செய்திருந்ததால், பாடல்கள் நினைவுக்கு வருவதற்கு மனதை அதன் பக்கம் திருப்ப வேண்டும், அந்தாதி என்பதால் ஒரு பாட்டின் முடிவில் இருந்து தொடங்கும் மற்ற பாடல் சாதாரணமாய் நினைவில் இல்லாமல் முடிவில் தான் நினைவில் வரும் என்பதால் மனம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். வந்தது.

நான் பாத்ரூமை விட்டு துவட்டிக் கொண்டு வெளியில் வந்த பொழுது அறையில் நைட் லேம்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் அறையில் அத்தனை வெளிச்சமில்லை, என்னை நோக்கி வரவேற்பது போல் காத்திருந்தவள் உடம்பில் துணி எதுவும் இல்லை. என் எதிர்பார்ப்பை அவள் மார்பகங்கள் ஏமாற்றவில்லை.

"Doss I don't want to get pregnant" சொல்லத் தேவையில்லாத விஷயம் என்றாலும் தவறாகி விடக்கூடாதென்ற கவனம் அதைச் சொல்ல வைத்தது. அவள் சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள் நான் நினைத்தேன் அவள் சொல்ல வருவதை அவள் காதுகள் கேட்கபதைக் கூட அவள் விரும்பவில்லை என்று. அந்நிய மொழி அவளுக்கு அந்த விஷயத்தில் உதவுவதாக இருந்தது.

"Don't worry I have condoms" சிரித்தபடியே சொன்னேன். அவளுக்குத் தெரிந்து தான் இருக்க வேண்டும், இந்த அளவிற்காவது நான் தயாராய் இருப்பேன் என்று. படுத்த படியே இரு கைகளையும் நீட்டி என்னை அழைத்தாள், கனவு போல் இருந்தது.



அரை மணிநேரத்தில் இன்னொரு முறை அவளும் குளித்து என்னையும் வற்புறுத்தி குளிக்க வைத்து குளியலறையில் நான் இன்னொரு முறை தொடங்க பொய்க்கோபம் காட்டி தடுத்தவள், 'பசிக்குது தாஸ்' என்று சொல்ல பாவமாய் இருந்தது. சட்டென்று காலையில் இருந்து சாப்பிடாதது எனக்கும் பசியெடுத்தது. சின்னச் சின்ன சிணுங்கல்கள், சீண்டல்களுடன் அவள் உடைமாற்ற அகங்காரமாய் நேரெதிரில் அவளை மட்டும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அதான் எல்லாம் முடிந்துவிட்டதே என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்று நினைத்தாளாயிருக்கும், நான் இருப்பதை அவள் பொருட்படுத்தவேயில்லை.

அவளிடம் ஆரம்ப விளையாட்டுகளின் பின், உணர்ந்து "you already came is it?" கேட்ட கேள்வி அதன் மொக்கைத்தனத்தைத் தாண்டியும் என் அனுபவமின்மையைக் காட்டியதாக நினைத்தேன். அவள் சட்டென்று அதைக் கேட்க விரும்பாதவளைப் போல இரண்டு கைகாளாலும் அவள் காதுகளை மூடிக்கொள்ள முயற்சித்தது நினைவில் வந்தது. அவளை வெட்கம் தின்று கொண்டிருந்த நேரத்தில் கேட்பதற்கு இதைவிடவும் மோசமான கேள்வியொன்று இருந்திருக்காது என்று நினைத்தேன். சட்டென்று தாவி எழுந்து என்னை இழுத்து அவளோட அணைத்து அதைச் சமாளித்திருந்தாள்.

"என்ன அதுக்குள்ளையே கனவா?" என் தலையைக் கோதியபடி கேட்டவளிடம்,

"இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை நேரில் பார்க்கலைன்னா கூட பரவாயில்லை, இந்த நினைவுகளோடு சமாளிச்சிறுவேன்."

ஒரு அடி பின்னகர்ந்தவள், கைகளை இடுப்பில் வைத்தபடி, "அப்ப நான் வேணாமா?" கேட்க, இதற்கு என்ன பதில் சொன்னாலும் ஆபத்து என்று பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு,

"என்ன விட்டுடு தாயி!" என்றேன்.

நாங்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்து உட்கார்ந்ததும் தான் தாமதம், அகிலாவின் மொபைல் சிணிங்கியது. நம்பரைப் பார்த்தவள், வெட்கப்பட்டு சிரித்து,

"தாஸ் அவதான் போன் பண்ணுறா, அவளுக்கு எல்லாம் தெரியும் நான் இப்ப அவகிட்ட பேசினா அவ்வளவுதான். நீங்க வெளியில் போயிருக்கான்னு சொல்லி வைச்சிடுங்க." சொல்லி என்னிடம் திணித்தாள்.

நான் "ஹலோ!" என்று சொல்ல,

மறுபுறம் ஜெயஸ்ரீ, "நான் நினைச்சேன் நீங்கதான் போனை எடுப்பீங்கன்னு குடுங்க அந்த கழுதைகிட்ட."

நான் தீவிரமாய், "அவள் இங்க இல்லை ஜெயா" என்று மழுப்ப ஏண்டா அப்படிச் செய்தோம் என்று ஆகியது.

"சின்னப் பொண்ணு ஒன்னை ஊட்டிக்கு தனியா கூட்டிக்கிட்டு போய்ட்டு இப்ப அங்க இல்லைன்னு வேற சொல்றீங்களா? அவளை ஏமாத்தி எல்லாம் முடிச்சாச்சா?" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் இல்லை.

வேதனையுடன் அகிலாவிடம் போனைத் தந்தேன். அவள் நேரடியாய் "ஏண்டி பாவம் அவனை வம்பிழுக்கிற, பச்சை புள்ள மூஞ்சி எப்படிச் சுண்டிப் போச்சு பாரு" என்று ஆரம்பித்தாள்.

"ஆமாம்!" "ஒரு தடவை தான்" "ம்ம்ம்" "ம்ம்ம்னு சொல்றேன்ல" "தாஸ்கிட்டையே கேளேன்" என்று சொல்லி மீண்டும் என் கையில் திணித்தாள். நான் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தேன்.

"இங்கப் பாருங்க, அவளை சரி செஞ்சி இதெல்லாம் உலகமகா தப்பில்லைன்னு சொல்லி உங்கக்கூட ஊட்டிக்கு அனுப்பி வைச்சதே நான் தான். கழட்டி விடணும்னு நினைச்சீங்க அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. பூனை இனிமேல் சும்மாயிருக்காது பண்டத்தை கண்காணிக்க என்னால் முடியாது, மரியாதையா பெங்களூர் வந்ததும் உங்க வீட்டில் பேசுறீங்க. என்ன?"

நான் வெறுமனே "ம்ம்ம்." என்றேன்.

"இந்தக் குரங்கு மூஞ்சியைப் பார்க்க நான் அங்க இல்லாமப் போய்ட்டேனே!" அவள் சொன்னதும் தாமதம்.

"நான் தான் உங்க அக்காகிட்ட உன்னையும் கூட்டிக் கிட்டு வான்னு சொன்னேனே! அவதான் என்னமோ உங்க ரெண்டு பேத்தையும் வைச்சிக்கிட்டு நான் த்ரீஸம் பண்ணப்போறேன்னு பயந்து கூட்டிக்கிட்டு வரலை!" உளறிக்கொட்டியிருந்தேன்.

அகிலா நான் இந்த முனையில் சொன்னதைக் கேட்டு என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், நான் சொன்னது எனக்கு விளங்கியதும் எனக்கு நானே தலையில் அடித்துக் கொண்டேன்.

ஜெயஸ்ரீ, "அக்காகிட்ட போனைக் கொடுங்க..." நான் அகிலாவிடம் கொடுத்தேன்.

இவள் போனை வாங்கியதில் இருந்து கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள், எனக்குப் புரியவேயில்லை. நான் மௌன மொழியில் தோப்புக் கரணம் போட்டுக் காட்டினேன். அகிலா கண்டுகொள்ளவில்லை, சிறிது நேரத்தில் போனை அணைத்தவள். நான் அப்படி ஒன்று சொன்னதாய்க் காட்டிக் கொள்ளவேயில்லை.

"சாரி ஏதோ உளறிட்டேன்!" மன்னிப்பு கேட்கும் தொணியில் சொன்னேன்.

அவள் சப்தமாய் சிரித்தபடி, "இதோட ஜெயஸ்ரீ மேல இருக்கிற ஆசையை விட்டுடுங்க" என்று சொல்ல நான் உண்மையிலேயே வேதனையில் நொந்து போயிருந்தேன்.

"அகிம்மா சாரி I didn't mean it. மன்னிச்சிக்கோம்மா" சொல்ல அவள்,

"ச்ச தாஸ், என்னைய விட ஜெயஸ்ரீக்குத்தான் உங்க மேல மதிப்பு அதிகம். நான் இன்னிக்கு உங்கக்கூட இருக்கேன்னா அதுக்கு 90% காரணம் அவதான். என்னை விட அவதான் உங்களை நம்புறா! இதைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்க மாட்டான்னு கூட சொன்னா. உங்களை அவ தப்பா நினைக்க மாட்டா! நானும் நினைக்கலை கவலைப்படாதீங்க."

போன உயிர் திரும்ப வந்தது.

இது காதலாய் யாசிக்கிறேன்னின் தொடர்ச்சி.

காதலாய் யாசிக்கிறேன்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்

சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறி விழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம், எல்லா சமயங்களிலும் மனதிற்கு சுயத்தை இழக்கும் சக்தி வந்துவிடுவதில்லை அதிலும் விழப்போகும் வார்த்தை தோல்வியை மட்டுமே கொடுக்கும் என்று நிச்சயமாய்த் தெரிந்த பின்னரும் கட்டவிழுத்துவிட மனதிற்கு முடிவதில்லை. எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வெளிப்படுவதால் தான் விழுந்துவிட்ட அந்த வார்த்தை எதிராளியை சீண்டி துன்புறுத்துகிறது என்று நினைத்தேன். விழுவதற்குத்தான் நேரம் காலம் அமைய வேண்டியிருக்கிறதே தவிர உருவாவதற்கு இல்லை, சட்டென்று உருவாகும் எண்ணம் வெகு சுலபமாய் தனக்கான வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு மனதில் கருக்கொள்கிறது பின்னர் காலம் வார்த்தைகளின் வெவ்வேறான சேர்க்கைகளில் கூடி உச்சமடைந்து தனக்கான சொற்றொடரை உருவாக்கிவிட்டு அமைதியாகிவிடுகிறது, மனம் வார்த்தைகளைக் கட்டியிருக்கும் கயிற்றை மெல்லியதாய் அவிழ்க்க ஒற்றை வார்த்தையிலோ, வார்த்தைச் சேர்க்கையிலோ உருவான எண்ணத்தை கொட்டிக் கவிழ்த்துவிட்டு அடங்கிப் போய்விடுகிறது.

"உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?"

உரையாடல்கள், காதலின் உன்னதமான போதை. காதலிக்கத் தொடங்கிய பின் மனம் உரையாடல்களாகத் தான் சிந்திக்கத் தொடங்குகிறது. நடந்து முடிந்ததாய், கொண்டிருப்பதாய், போவதாய் உரையாடல்களின் நிஜம், நிகழ், கனவிலேயே காதல் தன்னை வளர்த்துக் கொள்கிறது. நேற்றைய உரையாடல்களின் மீது படுத்துக் கொண்டு நாளைய உரையாடல்களைக் கற்பனை செய்கிறது மனம், தொடர்ச்சியாய் கற்பனையில் உருப்போட்டுக் கொண்டேயிருப்பதால் உரையாடல்களில் புதிதான விஷயம் உண்மையில் நடப்பதில்லை. நேரடியான கருத்தாய் இல்லாமல் தான் உருவாக்க நினைக்கும், விவாதிக்க நினைக்கும் விஷயத்தை உரையாடலில் செம்புலப்பெயல்நீராய் கலக்கிறது மனம். அகிலாவுடனான உரையாடலில் அந்தக் கேள்வி வரவேண்டும் வரும் என்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளுடனும் சென்றாலும், கேள்வி, உண்மையின் வீரியத்தில் நடிப்பின் சாகத்தை நகர்த்திப் பார்க்கிறது.

"ஆமாம்"

------------------------------------------------------------------------------

March 1, 2008

2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: ம்ஹூம் வேண்டாம்
me: ஏன்?
2:36 PM ஏன்னு கேட்டேன்?
2:45 PM உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு
இல்லையா?
aeswari: உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye

காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja: நான் அகிலம்
4:13 PM me: சொல்லு
raja: call me
me: சரி

“சொல்லு என்ன விஷயம்”
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்”
“ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்”
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது “சரி” தொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me: சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: அப்படியா?
aeswari: illaiyaa
me: மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம்
- உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: வரவா?
aeswari: hmm
4.30 PM me: கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ‘ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை.

“முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது”

எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

“கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்”
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

“அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”

எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

“இல்லை”

“அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது”

இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

“நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

“நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

“சாரி!”

“அது பரவாயில்லை சொல்லு...?”

“ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்”

“எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.”

என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது.

“எதுக்கு?”

“உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?

சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008 மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

“என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

“ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

“எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் ‘மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”

ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

“என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.

“என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?”

“அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.”

“ஆமாவா இல்லையா சொல்லு?”

“இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

“உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

“ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.

------------------------------------------------------------------------------

இந்தப் பதிலை நான் சொல்லியிருப்பதற்கான காரணங்கள் உண்மையில் கண்டுபிடிக்கப்பட முடியாததாய் இருந்தது. ஆயிரம் முறை அரங்கேற்றிப் பார்த்த வார்த்தைகள் காணாமல் போயிருந்த சமயம் எங்கிருந்தோ இந்த வார்த்தை அதன் உண்மைக்கான உறுதியில் கட்டவிழ்க்கப்பட்ட குதிரையாய் தடைகளைத்தாண்டி கடைசியில் வென்று நின்ற பொழுது விழுந்த அந்தச் சொல் தரும் அர்த்தம் விளங்கிக் கொள்ள முடிந்தது. வெறும் உண்மை ஒப்பனையில்லாத நடிகையைப் போல நம்பமுடியாததாயும் ஒப்புக்கொள்ள முடியாததாயும் இருக்கும். மேலே இரண்டு வார்த்தைகள் கீழே இரண்டு வார்த்தைகள் நடுவில் கொஞ்சம் பொய் கலந்து வந்திருந்தால் அந்த 'ஆமாம்' எனக்கு நல்லதொரு பொழுதை பரிசளித்திருக்களாம். ஆனால் மொட்டையாக வந்து குதித்த உண்மை, அதற்கான வீர்யத்துடன் வெளிப்பட்டு அகிலாவை சட்டென்று சீண்டியிருந்தது. வார்த்தையின் அர்த்தத்தை விடவும் அது சொல்லப்பட்டுவிட்டது தான் அகிலாவிற்கு கோபத்தை வரவழைத்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். மூன்று வருட பழக்கத்தில் முகமூடிகளுக்கான தேவை அருகியிருந்தாலும் வார்த்தைகளுக்கான முகமூடி நிராகரிக்க முடியாததாய் இருந்தது.அவளுக்கும் அது ஆச்சர்யமானதாகத்தான் இருந்திருக்க முடியும் எல்லைகளுக்குள்ளான வார்த்தைச் சீண்டல்களை நான் புறக்கணித்தது, கணித் திரையில் காண்பதற்கும் நேரில் கேட்பதற்குமான வித்தியாசம் தான் என் மீது ஜூஸாகக் கவிழ்ந்திருந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.

உரையாடலின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்காத பொழுது கிடைக்கும் தருணம் அவகாசம் மற்றதில் இல்லையாகையால் அவளால் முடிந்த எதிர்ப்பு.

அவள் நகர்ந்து சென்ற நிமிடத்தில் என்னைச் சுற்றி நின்றவர்கள் பார்த்தப் பார்வையில் நான் மிதக்கத் தொடங்கினேன், காதல் எப்பொழுதும் தரையிறங்க அனுமதிப்பதில்லை என்றாலும் எங்களுடையது இன்னமும் காதலாக பரிணாமம் அடையாமல் குரங்கிலேயே நின்று கொண்டிருந்தது. பொது இடங்களில் தனக்காய் கட்டமைத்துக் கொண்ட எல்லைகளுடன் அவள், தனி இடங்களில் எங்கள் சந்திப்பு நடந்ததேயில்லை, அவளுக்காய் இல்லாவிட்டாலும் என் கொள்கைகளுக்காய் அவள் கட்டமைத்துக் கொண்டிருந்த எல்லைக்கு வெளியில் இருந்தே சண்டை செய்து வந்த நான். என் சீண்டல்கள் இணையத்தில் எல்லை மீறத் தொடங்கியிருந்ததும் அப்பொழுது தான், சுவருடன் பேசவும் உரையாடவும் கிண்டல் செய்யவும் எல்லை மீறவும் நான் இன்னமும் கற்றுக் கொள்ளாததால் ஒரு பக்கம் மட்டும் வேகமாக வீசி வீசி சோர்வடைந்த பொழுதுகளில் இது நிச்சயமாய் வேறானது. சுவரொன்று ஆப்பிள் ஜூஸை தலையில் கவிழ்ப்பது, உணர்ச்சிகளற்ற சுவரு என்பது கூட தவறான உவமை தான், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரிந்த சுவர். தன் சுவற்றில் இருந்து வெளிப்பட்டு அவள் சுயம் எட்டிப்பார்த்த பொழுது அது, என் வெற்றியைக் கொண்டாட இன்னொரு ஆப்பிள் ஜூஸ் கேட்க தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான் ஹோட்டல் சிப்பந்திக்கு என் சந்தோஷம் புரிந்திருக்க நியாயமில்லை தான்.

நாங்கள் ஒரே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து ஏற்பட்ட பழக்கம் காதலாகி நான் காதல் சொல்ல ஏற்கவும் மறுக்கவும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த முதல் வருடத்திலேயே அவளைப் பற்றிய என் புரிதல்களுக்கு கை கால் முளைக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான அவள் பதில் அறிவு சம்மந்தப்பட்டதாக இல்லாமல் மனது சம்மந்தப்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவள் என்னை ஏமாற்றவில்லை. தான் செய்யப்போவது என்னவென்று அவள் அறிந்திருந்தாள் நிச்சயம் அதைச் செய்திருக்க மாட்டாள் தான், கோபத்தை வெளிப்படுத்துவது தோல்விக்குச் சமானம் தான் எப்பொழுதுமே! அவளுக்கும் அது தெரிந்துதானிருந்தது. அந்தச் சீண்டலை அவள் கண்டு கொள்ளாமல் போயிருந்தால் நான் தோற்றுத்தான் போயிருப்பேன், பெரும்பாலும் அது அப்படித்தான் நடக்கும். அன்று அவளை வென்று விட்டதாக நான் நினைத்ததற்கும் அதுதான் காரணம். இன்னமுமே கூட அவள் என் மீது ஆப்பிள் ஜூஸ் ஊற்றியது எனக்கு உதவும் என்றே நினைத்தேன்.

அன்றிரவு அவளிடம் இருந்து செல்லிடைபேசியில் அழைப்பு வந்தது, நான் காலையில் இருந்து அதை அணைத்து வைத்திருந்தது அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.

"ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்."

நான் பதில் சொல்லவில்லை.

------------------------------------------------------------------------------

"சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?"

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

"ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?"

"உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?"

"இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை".

"ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?"

நான் மௌனமாயிருந்தேன்.

"பதில் சொல்லுங்க சார்." கத்தினாள் மறுமுனையில்

"ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்."

கேட்டவள் சிரித்தாள்.

"ஏண்டி சிரிக்கிற!"

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு "உங்கக்கிட்ட 'ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்'ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி."

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே "ம்ம்ம்" என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

"என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி..."

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

"...ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்."

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.

------------------------------------------------------------------------------

அன்புள்ள அகிலாவிற்கு,

நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.

காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே அதற்காக வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!

அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் 'வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ' அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.

வருகிறேன்

காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்

கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்

"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்

இப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன்.

இதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க, அதுமட்டுமில்லாம எனக்குத் தெரியும் தெரிந்த அரசியல் அவ்வளவு ஈசியா உங்களுக்கு சொல்லிடுவேனா. Encrypt பண்ணியிருக்கேன்.


இதை Decrypt செய்து படிச்சிக்கலாம். தமிழ் பதிவுலகில் முதன் முதல் Encrypted பதிவு போட்ட பெருமையும் இப்ப என்னையே சேரும் ;).

077EovggtNUg0vK+uPUgv8HszCCx9MDK7CC4oqi87LiiyNA7ILH9ySCryKLTuPLQvP0guKKovOy4
osjQILH9uKLIIMWihML1ILH9qMn0IKbAodryvsWowyDNxaHDuqLCwaHJ0C4g/sOhINPVuMmi/SD+
8770INLyvrj1INy8IKv0wMryvqH9LiC/of0g/qi9wiCvxLii+CDAw8XEobggv7zBobzyIKa+obzt
zMW+/Mwg0/2nwCD+8770INLyvrjyqL70IMD8yKLCIKbAwsPHxaLEockgq8ii07j1ILiiqLzyvqLV
877QLiCr0CC01SDNxaHDuqLCwaHJ7CC4qL4gsf3AvqH4IKuoviDT/afJIKa6ofjEosWizriip8j9
Lg0KDQqxyezMIKa4oe+69SDgw/LQIKa6ofO+waH2ILTVIL6h8r6hLCC4oajD7LihqMTuIKe69/O+
xfcgq8XDorz1IP79ydP1IP7V7Mz1INLyvrj1IMDK7Mz1IKz3xfUgsf2oySDFosL0wKL4IKz68tD1
LiBEaWN0aW9uYXJ5IG9mIENvbnRlbXBvcmFyeSBFbmdsaXNoILH9yCDS8r648qi+8iCnvsogq8X3
IKa8+MSiwqL9INLyvrgguvPQuKjH8iDQqMfypr7O8r7QIP79ydP1IL+iqMnFovgg/tXsuKLI0C4g
q6e+p8Ch+CC6waPA8r6i+CCmxceiwqHJILqixCDQ9MCh7LiiuKjH9CDA/MiiwiDS8r648qi+1PUg
q8X3IKe+yiDFoe24ouwgprih8c4gp8ChyaH3LiCr9MDKIKvF1ezMILHtp7inwqEgscXDoafEoSCm
uqH4xPTA8Lwg0vK+uPUgvqH9IKvD3fcgxfW69S4NCg0Kv6H9IP6ovvQgwPzIoiD+w6Eu09W42+zM
ILTVIKbB9vggq9v0wKLCvqG4IL+iqMnXLijTvsSi+CC+xdq+xKG4IKvzviDFooTC8qi+IP7DocEu
uKIu7MwgwKL96/C8waG4IKvb9MCip8n9IDspKSCxyezM8iCmvsOi89AgvqLV7LiovOT3LCC+ovio
xMKhyiDA7LjyvqL4ILTVIKvD3fcgr/HOLiCmuKHvuvUgp8Ch+CC4oajD7Lih+CDA7Lj1IMXV9Swg
077EovggvqHyvqEgq/O+ILCow/QgwPzIovK+of0guKi+ILHYvvTA8MrV7Lggp8XxzvUgsf3aIKa6
ofjEovK+of0gq8X3IP7zvvQg0vK+uPKovvIgp77KyaH3LiCypsn9yKH4IKvzviCrw92ow/QgwPzI
oiCx2L6iwqLV876h+CC+/ajJ9CDA/MiiKKv4xNAgq8X3uNmovMIgzM71wPKovvQgwPzIoikgv6Lu
usLBofYgsdi+9MDwytXszPUgsf3aIKa6ofjEovK+of0gp77KyaH3Lg0KDQqrxdWovMIgp77Ovtbs
zCC4oqi87LihviCrx8Wi/MzyvqH9IKvzvu4gusHC8r6i+CCrw933IMX1uvUg/tXzvtAuIL+h2/Ug
JiMxMzQ7ouy4ov0gwKHyvvWFovggp77KwqLV7Liip8j9ILqixCC6wcL1OyCsyaH4IKu49MC8xaL4
qMQuIP70wMrCobjsILiiqLzyviCryKLTuPUguqLIotAgv6HHovggwcjz0CCnwKG4LCDAosO4oYkg
sqe+oSC01SD+vPK+ovggr8S4IKvHxaL4ILHYvvTA8LwgwaK47rqiyPO+IL+hxfggsf2nyKEg/vio
xCCrqL70IKfAof3IILT9qMinwqEgprqh+MQgq+24otXz0L6h/SC4osf1wKLC0CCrw933IMX1uvUg
/sPxvKHF0CCnvrz4LiCsyaH4IMGiuO66w6LCobgg3Mz7IOPEwaG4IL+h/SC+ovGovSCnv6HsuKIg
xfPQIKe69/Onvv0uIL6i8ai9wqL4IMGi/cmivsahuCC4qL7Cov0gwKG+oiDFqMMg08ryvqLV86e+
/SwgrMmh1vUgsf3Jp8WhILT92iDMqMjF0CCnwKHEp8XCotXzvr6h+CDS8r64waG4p8UgxaHtuKLC
qL70IMD8yKIg0/2nwCCmuqH4xKLCotXzp779Lg0KDQq/ocWoxPQgwPzIoiCx/duovMIgxaLB97rJ
8qi+ILHtuKLV89AgrMP1wKL0wNAgsf3AqL70IMD8yKIgp8KhuqLy0Owgprih8crV86e+/S4g/sPx
ziDj/dog06jIIL6i1fXA8r6i1fXAINLD8Mog/qi+ILHY0Liip8j9Lg0KDQoiv6MgrMmh1vUg0vK+
orqhxKLyINDV7LjxvKEguNXyvqEuDQoNCqv0wCwguqHQIL+hwuy4yaH0IMCh8tAgrPsgq8H38r6i
7LjwvKE/Ig0KDQr+874gxbrJ9SC/ocXEov0gsqe+oSC01SDA7LjyvqL4IMXVxdAoMjgwIMDsuPUg
p8XxzsGhyaH4KS4gscnszPIgpr7DosLFovioxCD+vv0gwKL9yaH4IP7V7Mz1ICKrw7qiwvgiILHy
vqjJIKfA1ezMIM3EwMGhuPQg0sOi1PUgsf3aLiCrw7qiwvggsf3aIMzIovTAovC80CCrvv0gwKL9
yfcg/tXszPUgxaKEwvKovvQgwPzIoiDMyKL0wKK8p8UuDQoNCrHtuPsgxaPwyqbE+MSh9SC01SDA
xqbBocaiIKvK7LjKIKa6ofjEouwgprih8crV9MCh97j7LiCx/cmmxf3IofggItPwvKHyINDW7Ljb
9SDTw/DOIL+hwuy42/Ugp7r3876hIKfFqMTsuKG4odAiILH9wNC+of0uIMWj8Mr4IKvK7LjKILrx
qLwgv7zszPUgq9Ag0/C8oSDQ1uy4yaEsINPwvKEgv6HC7LjJoSCx/cCovvQgwPzIoi4gq8X3IKa6
ofjEosKi1ezM9SCr874gp8H83MOiwiDFusnyvqLW9SDcvCD+874gwMamwaHGoqjCIKvK9MCovMKh
uCCoxfKnviCx2L6iwqLV7LiiyKH3LiCx7bj7IMDsuPKovu4gp7r3874gwMamwaHGoiCx/cC+odb1
IKvK7LjKLCAise24IMWj8Lyh2bgorPXAqMcpIMqFooT9IKfB7Lii7bii+CC+xdogprr21PUgpsCh
2Ka++MSh9SIsILH0wMqmwv3IofggwMamwaHGoiDBofzI9MDwzjsg0/C8oSC/ocLsuMmhuNf1LCDT
w/DOINDW7LjJobjX9S4NCg0Kv6H9ILL9IP6oviCmuqH4xCDF1biip8j9ILH9yKH4IP7zviDAxqbB
ocaiqML0IMD8yKLyIKa+w6LCob4gtNXF9yC/ocWoxPQgwMrszPUgpsCh2NAg/vO+IP7D8c4gxcOi
uKjHILi889Agp8Ch9sWizsXQILHHotA7IKu+ocXQIMWihML1INLDosKhwfguIP70wMogv6KoyMIg
xaKEwu24qMcg0fG9ovTAobgguMXJovLQIP7zviC/ocWoxCCx2L6iwqLV7LiiyKH3IP7DoS7T1bj9
LiD+874gv6HFqMT0IMDK8r7XvKfJp8Igw6L55CCnwKH9yCC0/ajIILHYvqLForynxfHO9SCx/dog
v6KoyfK+otXzp779LiCsyaH4IKv0wMr0wPC8ILT9qMggsdjQxb78zCDT/dIgq6i+IP792/Ug/v3b
9SDBo/vFobqi9NIgprr2wvTAvKfF8crCILjwvKHC8r6i/MwgrMehp8n9Lg0KDQq/ocXEov0gr6jD
wqG8+CCmwaHGoiD+vPK+ovzMIP689SDBodrAzsXQ9SCr874gpsGhxqLCovggwKHxyvK+osL1IKbA
/MggtNXF9yCx2NDF0CCnwKH9yCC/qLzCovggq/O+9CDAobj1IP7V9MDQ9SDAyuy49KfAofYg/vO+
IKzHofggsfTAyiDj/dogxaLyvqLCobrBockgr6jDwqG8+CCmwaHGorjHovggp7737rqiIKbA/Nog
/tXzvqLV7Lgg08rU9SCx/cggxaLC9KfAILHYuKLI0C4gvsGi+r+h8M4gwKLDocG99yDAoaiELCCn
uMPHoajFIKjBwsGhuOwgprih8bwgwKLDocG997jHov0gwKGohDsgwKLIzCCr877sILihxCCDwaP9
uMei/SDAoaiEIKi4xfO+otXsuKLI0CDEocW4waH2LiDj/dogxaLyvqLCobrBof3JILiovriox9T1
ILiovuy4x/24qMfU9SDAofK+osPtuKjH1PUgq8X3IL7JovK+yaKnwiCx2L6iwqLV9MC+/LihySDF
ofb00iD+1fO+odanwSDFosL0p8AgwaLvuqLCotXsuKLI0C4NCg0KwKLIzCC/ocXEov0gq8r0wKi8
IL+hvsGhuCD+1ezM9SCnwYOi7Lj4IMOiwsSihfU7IMOhg6HXvP0og8Gj/b6h9ykgq8XVqLzCIP7I
89Agp8ChySDT/afJofe4+yCnwM3F0Cwg4/3aIL6oxNOoyOzMINP9yfcg/sjz0CCnwKHJILTVIKbA
8c+8/SC/orj6uKHE8r6i+CD+1ezM9SC01cX9INzOxdAg/vTAyiCvvqHDvfK+ovy4obgg/sPxziCm
uqH4uKKnyP0uIL+hxfggwKL9yfTA8MrV7Mz1ILiovsKi+CDBofO+w6O4IMK+offyvvUgvqH9IMGi
uNPsuKLCwaHJIMWihML1Lg0KDQqx7bj7IMWj8Mr4ILH9qMkgxcf38r4gsf0gq/TAocWi/SCr9cGh
IP7V876h97j7LiC/oe24+yCx7bj7IMChqITCovggIsCh7rr1waEiILH92r6h/SCrqMb0p8Ch9S4g
scnszCCrvvy4ockgq/fyvvUgq/nFx9cgseyFoezwvKEgpr7DosKhxaLwvKHW9SC01SDFqLjCovgg
wKHwyiCx/dogvqH9IMXV9S4gq/XBoSC6ov3JIMXCvqL4ILH9qMkgwKHwysKivPUgxaLwzsWi8M4g
y+669yDKqMPJou0gwMrsuPQgp8Ch9sWi8Ly+ofggsf2oySDFx/fyvtAgsfjEoafBIMCh8MogvqH9
ILH92iC/of0gp7j7xaL0wPDK1ey4oqfI/S4gq8X3ILHJ7Ka4+MSh9SCmw6H1wNf1INPzqL7CIKaD
yafDhP0gsf3AvqH4IKvzvuwguKHEIMXG7Lj0wMogrPEgwKL7qMfszPIgvqH9IKu+orgguvSnwKH3
8CC4oqi87Mz1OyCrxdWovMIgprr4xPUgv6H9LiCxyezM8iCmvsOi86e+IMWj8Mr4IL+87Mz1IMCi
w+66qMm42ezMILH9ILr0p8Ch9/C8obggxdX1IKz7KLSnwykgq8X3vqH9LiCr877sILihxPK+osSi
1fPQIKv1waEgq/TAoSD+1cXV9SCr7LihILr0p8Ch9/AuDQoNCqvF1ezMILiovLqiILihxO24x6L4
IMHJv6KoxCCmuKHvuvUgvs7BociiwqLV877QLiCrxdWovMIguKi8uqIg/sPxziDj/dogrPHOuPsg
q8XVvP0g/tXzvsX9ILH9yCDTqMjCovggv6KoyMIgxaKEwu24qMcgp7/DovggwKH38r6i1ey4oqfI
/S4gq76hxdAgq8X3IL7926i8wiC4ocTy0CDB7LjHorz1KKuoycXV9SD+yPO+xfe4+ykgp8C6ouym
uKHxytX0wNA7ILH0wMogsf3Jorz1IKv0wKEgq/XBocWivPUgp8DNxaGnw6Egq/TAyi4gr/3JovTA
objsILjFyaLyvqH4IKvFqMMgzfzIotb1IKzwuPsgr/C4offz0CCmuKHxp7yhIP74qMQgv6L92iCm
uKHxp7yhLCDNxfzIovgguqH289Agprih8ae8oSCnwM3FqL70IKfAocQgtPmmxaHVIMDsuNP1IL6i
1fXAoiCr877zviC/wPe4x6L9IKbAwve4qMfuIKa6ofjEovQgp8C6ouymuKHxytX0wKH3Lg0KDQqx
/cmh+CC4qL7UvP0gtP3IoiDAyuy4INPK876+/Mwg/tDX9SC01SC4ocO9waG4wqLV7Lgg08rU9S4g
p8XxzsGhyaH4ILHtuPsgzM71wCDAov3JvaIgsckgtNXFodoguKi+ILH9ILjx0/2nySC/vPTAqL70
IKfAof3IIMCi9cD1IK/VxaHJ0CCx/afIIKa6ofjExKH1LiDB876iw/UgqMX0wNAsIKuoviCxvqL3
7LggvrjOIKjF9MDQLCC6ofTAofDK+CDB1fPQIKfAoc7F0CwgzM71wPK+ovynuCDdyaLC9SCoxfTA
0CCnwKH9yCAiprz39SK4+yCx7bj7IMWj8Mr4ILr3xSC6ob6hw73Bobgg0sTtzPUgxaKEwu24+yC+
of0uIP6+/SC4ocO9waG4ILH9yaH4IP7zvuwguKi+qML0IMD8yKLCIKe4+8WiuKjHIMWivNf1ILT9
yPK+of0gzcTAwaG4INPK877QLg0KDQr+9KbAodimvvjEofUgtNUg0vK+uPUgwMryvqH4IKuovvQg
wPzIosIgxaLB97rJ8qi+ILH0wMogxaLyvqLCobrBobgosf3JIKa4oe+69SAiQSLyvsnBobgsIM3y
vqLuIM3yvqIsIKa4oe+69SDNwvKovu4gprqhyKLz0CCmuKHxzikgsdi+INPK1PUgsf3aIL6h/SCn
wqG6ouy4oqfI/Sg7LSkpLiCsyaH4IP7zvuwguKi+wqL4IKv0wMogsdi+INPKwqG+IKvHxaL8zCDF
ooTC9Tsgsf3JpsX9yKH4IP7zviC/ocX4INPYxdCnwSC4qL7UvP0gwKL9yaL0wKKovfPQIP7V9MDQ
IKu8+IogtP3EoiC48aa88fAgvqH9LiC4qL6owtT1IP7zviDFooTC8qi+1PUgvsmi8r7JoqfCIMCi
w6Lyvsiixaa+/cDQIKbDofXA7CC4ysnBockgxaKEwvUuKP7Q1/Ugv6H9IP7zviC/ocWoxCDAyuy4
ILTVILihw731ILH92iC/of0gprqh+MTFovioxCA6KSkuDQoNCriovqbC/cggtP3aIKbAw6K+objs
ILiiqLzCoaa+/cih1vUgv6HFqMQgv7j38r6i7CCmuKHxziCnwKHFvvy4ockguKi+IL+i7rrCwaH2
IL+hxcSi+CCv8c4uIL+hxcSi+CD+1fPQIMCiyvK+IMXDorioxyDAosry0PQgp8Ch8M4gq9Agprqh
+Nb1IMWihMLtuKjHIMWix+y4ILHJ7Mz1IMWi1fTA9SC+of0uIKzJofgg/vO+IL+hxcSi+CDF1fUg
scnszPQgwKLK8r4gxcOiuKjHp8KhIMWh7Liiwu24qMenwqEgsc7y0PQgp8ChvCC/of0gv6KoyfK+
ofggq9AgxfXAobiixaLO9SCx9MDKpsL9yKH4IKv00sj1IL6i8ai9IKzwuNn1IP7DoS7T1bjb9SCv
qL7suMXVxaH3uPsgsf3AvqH4IKv0wMqnwiDFovDOxaLOuKKnyP0uIKzJofggseyFofXS+7ihuCD+
w/HOIMWihMLtuPsuDQoNCiLMx6LszPUgpsCh8c64qMf0IMCh9+y4xKGnwaENCszJovPQIMCh9+y4
xKGnwaENCsChvqIgwajI874gir7J0/UNCsCh7bih9iD+zvTAovggtPDKwqG90/UNCsWhqMbyIKa+
oai81PUNCsXKxaHJIKe+odnBofbsDQrMx6LszPUgpsCh8c64qMf0IMCh9+y4xKGnwaENCszJovPQ
IMCh9+y4xKGnwaEiDQoNCiLTyaLFycX9IKbA8byh8MoNCtPK780gxe66INzzvsSip8QNCqa6+MTB
ofIgvqjE9KfAyaENCrj7x/Qg0tW6qMnU9Q0KtMei7qa6zvLQIMXz0A0KtcPBofIgvqjExaLDou66
oQ0KuO7NIKu4/Mii9CDAxvUgp8ChxA0KuMmi780gpr6h7cz1IL7JwaLD8c71Ig0KDQr+qMWmwvjE
ofUgv6HFxKL9IP6ovMKi+CDF1fUguqLEIMChvPggxcOiuPsuILqixCDAvO24qMf0IMCh9/LQxaLw
ziD+8770IMC88qi+ILH0wMogsc7yvqLV7Lgg08rU9SCx/cggxaLC9NIgsvzAzvUuIKuovvQgp8Ch
xCD+877sILiovqjCILH0wMogsdi+osKi1ey4INPK1PUgsf3IIMWiwvTS8r6h/SCnwabE2cWoviC+
xaL37Lgg08rCxaL4qMQuILH4xKH1ILj8wKjJwqG4IP74xKHB+CwgsfjEofUgv6KDwaG41/Ug/vjE
ocH4ILTVILH0wMogsdi+osKi1ey4INPK1PUgsf3aIL+hxcSi/SD+w/HOIMDsuO24qMcgwMrszPUg
psCh2NAgxaLC9MDHovTAvqG4IP7V7LiiyNAuDQoNCiK4ocT1LCD+w6HB26i8wiCr9dIgq/jELiC+
otX1wKIgxfPQIKv1wKHIofLgvaLCovgg4O3M9SDAxuy49SCrvvzM7CC4oqi8wqHQLiC1wqHQINP9
p8kgprr92iCmuKHxytXszPUgq6i+8iC+zuy4p8WhIKv4xNAgp8W48r6ovCCmuvbCp8WhIMHJor7J
ofgg/v3b9SDTysLFovioxC4NCg0K/sTsuKLC8r6ixKHF0CC4ocTyqL4gv6La8r6iLCC+8MosILTO
7LiiINP92/UgwKL92/Ugtbzuprr2wiwguKHE9SC4ocTBobj0IMCovMChx6K4+yDTwv3aIMXzvqLV
7LiiyKH3uPsgJ6vD3fcgxfW69Scgv6HF1vUgq/TAyiC01SDTwvy6oqfCIiCx/cggwKIusiC4otWJ
vcmi/SDT/duowyDFw6K4+yC+of0gwcm+ovggtc64osjQILiovuy4ockgxaLB97rJ9SCx2L6nxfHO
9SCx/dogr/C4odX1IKbAodjQLiC4ocTyqL4gv6La8r6iLCC+8M4sILTO7LiiINP92/UgwKL928Gh
uCCx2L6iwqLV7Mz1IP7DoS7T1bjJov0gsdjy0Oy4p8ehziCnuvfz0CC/odP1IMDCvaLsuKKnyKH1
Lg0KDQqDwaPzvqH3IK/0qMAgvv0gwcrCovgguPDK7Ka4ofvZ9SCmwKHY0CC/ofUgwOy48r6i+CD+
1fPQIMCh9+y4oqfIofUuIM30wPXBoSC4osbFoiAiq7z4iiC0/cSiIiDAofDOIMChzvUgpsCh2NAg
rMP1wPK+ovggp7jwuPIgpr6hvO24oiDAov3J9yC4oai+IKbAofK+ouwgprih+7iip8ih9S4guqHB
or+hvtv1IMXNwb6i1PUgq6jI7Mz7p8cgIqfB8Lz3IiCmuvbU9SCmwKHY0CC4vsXVuKL4IL+i/dog
wKH37Liip8ih9SDAov3J9yC6ocGiv6G+p8mhziDFo84gscOi5PC89MDwvND1IKbF7Ki4wqL4IL+i
/LjTysKhwfggIrOnwqEgwKHF9SIgsf3aIKvEyKLCyvLQIKbFx6Knwtq4oqfIofUuICKv/SDAw/XA
qMOnwiC4osiiir6iwqHJosKhuPQgp8ChyNAiILH92iC4ovC8ocX2wqjJ9CDAoffy0CCowMOhuKIg
prqh+Nb1IKbAodjQIMHJ9SDAvtq4osjQLg0KDQoirMGhIKv00iwgsf3J8tDszCDF9dIuIMWh9u66
vvQgwPK+oiDF7LiovcKh8iCmvsOi1PUuIP70wPQgwKH38r6nvqG8IMXuzSCrx/O+oSwgzfHOIMWi
w/ggvvHKILrBoe66ocP1ILH4xKH1IKvQ+MQgp7ryvqLCoSwgq7zuIKe6/dsgpsXa8tD0IKfAocKi
zvUg/vjELiIgsf3aILTVILiixsWiLCDSir6iwaOouuwguKLGxajJ9CDA/MiiIL/suPggq8rsuCC/
odP1ILqiw6Ly0Owgprih+7iip8ih9SD+9MDKILiovsKi66e8IL/1qMHU9SCrqMby0O4gprr41vUg
sdjy0CC/qLwg/sOhLtPVuNvszO4guqHyvqLCwaG4osKi1ey4osjQLiCmwKH9yaLCov0gprr4xdvs
zPUsILH9IKbAwvcgw6HBp7qE2+zM9SDAosjMINLyvrjyqL4gg4rwIKjE7CC+8CDAosOi8tAgwMrs
zPUgwfymyKHVINLyvrjBobggscnszCCrw933IMX1uvUguKKovPK+otXsuKLI0C4NCg0Kv6LuusLB
obggsdjy0PIg0KjIwqL4ILih+CDAvqLsuKfFoSD++KjEIKuoviCnv6HsuKKnwqEgv7jDp8XxzvUg
sf3IIKzF+CD+1ey4osjF97j7IL+i7rrCwaH2IMDE06jIIMDK7Lggp8XxysIgtNUg0vK+uPUgq8Pd
9yDF9br1ILH9yKH4IKvQIMGiqLjCobih0C4NCg0KICAg

நன்றி நண்பர்களே மிக்க நன்றி அல்லது ஆப்பரேஷன் சக்ஸஸ் - பேஷண்டும் சாகலை



பல பல அற்புதமான இடுகைகளுக்கே 8/8 நட்சத்திரக் குத்து கிடைப்பது அரிது என்னும் நிலையில், ஜெஸ்ஸிகா பெஹ்லைப் பற்றி நான் எழுதிய ஒரு கவிதைக்கு அதுவும் மீள்பதிவுக்கு 19/19 அளித்து பெருமை சேர்த்துவிட்டீர்கள் நண்பர்களே.

மிக்க மகிழ்ச்சி, இனிமேல் இம்மாதிரி கவிதை எழுத மாட்டேன். இம்மாதிரி விளையாட்டும் விளையாட மாட்டேன். ஆப்பரேஷன் இத்துடன் முடித்துக் கொள்ளப்படுகிறது.

ஒரு ஜொள்ளுப் பதிவு



அழகே ஜெஸ்ஸிகா!!!
உன்கையில் இருப்பதென்ன "Trash"ஆ
ஆகிப்போனனே "Nash"ஆ

குப்பைக்கும்
அளித்தாயே முக்கியத்துவம்
இதைவிடவா
பெரிது
பின்நவீனத்துவம்

இருத்தலியத்தை
இல்லாமல் ஆக்குகிறாயே பெண்ணே
மூக்குக்கு மேல
உனக்கு இருக்குறது தான் "கண்ணே"

"பிங்க்" நிற ஆடையணியும் நிலா
நீ! முட்களே இல்லாமல் பழுத்த பலா
அடிச்சு ஆட நடந்து வர்ற அம்சமா
அப்படி இப்படி நீ கிளியோபாட்ரா வம்சமா?

"கோஹினூர்" கீரிடம் வச்ச ராணி
உன் பக்கத்துல நிக்கவச்சா ஆவாளா போணி
உனக்கு நிகர் யாருமில்லை போ நீ
அட போம்மா நீ
ஜொள்ளுவிட்டா யாருபுடுங்குவா ஆணி
அட நம்ம ஆணி

கவுஜை கலைஞன், கவிமடத் தலைவன், கவிதைப் பகைவன் அண்ணன் "தென்னகத்தின் தெரிதா" ஆசீப் அண்ணாச்சிக்கு சமர்ப்பணம்.(ஓய்! நீங்க தான் என் கவிதைத் தொகுப்புக்கு உரையெழுதணும். தயாராய்க்கோங்க.)





PS: ஒரு முக்கியமான விஷயம் டெஸ்டிங் காரணமா ஒரு மறுபதிப்பு.
PS2: தொடர்புடைய பதிவு - நன்றி நண்பர்களே மிக்க நன்றி அல்லது ஆப்பரேஷன் சக்ஸஸ் - பேஷண்டும் சாகலை

அசத்தல் நாயகன் ஜே.கே. ரித்தீஷ் உடன் ஒரு அதிரடி பேட்டி

ஜே.கே.ரித்தீஷ்... கோடம்பாக்கத்தின் புதிய கொடை வள்ளல்!

'புரட்சி நாயகன், அதிரடி மன்னன்' என்ற அடைமொழிகளோடு முரட்டு மீசையுடன் சிட்டி ஆட்டோக்களில் பயமுறுத்துகிறார் பார்ட்டி. வழக்கம் போல படைபரிவாரங்களோடு வடபழனி ஏரியாவில் அதகளம் பண்ணிக்கொண்டு இருந்தவருடன் ஒரு நேருக்கு நேர்!



'' 'கானல் நீர்'னு ஒரு அட்டுப்படம் கொடுத்துட்டு, நீங்க பண்ற அலப்பற உங்களுக்கே ஓவரா தெரியலியா?''

''கானல் நீர் ஒரு டுபாக்கூர் படம்தான். அது என் நண்பர் சின்னிஜெயந்த்தின் அன்புக்காகப் பண்ணியது. நான் சின்ன வயசுல எத்தனையோ படங்களைப் பார்த்து செம கிண்டல் பண்ணி இருக்கேன். கடைசியில நாலு பேரு என்னைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி என் முதல் படம் அமைஞ்சுபோச்சு. இத்தனைக்கும் 'கானல் நீர்' பட போஸ்டர்ல 'A True Punishment'னு கேப்ஷன்லாம் கொடுத்தேன். அந்த கேப்ஷனைப் பார்த்தாவது ஜனங்க உஷாராகட்டுமேன்னு!'' (பலமாகச் சிரிக்கிறார்.)

''எங்கே இருந்து கிடைச்சுது இவ்வளவு பணம்? நடிக்க வர்றதுக்கு முன்னாடி ராமநாதபுரத்தில் நீங்க ஒரு டீக்கடையில வேலை பார்த்தீங்களாமே?''

''ஹாஹாஹா... (சிரிக்கிறார்) நான் டக்ளஸ் கிடையாது சார். ராமநாதபுரத்துல வசதியான குடும்பம் என்னோடது. என் தாத்தா சுப.தங்கவேலன் இப்ப மினிஸ்டரா இருக்காரு. ஊருல 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. மூணு ஒயின்ஷாப்புக்கு ஓனரா இருந்தேன். அழகப்பா யூனிவர்சிட்டில சிவில் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். ஆனா, நான் பிரபலமாவதைப் பிடிக்காத சில பேரு, 'கடத்தல் பண்ணேன்... சீட்டிங் பண்ணேன்'னு இல்லாத விஷயத்தைப் பரப்பிவிடுறாங்க. ஆனா, அதைக் கேட்டாலும் சந்தோஷமா இருக்கு. ஏன்னா, காய்ச்ச மரம்தானே சார் கல்லடி படும்!''

''ஏன் சார் நடிக்க வந்தீங்க?''

''சார்... யார் வேணும்னாலும் நடிக்கலாம். டான்ஸ் நல்லா ஆடுற யாருக்கும் நடிப்பு ஈஸியா வந்துடும். எனக்கு டான்ஸோட கராத்தேவும் அத்துப்படி. போதாக்குறைக்கு தி.மு.கவில் அடிமட்டத் தொண்டனாப் பணியாற்றிய அரசியல் அனுபவம் இருக்கு. இது போதாதா நடிக்க வர்றதுக்கு..? ஏன் சார், நான் நல்லாத்தானே இருக்கேன்?'' (முகத்தை சீரியஸாகக் காட்டுகிறார்)

''உங்க நடிப்பைப் பார்த்துட்டு கலைஞர் என்ன சொன்னார்?''

''கானல் நீர் கேசட் ரிலீஸ் ஃபங்ஷனுக்கு வந்த கலைஞர், 'படம் ரிலீஸானதும் எனக்கு போட்டுக்காட்டு!'னு சொன்னார். அவருக்கு உடம்புக்குச் சரியில்லாத நேரத்துல போட்டுக்காட்டி, அவரை ஏன் சிரமப்படுத்தணும்னுதான் படம் காட்டலை. எனக்குத் தெரியாதா... என் படம் எப்படி இருக்கும்னு!'' (சிரிக்கிறார்)

''உங்க படம் கானல் நீரை ஓடவைக்க பிரியாணியும் 100 ரூபாய் பணமும் ராமநாதபுரத்தில் கொடுத்தது நிஜம்தானே..?''

''சொந்த மண்ல நம்ம படம் மண்ணைக் கவ்வக் கூடாதுன்னு நினைச்சது உண்மைதான். சார், ஒரு சிம்பிள் விஷயம் சொல்றேன். நான் ஒருத்தருக்கு ஆபரேஷன் பண்ண ஒரு லட்சம் கொடுத்தா, அந்தக் கிராமமே என்னை 'வள்ளல்'னு வாயாறப் புகழுது. என் 'நாயகன்' பட பப்ளிசிட்டிக்காக சென்னையில இருக்குற 80% ஆட்டோக்கள்ல என் பட ஸ்டிக்கரை ஒட்டவெச்சேன். அதுக்கு ஒரு ஆட்டோவுக்கு மாசம் 50 ரூபாய்னு செலவு பண்றேன். ஆனா, மாசம் 1,000 ரூபாய் கொடுக்கிறதா வெளியே பேசிக்கிறாங்க. என்னத்தைச் சொல்றது?''

''ஆளுங்கட்சி சப்போர்ட்லதான் இப்படில்லாம் பண்றீங்க. ஆட்சி மாறினா, காட்சி மாறி நீங்க ஜெயிலுக்குப் போக வேண்டிய சூழல் வரும்னு சொல்றாங்களே?''

''இந்த ரேஞ்ச்ல கிளப்புறாய்ங்களா? தனக்கு மிஞ்சித்தான் தானம்னு சொல்வாங்க. ஆனா, எனக்கும் விஞ்சியது என் தானம். கடைசி பைசா இருக்கிற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பேன் சார். நான் நேர்மையா ரியல் எஸ்டேட் தொழில் பண்ணி சம்பாதிக்கிறேன். வருமான வரி கட்டுறேன். அதனால யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம்இல்லை. 'அப்போ சுதாகரன் பினாமி... இப்போ ஆளுங்கட்சி சுனாமி'ன்னு கிளப்பிவிடுற கூட்டத்தைப் பார்த்து பரிதாபப்படுறேன்!''

''ஊருப் பக்கம் அடுத்த எம்.பினு பேசிக் கிறாங்க?''

''என் சொந்த மண்ணுக்கு அப்படி ஒரு சேவை செய்ய வாய்ப்பு கிடைச்சா, இந்த ஜென்மமே போதும் சார். தலைமைகிட்டே ஸீட் கேட்பேன். கிடைச்சா, ஜெயிச்சுக் காட்டுவேன். உலகத்துக்குத்தான் நான் ரித்தீஷ். ஊருக்கு, நான் எப்பவுமே அதே முகவை குமாரா இருப்பேன்!''

''உங்க அடுத்த சினிமா அட்டாக் எப்போ?''

''இதோ 'நாயகன்' ரிலீஸானதும் 'தளபதி'யை ஆரம்பிக்கிறேன். சும்மா பட்டையக் கிளப்பும் பாருங்க... என்ன சிரிக்கிறீங்க? அட, நம்புங்க சார்!'' அடக்க முடியாமல், தானும் சிரிக் கிறார் ஜே.கே.ரித்தீஷ்!

நன்றி - ஆவி.

இந்துத்வா சைவம் வைணவம் பிரச்சனை சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்

தேவார விவகாரத்தில் போராட்டத் தீ கிளம்பிய சிதம்பரம் நடராஜர் கோயிலில் அடுத்தகுபீர்! கோயிலுக் குள்ளேயே, தில்லை கோவிந்தராஜ பெருமா ளுக்கும் தனி கோயில் உள்ளது. நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோவிந்தராஜபெருமாள் திருக்கோயில் மட்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடலூர் திருவந்தி புரம் கோயில் நிர்வாக அலுவலரே இந்தக் கோயிலையும் நிர்வகித்து வருகிறார்.

இந்த ஆண்டு கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோயிலின் பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் ரங்காச்சாரி உள்ளிட்டவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், பிரம்மோற்சவம் நடத்தக் கூடாது என்று தீட்சிதர்கள் அறநிலையத்துறைக்கு மனு கொடுத்துள்ளார்கள்.

கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தை எதிர்க் கும் தீட்சிதர்கள் சிலரை சந்தித்தோம். வைத்திநாதசாமி தீட்சிதர் என்பவர் நம்மிடம், ''இது சிவ ஸ்தலம். அந்தக் காலத்தில் சிவ - வைணவ மதங்களுக்கிடையே மாச்சர் யம் இருக்கக்கூடாது என்பதால் சிவன் கோயில் வளாகத்திலேயே பெரு மாளுக்கும் தனி சன்னதி வைத்தார்கள். அவை பரிவார தெய்வங்கள் என்று அழைக்கப்படுமே தவிர, தனி கோயிலாக பார்க்கப்படாது. மற்றபடி, உற்சவங்கள் எல்லாமே சிவனுக்குத்தான். இங்கும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது. அதேசமயம், பெருமாளுக்கு நித்ய கால பூஜைகள் குறைவில்லாமல் நடத்தப்படுகின்றன. இதுவரை அந்த சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்தப் பட்டதாக சரித்திரம் இல்லை. இப்போது எதற்காக புதிதாக இப்படி செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி'' என்றார்.

சாமமூர்த்தி தீட்சிதர் என்பவர், ''இங்கே அமைதியான முறையில் நடந்துகொண்டிருக்கும் சிவ-வைணவ பூஜைகளுக்கு சிலர் பங்கம் செய்யப்பார்க்கிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்புகூட இப்படி பிரச்னை கிளப்பினார்கள். அப்போது இங்கே வந்து ஆராய்ந்த நீதிபதி, 'இங்குள்ள பெருமாள் கோயில் கொடி மரத்தில் கொடியேற்றத் தேவையான வளையம்கூட இல்லை. அதனால் இங்கே கொடியேற்றும் மரபு இல்லை என்றே முடிவுக்கு வரவேண்டியுள் ளது' என்று தீர்ப்பளித்தார். அது மட்டு மில்லை... ஒரு கோயிலில் இரண்டு பிரம் மோற்சவம் நடத்தலாமா? இதுவரை காலம் காலமாக நடைபெற்றுவந்திருக்கும் சம்பிர தாயங்களை திடீரென்று மாற்றலாமா? இதைத்தான் நாங்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் சொல்லியிருக்கிறோம்'' என்றார்.

இதுபற்றி, கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் அறங்காவலர் டாக்டர் ரங்காச் சாரியிடம் கேட்டோம்.

''ஆழ்வாரால் பாடப்பெற்ற புனித வைணவ ஸ்தலம் இது. கோவிந்தராஜ பெருமாளுக்கு இப்போது பக்தர்கள் பிரம்மோற்சவம் நடத்தவேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காகத்தான் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். மற்ற பூஜைகளுக்கு இடையூறு வராத வண்ணம் எப்படி நடத்தலாம் என்றுதான் அறநிலையத்துறை தீட்சிதர்களிடம் கேட்டிருக்கிறது. இங்கே நடராஜர் ஆலயத்தில் அம்மன், முருகன் கோயில்கள் தனியே இருக்கின்றன. அங்கெல்லாம் கொடியேற்றப்பட்டு உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல், பெருமாளுக்கும் நடத்தலாம் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள். இப்போது விஷயம் அறநிலையத்துறையின் கையில் இருக்கிறது'' என்றார்.

முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரான வி.வி.சாமிநாதனும் இந்த விவகாரத்தில் பிரம்மோற்சவம் நடத்தியே ஆகவேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அதற்காக ஆதரவு திரட்டுவது, அறிக்கை, சட்ட உதவி என்று தீவிரமாக இருக்கும் அவரை சந்தித்தோம்.

''அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவத்தை தடுக்க தீட்சிதர்கள் யார்? தேவாரம் பாடும் பிரச்னையில் அரசு தலையிட்டது போல இதிலும் தலையிட்டு பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தவேண்டும். அதற்காக ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்கவேண்டும். பக்தர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்ச வேண்டும்'' என்று கோபத்தைக் கொட்டினார்.

அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் கடந்த 22-ம் தேதி கோயிலுக்கு வந்த அதிகாரிகள் குழுவினர், இரண்டு தரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர் களிடம் இதுபற்றிக் கேட்டதற்கு,

''பேச்சுவார்த்தை விவரங் களை ஆணையருக்கு அனுப்பிவிட்டோம். அவர்தான் இறுதி முடிவு எடுப்பார்'' என்றார்கள்.

எது எப்படியோ... சமீபகாலமாகவே ஆன்மிக விவகாரங்களில் புதுசு புதுசாக பூசல்களை உருவாக்கி, மோதல் உருவாக்கி, முட்டவிட்டுக் குளிர்காயும் வேலையில் சில சக்திகள் இறங்கியிருப்பதாக சிதம்பரம் வட்டாரத்தில் ஒரு பொதுவான வருத்தம் நிலவுகிறது!

- நன்றி ஜூனியர் விகடன்.

சைவம் வைணவம் பிரச்சனையே கிடையாது, என்று பூனைக்குட்டியை இல்லை யானையை சோற்றுக்குள் மறைக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள் 'இந்துத்வாக்கள்'(இராம. கோபாலன் போன்றோர்) சிலர். என்னவோ கமலஹாசன் தான் வரலாற்றிலோ இல்லை தற்சமயங்களிலோ இல்லாத ஒன்றைப் பற்றி படமெடுப்பதாகப் படம் காண்பித்தும் வருகிறார்கள்.

பூனைக்குட்டியே வெளியில் வரும் காலத்தில் யானைகள் எம்மாத்திரம்.

- இணையக் கூத்தாடி

Men Rules

We always hear "the rules" from the female side. Now here are the rules from the male side.

Shopping is NOT a sport. And no, we are never going to think of it that way.

--

Crying is blackmail.

--

Ask for what you want. Let us be clear on this one:

Subtle hints do not work!
Strong hints do not work!
Obvious hints do not work!
JUST SAY IT!

--

‘Yes’ and ‘No’ are perfectly acceptable answers to almost every question.

--

Come to us with a problem only if you want help solving it. That's what we do. Sympathy is what your girlfriends are for.

--

A headache that lasts for 17 months is a problem. See a doctor.

--

Anything we said 6 months ago is inadmissible in an argument. In fact, all comments become null and void after 7 days.

--

If you think you're fat, you probably are. Don't ask us.

--

If something we said can be interpreted two ways, and one of the ways makes you sad or angry, we meant the other one.

--

You can either ask us to do something or tell us how you want it done.

Not both

--

If you already know best how to do it, just do it yourself

--

Whenever possible, please say whatever you have to say during commercials.

--

Christopher Columbus did not need directions and neither do we.

--

ALL men see in only 16 colours, like Windows default settings.

--

Peach, for example, is a fruit, not a colour. Pumpkin is also a fruit.
We have no idea what mauve is.

--

If it itches, it will be scratched. We do that.

--

If we ask what is wrong and you say "nothing," we will act like nothing's wrong. We know you are lying, but it is just not worth the hassle.

--

If you ask a question you don't want an answer to, expect an answer you don't want to hear.

--

When we have to go somewhere, absolutely anything you wear is fine, Really.

You have enough clothes.
You have too many shoes.


--

I am in shape. Round is a shape.

--

சக படைப்பாளிகள் ஆபத்தானவர்கள் - சாரு நிவேதிதா

தன் அன்றாட வாழ்வில் நிகழும் அசிங்கங்களை, சந்தோஷங்களை, விமர்சனங்களை படு பச்சையாக, ஈரம் காயாத ஒரு குழந்தையைப் போல் அசல் தன்மையோடு எழுதிச் செல்லும் சாரு நிவேதிதா, தமிழிலக்கியத்தில் மறுக்க முடியாத ஆளுமை. தமிழ் இலக்கிய வகைமைகளை வேறு தளத்திற்கு நகர்த்தியவர். அதி துக்கமான கதையைக் கூட சுவாரஸ்யம் குன்றாமல் அறுநூறு பக்கத்திற்கு எழுதி வாசகனைப் படிக்க வைக்க சாருவால் மட்டுமே முடிந்திருக்கிறது. சமூகத்தின் மீதான தன் எதிர்வினையை ஒப்பீட்டளவில் பேசி யோசிக்கச் செய்யும் கலைத் தன்மையுடன் தீராநதிக்காக நீண்ட நேர்காணல் இது.

தீராநதி: சென்ற மாதம் பிரான்ஸ் போனீர்கள். அதற்கு முன்பாகக் கூடச் சென்றிருக்கிறீர்கள். அடிக்கடி பிரான்ஸ் போகிறீர்களே ஏன் சாரு?

சாருநிவேதிதா: பிரான்ஸ் எப்போதும் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கும் ஒரு நாடு. காரணம்_ அங்குள்ள சுதந்திரம்; சுதந்திரம் என்பதை இங்கே ஒரு வார்த்தையாகப் படிக்கிறோம் அவ்வளவுதான். ஆனால் அங்குள்ளவர்களின் சுதந்திரத்தை ஒரு கான்செப்ட்டா விஷ்வலைஸ் பண்ணி ஒரு அனுபவமாக எப்படி இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கோ, எனக்கோ புரியாது. நிச்சயமாக இந்தியாவில் மட்டும் இருப்பவர்களுக்கு தெரியாது. அதை அங்கு சென்று ஃபீல் பண்ணும் போதுதான் அதனுடைய உண்மையான அர்த்தம் விளங்கும்.

நான் இங்குள்ள இமிகிரேஷன் ஆஃபீஸில் பிரெஞ்ச் விசா கேட்டு அப்ளை பண்ணி இருந்தேன். துணைக்கு நண்பரும் வந்திருந்தார். இமிகிரேஷன் ஆஃபீஸில் இருக்கும் ஓர் அதிகாரி என்னை விடமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஒரு மணி நேரம் உட்கார வைத்து சித்திரவதை செய்தான். நாலு மலையாளிகள் மாறி மாறி கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள். என்னிடம் பிரான்ஸ் போக விசா இருக்கிறது. இருந்தும் ‘நீங்க எதுக்குப் போறீங்க?’ என்றான். ‘நான் சுத்திப் பார்க்கப் போறேன்’ என்று பதில் சொன்னால் ‘உங்களைப் பார்த்தா திரும்பி வர்றவர் மாதிரி தோணலையே?’ _அது பத்தி உனக்கென்ன?_ கேட்கலை. கேட்டா விடமாட்டான். கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு பொறுமையா ‘நான் ஒரு எழுத்தாளன். பிரெஞ்ச் கலாசாரத்துக்கு எவ்வளவோ வேலை செய்திருக்கேன்.’ ஃபூக்கோ தெரிதா, சார்த்தரோட கலெக்ஷன் எல்லாம் மொழி பெயர்த்திருப்பதை எடுத்துக் காட்டினேன். ‘இல்லை... இல்லை... றிக்ஷீஷீஷீயீ வேணும்’ என்று தட்டிக் கழித்தான். ‘றிக்ஷீஷீஷீயீ தானே வேணும். இந்தா’ என்று என்னுடைய நாலு புத்தகங்களை எடுத்துப் போட்டேன். அவன் மலையாளி என்பதால், இதனுடைய அர்த்தமே அவனுக்குத் தெரியவில்லை.

சரி என்று ‘மாத்யமம்’ மலையாளப் பத்திரிகையை எடுத்துப்போட்டேன்_நான் மலையாளத்தில் பெரிய காலமிஸ்ட்! அவனோ இங்க வளர்ந்த மலையாளி. அவனுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. அவன் சென்னையிலேயே பல தலைமுறைகளாய் செட்டிலான மலையாளிபோல. அவனுக்கு அனேகமா மலையாளமே தெரியாது என்றே நினைக்கிறேன். இப்படி ஒரு மணி நேரம் இம்மி இம்மியாக டார்ச்சர் செய்தவன் ‘திரும்பி வர்றீங்களான்னு பார்க்குறேன்’ என்று சபித்துக் கொண்டே செல்ல விட்டான். இதே வேலைக்கு பாரிஸ் ஏர்போர்ட்டில் கண் சிமிட்டும் நேரம்தான் ஆனது. பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தவன் ‘சரி, நீங்க போகலாம்’ என்று அனுப்பிவிட்டான். ‘நான் இரண்டு முறை பிரான்ஸ் போனபோதும் ஒரு நொடிக்கு மேல் என்னைக் காக்க வைக்கவே இல்லை. இந்தியனோட மனப்பான்மை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நான் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி இந்தியாவிற்குள் நுழைந்தவுடன், ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குள் புகுந்துவிட்டது போல இருக்கிறது. உதாரணமாக, இமிகிரேஷன் ஆபீஸ். பதினைந்து மணிநேரம் பயணம் செய்துவிட்டு வந்த ஒரு பயணியை மறுபடியும் இரண்டு மணி நேரம் காக்க வைத்தே அனுப்பினான். பாரிஸிலேயும் இதே மாதிரி ஜனத்தொகைதான். இதே வேலைகள்தான். ஆனால் அவர்களால் எப்படி இவ்வளவு சுலபமாக கையாள முடிகிறது? மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா இந்த ஏரியாவில் எல்லாம் தமிழ் ஆதிக்கம் இருக்கிறது. மலேசிய மொழியில் 25 சதவீதம் தமிழ் கலந்திருக்கிறது. உதாரணமாக தமிழில் ‘கடை’ என்ற சொல்லுக்கு மலாய் மொழியிலேயும் ‘கடை’ தான்.

மலேசியாவில் விநாயகர் கோயிலோ, அம்மன் கோயிலோ இல்லாத ஊரே கிடையாது. இவ்வளவுக்கும் அது இஸ்லாமிய நாடு. தாய்லாந்தில் பார்த்தால் அம்மன் கோயில் இருக்கிறது. அங்கே போய் வழிபடுகிறவன் எல்லாம் தமிழன் கிடையாது, தாய்லாந்துக்காரன். அதுதான் முக்கியமான விஷயம். ஒரு விநாயகர் சிலை பெருசா... பிரமாண்டமாய் நடு ரோட்டிலேயே இருக்கிறது. அங்கே உட்கார்ந்து தாய்லாந்துப் பெண்கள் பூஜை செய்துகொண்டிருக்கிறார்கள். பாங்காக்கில் தமிழர்கள் ரொம்ப கம்மி _ ஒரு நூறு பேர் இருப்பார்கள். தாய்லாந்துக்காரிக்கு அந்த விநாயகர் சிலையின் மூலம் எங்கே என்று கூட தெரியாது. நான் ஒரு பெண்ணிடம் அதுபற்றிக் கேட்டபோது ‘கணேசா’ என்று பதில் சொன்னாள். அவர்கள் அப்படி ஒரு சுமுகமான வாழ்முறையை வைத்திருக்கிறார்கள். நிதானமான வாழ்நெறியை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஆனால் நம் ஊரில் எல்லாம் தலைகீழ். மலேசியா போவதற்காக ஏர்போர்ட்டில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஃபிளைட் வந்து இறங்குகிறது. இறங்கி நின்றதுதான் தாமதம். திபுதிபுவென்று எல்லோரும் ஃபிளைட்டில் ஏதோ டவுன் பஸ்ஸில் ஏறுவதைப் போல ஓடி ஏறுகிறார்கள். ஏன் இப்படி ஓடுகிறார்கள் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. அப்புறம்தான் விஷயம் புரிந்தது. பெட்டிகளை, சாமான்களை கிடைக்கின்ற இடத்திலெல்லாம் வைத்து ரொப்பி விட்டார்கள். ஒரு பத்துப் பதினைந்து கிலோ கொண்டு செல்லலாம் என்றால், இவர்கள் ஒரு வீட்டையே தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

நாங்கள் ஒரு ‘ஹேண்ட் பேக்’கைக் கூட வைக்க முடியாமல் மடியில் வைத்துக்கொண்டே போனோம். இந்த அளவுக்குக் கேவலப்பட்டு இருக்கிறார்கள் தமிழர்கள். அதைவிட இந்தியன் என்றால் சுத்தமாக மதிப்பே இல்லை. இந்த இந்திய மனப்பான்மையிலிருந்து நான் தப்பித்து, ஒரு நிதானமான தேசத்துக்குப் போக ஆசைப்படுகிறேன். இதுக்கு உதாரணமா இப்ப நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்குவோம். ஆறு, ஏழு வயசுள்ள ஒரு பெண் குழந்தை நேப்பியர் பிரிட்ஜ் மேல் நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, பாலத்திலிருந்த ஒரு ஓட்டையில் இடறி விழுந்து இறந்துவிட்டாள். இதுமாதிரி ஒரு சம்பவம் பிரான்ஸில் நடந்திருந்தால், பிரான்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்திருக்கும். இதுதான் சுதந்திரம். பிரான்ஸ் தேசமே அழிந்திடும். அப்படி அந்த அளவுக்கு மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய நாடு அது. எப்படி பாலத்தில் ஒரு குழந்தையை சாகடித்தாய் என்று அரசையே காலி செய்துவிடுவார்கள். அரசை மாற்றுவதெல்லாம் கிடையாது. சுத்தமாக துடைத்தெறிந்துவிடுவது. அந்த அளவுக்கு அம்மக்கள் பதறிவிடுவார்கள். இங்கே அது வெறும் நியூஸ். ஏனென்றால், அடுத்த நாளே அறுபது குழந்தைகள் பலியென்று நியூஸ் வந்துவிடும். நமக்கு இதுவெல்லாம் நியூஸ் மட்டுமே. ஆக, பிரான்ஸ் மனித உரிமையை, சுதந்திரத்தை மதிக்கக் கூடிய நாடு என்பதால், திரும்பத் திரும்ப அங்கே போக நான் ஆசைப்படுகிறேன்.

‘ராஸலீலா’ என்ற 700 பக்க நாவலை நான் கொடுத்திருக்கிறேன் என்றால்... ஆறு கோடி ஜனங்களில் அதை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? அதன் வெளியீட்டு விழா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. ஒரு அறுபது பேர் வந்திருந்தார்கள். அங்கு கனிமொழி பேசிய பேச்சு ஒரு தலைப்புச் செய்தி. ‘பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்னைத் தத்தெடுத்துக் கொண்டவர் சாருநிவேதிதா’ என்றார்.

அது எவ்வளவு பெரிய ஸ்டேட்மெண்ட். இது பற்றி யாருக்குமே கவலை கிடையாது. இது பற்றி ஒரு செய்தி கூட வரவில்லை. சரி, விழாவையெல்லாம் விடுங்கள். அந்த விழாவுக்கே இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்தார் நல்லி செட்டியார். ஒரு நாவலை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அதை வைத்து ஒரு விமர்சனம், பேச்சு எதுவுமே வரவில்லை. இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால், பிரான்ஸில் போய் பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து அங்கேயாவது நான் ஒரு எழுத்தாளன் என்ற இடத்தைப் பிடிப்போம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் மொழி பெயர்ப்பாளருக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. ராஸலீலாவின் மொழிநடை கொஞ்சம் லகுவாக இருக்கும். ஆனால், ‘ஜீரோ டிகிரி’யைத்தான் அவர் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தமிழ் கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் மொழிபெயர்ப்பில் ஏÊற்படும் சந்தேகத்தைச் சரி செய்யவும், சரியான அர்த்தத்தோடு மொழி மாற்றம் செய்யவும் நான் அடிக்கடி அங்கே சென்று அவருக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். இதனோடேயே ஒட்டி இங்குள்ள படித்த ஆட்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒன்றை நான் சொல்ல வேண்டும். நம் அசோகமித்திரன் எழுத்துக்கு இலக்கியச் சிந்தனை, சாகித்ய அகாடமி அவார்டு எல்லாம் சாதாரணம். அவர் நோபல் அவார்டு வாங்கக் கூடிய அளவுக்குத் தகுதியான ஆள். இந்திய அளவில் இப்படி மூன்று பேரைச் சொல்லலாம். மஹாஸ்வேதா தேவி, அசோகமித்திரன், பால் சக்காரியா. இந்த ரேஞ்சில் அசோகமித்திரனை நான் மதிக்கிறேன். படித்தவர், இங்கிலீஷ் தெரிந்தவர், உலக இலக்கியம் அறிந்தவர். அவருக்கு இன்னொரு விதமான ரைட்டிங் ஸ்டைல் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்தை பிறர்மேல் திணிக்கக் கூடாது. உதாரணமாக சாருநிவேதிதாவுடைய ரைட்டிங் பிடிக்காமல் இருக்கலாம். அதற்கு எல்லோருக்குமே சுதந்திரம் இருக்கிறது. என்னுடைய எழுத்து எல்லோருக்கும் பிடித்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘இப்போது எழுதக் கூடிய பாமுக்_அவருக்கு நோபல் அவார்டு கொடுத்திருக்கிறார்கள். அவர் இப்படியெல்லாம் எழுதவில்லை’ என்கிறார். இது சுத்தப் புரட்டல். நான் பத்து, இருபது வருடமாக ஒரு விஷயத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னை மாதிரி இந்த உலகத்தில் பதினைந்து பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, வில்லியம் பர்ரோஸ். என் கட்டுரைகளில் வில்லியம் பர்ரோஸ் பெயர் வராத இடமே கிடையாது. சாதாரணமாக ‘நமீதா’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டால் கூட வில்லியம் பர்ரோஸை உள்ளே விடுவேன். அந்த அளவுக்கு வில்லியம் பர்ரோஸை கிரகித்து வைத்திருக்கிறேன். அப்புறம் கேத்தி ஆக்கர். இப்படி பெரிய லிஸ்ட்டே என்னிடம் இருக்கிறது. இவர் சொல்வார் வில்லியம் பர்ரோஸ், கேர்த்தி ஆக்கர் எல்லாம் யார் படிக்கிறார்கள் என்று. உலக இலக்கியம் தெரிந்த ஆள்தானே நீங்கள்? அப்புறம் இதை ஏன் மறைக்கிறீர்கள். வேண்டுமென்றே தெரிந்தே என்னைப் பழிவாங்குகிறீர்கள் அல்லது சதி செய்கிறீர்கள் என்று நான் சொல்வேன். ஏனென்றால், ஓரான் பாமுக்குக்கு முந்தின வருடம் நோபல் பரிசு வாங்கினவர் எல்ஃப்ரீட் ஜெலினெக். அவங்க எப்படி எழுதுறாங்க? நான் எழுதுகின்ற செக்ஸ§வாலிட்டியெல்லாம் தூசு. ஒரு பெண்ணுக்கு நாற்பது வயது வரைக்கும் செக்ஸ§வல் எக்ஸ்பீரியன்ஸே இல்லை. அவளுடைய அம்மா அவளை பீத்தோவன் மாதிரி பெரிய இசைக் கலைஞியாக்க ‘அற்ப, லோகாயத விஷயங்களில் எல்லாம் நீ ஈடுபடக் கூடாது’ என்று சொல்லி, ஒரு கலைஞனாக வளர்த்திருக்கிறாள். நம்ம ஊர் சிறு பத்திரிகை இலக்கியவாதிகள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டார்கள், குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். ஊர் ஊரா சுற்றித் திரிவார்கள். உலக இலக்கியம், உலக இலக்கியமென்று பேசித் திரிவார்கள். அப்படி அவர்கள் உலக இலக்கியம் பண்ணினால் பரவாயில்லை. ஆனால் அதுமட்டும் நடக்காது. இதே மாதிரி ஜெலினெக்கின் கதாநாயகிக்கு அவள் அம்மா கல்யாணம் பண்ணி வைக்கவில்லை. ஒரு பாய் ஃபிரெண்ட் கிடையாது. ஒரு டிஸ்கோதெ கிடையாது. பிராக்டிஸ் பிராக்டிஸ் என்று அவள் ஒரு பியானோ டீச்சர் போல ஆகிவிட்டாள். இங்குள்ள இலக்கியவாதி உலக இலக்கியம், உலக இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு ஒரு மாவட்ட இலக்கியம்தான் படைக்கிறான். எப்படி மாவட்ட இலக்கியம் என்று சொல்கிறேன் என்றால், மாவட்ட அளவில் ஃபுட்பால் விளையாடுகின்றவன் போய் உலக அளவில் விளையாட முடியுமா? அதுபோல் பீத்தோவன் மாதிரி ஆக பயிற்சி கொடுக்கப்பட்டவள் கடைசியில், ஒரு டீச்சர் லெவலுக்கே வர வேண்டியதாகிவிட்டது. அவள் ஒரு முறை புளூ ஃபிலிம் பார்க்கப் போவாள். அங்கே டிஷ்யு பேப்பர் எல்லாம் சிதறிக் கிடக்கும். அந்த டிஷ்யு பேப்பரில் ஆண்கள் சுய மைதுனம் செய்து துடைத்துப் போட்டிருப்பார்கள். அதை எடுத்து அவள் முகர்ந்து பார்ப்பாள். அங்கேயே சிறுநீர் கழிப்பாள். திரையரங்கை விட்டு வெளி வந்து கொண்டிருக்கும் வழியில், காரிலேயே இருவர் சம்போகம் செய்து கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்தவுடன் அங்கேயே அமர்ந்து மறுபடியும் சிறுநீர் கழிப்பாள். அப்போது காரிலிருந்து இறங்கி அவளை அடிக்க ஓடி வருவான் அவன். இவள் தப்பி ஓடுவாள். இதுதான் அவளுடைய செக்ஸ§வல் எக்ஸ்பீரியன்ஸ். இதையே நினைத்து நினைத்து உடம்பெல்லாம் குண்டூசி எடுத்துக் குத்திக் கொள்வாள். அந்த நேரத்தில் ஒரு ஸ்டூடெண்ட் இவளை லவ் பண்ணுவான். நாம் இருவரும் உறவு கொள்ளலாம் என்பான். இவள் உடனே அவனுக்கு ஒரு லெட்டர் எழுதுவாள். அது என்னவென்றால், உடனே அவளுடன் உறவு கொள்ளக் கூடாதாம். முதலில் உடல் முழுவதும் குண்டூசியால் குத்த வேண்டும். ஒரு இரும்புக் கிடுக்கியை எடுத்து என்னுடைய உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பை ‘டைட்’ பண்ணவேண்டும். இப்படியெல்லாம் இவள் சொன்னவுடன் அவன் மிரண்டு போய் ஓடியே விடுவான். அவனும் ஓடிவிட்டான் என்றவுடன் இவள் இதற்கெல்லாம் நம்முடைய அம்மாதான் காரணம் என்று நினைத்து, அந்தக் காமம் தாளமுடியாமல் தன் அம்மாவையே ‘ரேப்’ செய்துவிடுவாள். அம்மாவை கடித்துக் குதறி விடுவாள். இக்காட்சி நாவலில் துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவள் ஒரு இடத்தில் சொல்வாள் ‘நான் என் அம்மாவின் யோனி ரோமத்தைப் பார்த்தேன்’ என்று. இந்த நாவல் ஒரு படமாக வெளிவந்திருக்கிறது. இந்த சீனை எப்படி விஷ§வல் பண்ணி இருக்கிறார்கள் என்று பார்க்க அந்தப் படத்துக்குப் போனேன். படம் இக்காட்சியில் தோற்றுப் போய் இருந்தது. ஏனென்றால், அவள் வெறும் வசனமாக இதைச் சொல்லுவாள். நாவலில் வரும் 100 சதவீதத்தில் 5 சதவீதம் கூட படத்தில் இல்லை. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இப்படி எழுதுகிறாள் ஜெலினெக். அவள் தன் ‘பியானோ டீச்சர்’ நாவலைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறாள் தெரியுமா? இது என்னுடைய ஆட்டோ பயோகிராஃபி என்று சொல்லி இருக்கிறாள். இந்த ரேஞ்சில் உலக இலக்கியம் போய்க் கொண்டிருக்கிறது. அவளுக்கு நோபல் அவார்டு கொடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில் இன்றைக்கு என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு எல்பிரீட் ஜெலினெக்கைவிட சாருவின் எழுத்து நன்றாக இருக்கிறது என்கிறார்கள். நானும் அப்படித்தான் ஃபீல் பண்ணுகிறேன். ஜெலினெக்கை நாம் நன்றாக எழுதிவிட்டோம் என்ற மன திருப்தியில் இருக்கிறேன். என்னையும் என் எழுத்தையும் விடுங்கள். ஜெலினெக் பற்றி இருட்டடிப்பு செய்துவிட்டு ஏன் பாமுக் பற்றி பேசுகிறார் அசோகமித்திரன்? ஏதோ ‘ஷாக் வேல்யு’விற்காக எழுதியதில்லைங்க இது. என்னுடைய லைஃப். நீங்கள் வேண்டும் என்றால் இப்படி சாக்கடையில் கிடக்கிறானே என்று ஒதுங்கிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

நொய்டாவில் நாற்பது ஐம்பது குழந்தைகளை ரேப் பண்ணி கொன்று விட்டு மொத்தமாகப் புதைத்துவிட்டார்கள் என்றால், இதுமாதிரி உலகத்தில் எங்கு நடந்திருக்கிறது? இங்கே செக்ஸ§வாலிட்டி என்பது ஒரு பிரச்னை. நான் அதை எக்ஸ்போஸ் பண்ணுகிறேன். இதைப்போய் ஷாக் வேல்யுவுக்காக எழுதுவதென்றால் எனக்கு வேறு வேலை இல்லையா? எனக்கு இதனால் என்ன நல்ல பேர் வந்துவிடப் போகிறது. கெட்ட பேர்தானே வரும். இந்த அதிர்ச்சியினால் எனக்கு என்ன லாபம். நீங்கள் வேண்டுமென்றால் கர்ப்பகிரகத்திற்குள்ளாக உட்காந்து கொண்டு கர்ப்பகிரக இலக்கியம் எழுதிக் கொண்டு இருங்களேன் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீராநதி: பேசிக்கொண்டே திசை மாறிவிட்டோம். பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது?

சாரு: பிரான்ஸில் ஒரு மனிதனின் சராசரி வயது 95. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதற்கு அங்குள்ள குளிரும் ஒரு காரணம். அப்புறம் டென்ஷன் இல்லாது வாழ்வது. ஒருவரின் உயிர் வாழ்வுக்கு அவனுடைய கலாச்சாரமும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். தினமும் நொய்டா கில்லிங் மாதிரி பேப்பரில் படித்துக் கொண்டே இருந்தால், எப்படி உங்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் இருக்கும். அதனால் ஆயுள் விஷயத்தில் இவ்வியல்பான காரணங்கள் கூட சேர்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

பாரிஸ் பற்றி நான் எழுதும்போது அங்கே விபத்தே நடப்பதில்லை என்று எழுதி இருந்தேன். உடனே ஷோபா சக்தி மாதிரி ஒரு ஆள் ‘சும்மா இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் தெரியாமல் எழுதுகிறார்’ என்றார். விஷயம் என்னவென்றால் இங்கு எத்தனை விபத்து நடக்கிறது. அங்கு வருடத்தில் ஒன்று என்றால் இங்கு தினமும் விபத்து. இதை ஒப்பீடு செய்து பார்த்துதான் நான் எழுதுகிறேன். வருடத்திற்கு ஒன்று நடந்தால் அது விபத்தா? இந்தப் பரிகாசத்தையெல்லாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது.

அங்கே ரயிலில் ஒரு பெண், இருபது வயது மதிக்கத்தக்கவள். அவளால் கூட்ட நெரிசலில் நிற்கவே முடியவில்லை. குறுகலான இடத்தில் எப்படியோ பேலன்ஸ் செய்துகொண்டே ‘மதாம் பவாரி’ நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறாள். நூறு வருடத்திற்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் அது. அதனால்தான் அங்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு கலாச்சாரத்துடனும் இலக்கியத்துடனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். வெறும் குப்பையையே தின்று கொண்டிருந்தால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்? எந்த உடற்பயிற்சியும் இல்லை. தின்பதும் குப்பை, படிப்பதும் குப்பை, குடிப்பதும் குப்பை. இங்கே எங்குமே நல்ல வகை மதுவை வாங்க முடியாது. எல்லாமே கலப்படம். எல்லாமே குப்பை. எப்படி நீண்ட நாள் வாழ முடியும்? அங்குள்ள தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு ஊடாடுவதே கிடையாது. அங்கேயும் போய் இந்தியக் குப்பையை இறக்குமதி பண்ணி அந்தக் குப்பையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமா, அங்கேயே கிடைக்கின்ற மட்டரகமான விஸ்கியை குடிக்கிறார்கள். பிரெஞ்ச்காரர்கள் வைன் தான் குடிப்பார்கள். தமிழன் வைனே குடிப்பதில்லை. அங்கு வேலை செய்யாமலே, அவ்வரசு அகதிகளுக்கும், வேலையில்லாதவர்களுக்கும் ஆயிரம் யூரோ பணத்தை உதவித் தொகையாகக் கொடுக்கிறது. ஆயிரம் யூரோ என்பது அங்குள்ள ஒரு தபால்காரரின் சம்பளம். ஆக என்ன ஆகிறது? வேலைக்குப் போகாமல் பணம். நிறைய நேரம். குடிதான் ஒரே கதி. ஞிவீணீsஜீஷீக்ஷீணீ என்போமே, புலம் பெயர்ந்து வாழ்கின்ற அந்த வலியோடு குடித்துக் குடித்து ஐம்பது வயதிலேயே இறந்து போகிறான் தமிழன். சராசரி நூறு வயது வரை வாழ்கின்ற ஒரு நாட்டில், நம் ஆட்கள் ஐம்பது வயதில் செத்துப் போகிறார்கள் என்பது மிகப் பயங்கரமாக இருக்கிறது எனக்கு.

தமிழர்கள் வீட்டில் பிரெஞ்சுதான் பேசுகிறார்கள். ஆனால், ஒரு பிரெஞ்ச் சினிமா பற்றியோ, அங்குள்ள இலக்கியம் பற்றியோ ஒரு பிரக்ஞையும் இல்லை இவர்களுக்கு. பாரிஸில் பொம்பிதூ நூலகம் என்று ஒரு இடம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தை உலக அளவில் கட்டிடக் கலையின் அதிசயம் என்று சொல்வார்கள். வெறும் கண்ணாடியும் ஸ்டீலையும் மட்டுமே பயன்படுத்தி கட்டி இருக்கிறார்கள். அந்த லைப்ரரி, உலக அளவில் புகழ் பெற்றது. அங்கு போகவேண்டும் என்று ஷோபா சக்தியிடம் கேட்டபோது அவர், ‘நம்மையெல்லாம் அங்கே விட மாட்டார்கள்’ என்று பதில் சொன்னார். இருபது வருடமாக பிரான்ஸில் வசிப்பவர் சொன்ன பதில் இது. ஆனால், அங்கே ‘புக்’கை எடுத்துக்கோ எடுத்துக்கோவென்று எடுத்து நீட்டுகிறான். ‘இந்தப் புத்தகம் வேண்டும்’ என்றால் நான் அதன் உறுப்பினராக இருந்தால் நமக்குத் தேவையான புத்தகத்திற்கு உரிய பணம் கட்டி விட்டு பெற்றுக் கொள்ளலாம். அதன் உரிய விலையை விட அரை, கால் பங்கு பணம் மட்டுமே வசூலிக்கிறார்கள். இங்கே நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்று எடுத்து விட்டால், திருடன் என்று சொல்லி ஜெயிலில் வைப்பார்கள். நூறு, ஆயிரம் பக்கம் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ள பல நவீன வசதிகள் அங்கே லைப்ரரியிலேயே இருக்கிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் அங்கே இருக்கிறது. என்னுடைய புத்தகங்கள் கூட இருக்கிறது. அது ஒரு ஆராய்ச்சிக் கூடம். வாழ்நாள் பூரா உட்கார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கலாம். எவனும் கேட்கமாட்டான். ஆனால் நம் ஷோபா சக்தி என்ன சொல்கிறார் என்றால், ‘நம்மையெல்லாம் அங்கே உள்ளே விடமாட்டான்’ என்கிறார். அவர் அப்படிச் சொன்னவுடன் நூலகத்தின் வாசலிலேயே சாயுங்காலம் வரை உட்கார்ந்து இருந்துவிட்டு திரும்ப வந்துவிட்டோம். மறுநாள் பிரெஞ்சில் எழுதக்கூடிய என் நண்பர் கலாமோகனோடு அந்த லைப்ரரிக்குப் போனேன்.

விஷய ஞானத்தை எடுத்துக் கொண்டால், ஜோதிகா இப்போது முழுகாமல் இருக்கிறார் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்தகக் கடைக்குப் போனால் ரமணி சந்திரன்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த வீட்டிற்குள் போனாலும் சீரியல் ஃபுல் ஸ்விங்கில் ஓடுகிறது. இங்கே தமிழன் எப்படி இருக்கிறானோ அதே போலவே அங்கேயும் இருக்கிறார்கள். ஒரு தமிழர் வீட்டுக்குப் போனேன். அவர் ஈழத் தமிழர் அல்ல. அவரும் அவருடைய மனைவியும் எப்போதாவது தான் தமிழில் பேசிக் கொள்கிறார்கள். அவருக்கு மூன்று குழந்தைகள். அந்த மூன்று குழந்தைகளுக்குமே ஒரு தமிழ் வார்த்தை கூடத் தெரியாது. ஸோ... குடும்பமே பிரெஞ்ச் குடும்பம் போல இருக்கிறது. பெயர்களை மட்டும் தமிழில் வைத்திருக்கிறார். ராமசாமி, முத்துசாமி என்பதுபோல எல்லாம் தமிழ்ப் பெயர்கள். ஆனால் தமிழ் தெரியாது. அவரிடம் நான் ‘ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாமல் பண்ணி விட்டீர்களே’ என்று வருந்திக் கேட்டபோது, அவர் சொன்னார் (இவர்தான் என் நாவலை பிரெஞ்சில் மொழி பெயர்ப்பவர்) ‘தமிழ் தெரிந்து என்ன பண்ணப் போகிறோம். சீரியல் பார்க்கலாம். சீரியலா, அது அவ்வளவும் குப்பை. பள்ளிக் கூடத்தில் கலைவிழா என்று சொல்லிக் கொண்டு ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ என்று இடுப்பை அசைத்து அசைத்து டான்ஸ் ஆடலாம். இது எதுக்கு’ என்றார். மேலும், தமிழ் வீடுகளில் ஐந்து வயதுக் குழந்தை அம்மாவைப் பார்த்து ‘வாடி என் கப்பக்கிழங்கே’ என்ற பாட்டை பாடுகிறதாம். அம்மா என்ன சொல்கிறாள் ‘எப்படி பாடுகிறது பாருங்க என் குழந்தை’ என்று புளகாங்கிதம் அடைகிறாளாம். ‘இந்தத் தமிழ் எனக்கு வேண்டாம். குப்பைக் கலாச்சாரத்தைச் சொல்லிக் கொடுக்கும் இந்த மொழி வேண்டாம் என்று விட்டுவிட்டேன்’ என்றார்.

பிரான்ஸ் எப்படிப்பட்ட தேசம் தெரியுமா? ‘ரேப்’ என்பதே இல்லாத தேசம். இது எனக்கு ஒரு விடுதலை உணர்வைக் கொடுக்கிறது.

தீராநதி: நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டுத் தமிழனும் பிரான்ஸ் தமிழனும் ஒன்று போலவே இருக்கிறார்கள் என்பது புரிகிறது. உலக அளவில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழனும் ஒன்றுபோலவே சிந்திக்கிறானே! அது எப்படி சாரு?

சாரு: அது கண்டுபிடிக்க வேண்டிய ஒரு விஷயம். பாரிஸில் ‘சோர்போன் யுனிவர்சிடி’ இருக்கிறது. அங்கே சேர்ந்து படிக்கலாம். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடியை விட நல்ல யுனிவர்சிடி அது. அங்கே ஃபூக்கோ போன்ற மேதைகள் பாடம் நடத்தி இருக்கிறார்கள். அந்த யுனிவர்சிடிக்கு போய்ப் பார்த்தேன்.

சுதந்திரம் என்று சொல்வோமே, அந்த சுதந்திரத்திற்கே தாய் பூமி பிரான்ஸ்தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அங்கே நம் ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால், இப்போது இறந்து போனாரே எல்.டி.டி.ஈ.யுடைய பிரதிநிதி ஆன்டன் பாலசிங்கம், அவரின் இரங்கல் செய்தியைச் சொல்லும் ஒரு போஸ்டரை ஒரு கடையில் ஒட்டினபோது அக்கடைக்காரர் ‘இங்கே ஒட்டாதேப்பா. இது பல அரசியல் கொள்கைகள் உடையவர்கள் வந்து போகின்ற இடம். அதனால் வேண்டாம்’ என்று தடுத்திருக்கிறார். அன்று இரவே அவரை அடித்து துவம்சம் செய்துவிட்டார்கள்.

தீராநதி: யார் தமிழர்களா?

சாரு: வேறு யார் அடிப்பான். அங்கு போலீஸ்காரன் அடித்தால் நான் முன்பே சொன்னேனே, தேசமே பற்றி எரியும் என்று. இது ஏதோ தமிழனுடைய பழக்கம் மட்டுமல்ல; இது ஒரு இந்திய மனப்பான்மை. உலகம் பூராவும் டீயில் பால் கலக்காமல்தான் டீ குடிக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் பால் கலந்த டீயை உங்களால் குடிக்க முடியும். பால் கலக்காத டீயைக் குடித்தால் இருதயத்திற்கு நல்லது. பால் கலந்த டீ அந்த நல்ல தன்மையை எடுத்து விடும். இப்படி எல்லாவற்றையுமே நச்சாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள் இந்தியர்கள். கேட்டால், பெரிய ஆன்மிக பூமி என்கிறான். இதைக் கிண்டல் செய்தால் ‘உனக்கு தேசப்பற்றே இல்லை’ என்கிறான்.

தீராநதி: எந்த எழுத்தாளனுக்கும் இல்லாத அளவு வாசகர் மத்தியில் உங்களைப் பற்றி மட்டும் பல கதைகள் உலவுகின்றன. நீங்கள் ஒரு ஸ்திரீலோலன், ஆண்மோகி (ரீணீஹ்). அரவாணி, குடிகாரன், நரமாமிசம் தின்பவன் இப்படி ஏகப்பட்ட புனைவுகள். இந்தக் கதைகளுக்கெல்லாம் உங்களின் எழுத்தே ஒரு காரணமாக இருக்குமா?

சாரு: ஆமாம். என்னுடைய எழுத்துதான் காரணம். பொதுவாக நான் ஒரு குழந்தை மாதிரி. என் மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறேன். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. நீங்கள் ‘ராஸலீலா’வைப் படித்தாலே அது புரியும். பயம் இருந்தால் இதை எழுத முடியாது. சமூகத்தினுடைய மதிப்பீடுகள் பற்றி அல்லது புகழ் பற்றி எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இப்படி இவ்விஷயங்களில் ஆர்வம் இல்லாத ஒரு ஆள் அதை வெளிப்படையாகப் பேசும்போது சிக்கல் வருகிறது. அநேகமாக எழுத்தாளர்களிலேயே கம்மியாக குடிப்பவன் நானாகத்தான் இருப்பேன். இந்த விஷயத்தில் ஒரு ராணுவ ஒழுங்கை நான் கடைப்பிடிக்கிறேன். தொட்டுக் கொள்ள ஆலிவ்காய் இல்லை என்றால், அந்த இடத்தில் குடிக்கவே மாட்டேன். நண்பர்கள் எல்லோரும் குடித்தால் கூட வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். பிறகு கலப்படம் இல்லாத உயர்ந்த வகை மது இருந்தால் மட்டுமே குடிப்பேன். பாரிஸிலிருந்து திரும்பிய கொஞ்ச நாட்கள் திடீரென்று குடிக்கவே இல்லை. ஏனென்றால், அச்சமயம் நான் பல மியூசிக் காசட்டுகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இதுவே ஒரு போதையைப்போல இருக்கிறதென்று குடிக்கவே இல்லை. இதுபோல் வெளிப்படையாக நான் பேசுவதால் வருகின்ற பிரச்னைகள் இது. ஒரு நாள் ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது _ அந்த ஆட்டோ டிரைவர் என்னுடைய போட்டோவை எங்கோ பார்த்திருப்பான் போல. ஆனால் என் எழுத்தில் ஒரு வார்த்தை படித்தது இல்லை _ ‘உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா சார்’ என்று தயங்கிக் கொண்டே ஆரம்பித்தான். என்ன விஷயம் என்றதும் ‘நீங்க கண்ணதாசன் மாதிரி குடிச்சிட்டே இருப்பீங்களாமே?’ என்றான். ஆமாம் என்றதும், ‘ஒரு நாளைக்கு எவ்வளவு குடிப்பீங்க’ என்றான். காலையில் பல் துலக்கிவிட்டு ஒரு குவார்ட்டர் அடிப்பேன். பிறகு எழுத ஆரம்பிப்பேன். மதியம் ஒரு குவார்ட்டர், நைட் தனியா இருந்தால் ஒரு குவார்ட்டர், நண்பர்களுடன் இருந்தால் ஒரு ஆஃப் அடிப்பேன் என்றேன். எதைச் சொல்லியும் அவனுக்குப் புரியப் போவதில்லை. நான் குடிக்க மாட்டேன் என்றால், அவன் நம்பப் போவதில்லை. அப்புறம் எதற்கு நீட்டிக்கொண்டு?

இதேமாதிரி செக்ஸ் விஷயத்தில். ஸ்திரீ லோலன் _அது என்ன வார்த்தை என்றே எனக்குப் புரியவில்லை. ஸ்திரீகள் மேல் எல்லோருக்குமே ப்ரியம் இருக்கிறது. கவர்ச்சி இருக்கிறது. அதை நூற்றுக்கு 99 சதவீதம் ஆண்கள் மறைக்கிறார்கள். நான் மறைப்பதில்லை. ஸ்திரீலோலன் என்றால் போகின்ற வருகின்ற பெண்களை எல்லாம் பிடித்து ‘ரேப்’ பண்ணுகின்றவன் கிடையாது. எல்லோரும் மனசுக்குள்ளாகவே அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வெளியே சொல்லிவிடுகிறேன். இதுதான் வித்தியாசம். ரீணீஹ்என்பதை அல்லது லெஸ்பியன் என்பதை ரொம்பத் தீவிரமாக நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். ஒருவன் எப்படி வாழ்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவன் ஒருவனைச் சார்ந்தது. உங்களை அவன் ஒன்றும் பண்ணுவதில்லை. அவன் திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை. இன்னொரு பெண்ணை ஈவ்டீஸிங் செய்யவில்லை. ஆணோடுதான் வாழ்வேன் என்று அவன் சொல்கிறான். அது அவனுடைய சுதந்திரம். ஜனநாயக நாட்டில் அதற்கு இடம் தராமல் சட்டம் போட்டு வைத்தால் அது தப்பு. இதை நான் தட்டிக் கேட்டால், ‘நீ என்ன ரீணீஹ்யா?’ என்கிறான்.

இது பொம்பளைங்களே இல்லாத நாடு. எழுத்தாளன் என்றால் எந்தப் பொம்பளை நம்மை பார்ப்பாள்_ பார்ப்பாங்க என்று திருத்திப் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு பெண்ணியவாதிகள் எல்லாம் ‘அவள், இவள்’ என்று சொல்லிவிட்டார் என்று குதிப்பார்கள். எழுத்தாளன் என்பவனுக்கு இங்கு வேல்யுவே கிடையாது. நான் என்ன நடிகனா? நானும் நடிகர் பார்த்திபனும் நின்று கொண்டிருந்தால் எல்லோரும் ஓடி பார்த்திபனிடம்தான் ஆட்டோகிராஃப் வாங்குவார்கள். வெளிநாடுகளில் வாழும் ஆண்களுக்கு பெண்களோடு வாழ்ந்து வாழ்ந்து அலுத்துவிட்டது. அதனால் அவன் வேறு ஒன்றைத் தேடுகிறான். இங்கே ஒரு இளைஞனும் அவனுடைய காதலியும் செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கல்யாணம்தான் செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் போலீஸ் பிடித்துவிடும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட போய் தங்க முடியாது. உடனே ரெய்டு செய்து விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவார்கள்.

திருமணச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா என்று கேட்பார்கள். இதை பிராக்டிக்கலா நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான இறுக்கமான ஒரு சமூகத்திற்குள் நாம் ஆசைப்படுவது எதுவும் கிடைப்பதில்லை. தடைசெய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. ஆக, இச்சமூகம் என்னை ஸ்திரீலோலனாகத்தான் இருக்க வைக்கிறது. அப்புறம், நாம் எப்போதுமே வாழ்க்கையின் சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே பேசிக்கொண்டு, சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே படைத்துக் கொண்டிÊருக்கிறோம். நான், பிரேதக் கிடங்கில் இருக்கக்கூடிய ஒருவன் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் அவனுடைய வாழ்க்கை என்ன என்று ஆராய்ச்சி பண்ண நினைக்கிறேன். அதை வைத்து ஒரு கதை எழுதினால் உடனே இவன் பிரேதத்தைப் புணருகிறவன் என்றும்; இவனுக்கு நெக்ரோஃபீலியா என்றும் பேசுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும்?

தீராநதி: வழக்கமான வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு நீங்கள் வாழ்வின் வேறு பக்கங்களைப் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள். நீங்கள் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டா?

சாரு: போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னை ஒருவர் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் என்றால் அதைப்பற்றி நான் கொஞ்சம் சந்தேகப்படுகிறேன். ஏனென்றால் இந்தப் பிரகடனங்கள் இலக்கியத்தை உருவாக்காது. கோஸின்ஸ்கி, இடாலோ கால்வினோ, உமபர்தோ எக்கோ போன்றவர்களெல்லாம் இலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உமபர்தோ எக்கோ ஒருவர்தான் தியரிடீஷ்யன். அவர்தான் போஸ்ட்மாடர்னிசம் பற்றிப் பேசுகிறாரே தவிர, மார்க்கேஸ் இருக்கிறாரே அவர் என்ன போஸ்ட் மாடர்னிஸ்ட்டா? அதெல்லாம் கிடையாது. அவர் தன் போக்கில் இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறார். போஸ்ட் மாடர்னிஸம் என்பது விஷயங்களை இன்னும் தெளிவாக இன்னும் ஜனநாயக ரீதியாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி. அவ்வளவுதான். நீங்கள் மாஜிக்கல் ரியலிஸ்ட்டா என்று கேட்டால் மகாபாரதமே மாஜிக்கல் ரியலிஸம்தானே. அதிலும் போஸ்ட் மாடர்னிஸத்திற்கான கூறுகளை நாம் பார்க்கலாம். தெரிதாவின் பல கோட்பாடுகளை கிருஷ்ணனுடைய கதைகளோடு நாம் பொருத்திப் பார்க்க முடியும். போஸ்ட் மாடர்னிஸ்ட், மாஜிக்கல் ரியலிஸ்ட் என்பதெல்லாம் எனக்குப் பொருந்தாது. நான் ஒரு படைப்பாளி அவ்வளவுதான்.

தீராநதி: பின் நவீனத்துவ கோட்பாடுகளை அறிமுகம் செய்வது, அது சம்பந்தமான பிரதிகளை உருவாக்குவது, இதையெல்லாம் நீங்கள் செய்யும்போது, ஏன் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக அடையாளப்படத் தயங்குகிறீர்கள்?

சாரு: இங்கே போஸ்ட் மாடர்னிஸத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதியவர்களே ரொம்பவும் கம்மி. இதில் இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால் இங்கு யார் முதலில் போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக எழுதினார்கள் என்று பார்த்தால், தமிழவன் என்ற ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதியதில் உயிரே கிடையாது. பிறகு எம்.ஜி.சுரேஷ் தன்னை ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக பிரகடனப்படுத்திக் கொண்டு எழுதுகிறார்.

அவரை தமிழவனின் வாரிசு என்றுகூடச் சொல்லலாம். இப்படி உயிரில்லாத சவத்தை உருவாக்குவதால் அவரை வாரிசென்று சொல்கிறேன். முதலில் இலக்கியம் என்றால் அது போஸ்ட் மாடர்னிஸமோ அல்லது வேறு எந்த இஸமோ, அதில் உயிர் இருக்கவேண்டும். உயிர் இல்லாத ஒன்றை எழுத்தென்றே ஒத்துக்கொள்ளமுடியாது. வெறும் லேபிள் ஒட்டி விற்கப்படும் பொருட்களைப் போன்றதுதான் அது. இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்வதற்கே பயமாக இருக்கிறது. அப்புறம் மூன்று தலை உருளும் என்பார்கள். இவர்கள் எல்லாம் உயிர் இல்லாத எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பிரச்சினை. நீட்ஷே, ஃபூக்கோ பற்றி எவ்வளவு காலமாக நிறப்பிரிகையில், படிகளில் எம்.டி.எம், தமிழவன், ரவிக்குமார், அ. மார்க்ஸ், நான் எல்லோரும் சேர்ந்து விவாதித்தோம். அதைப்பற்றிய மொழி பெயர்ப்புகள் செய்தோம். இதெல்லாம் என்னுடைய ஃபிக்ஷன் மேக்கிங்கிற்கு எவ்வளவு தூரம் உதவும்... அதற்கு மட்டுமே இவை. இந்த உலகத்தை எவ்வாறு பார்ப்பது, என்னுடைய கான்செப்ட், விஷன் இவற்றிக்கு இவை மாற்றுப் பார்வையை கொடுத்திருக்கின்றன. அவ்வளவுதான் இவற்றின் முக்கியத்துவம். நான் என்ன போஸ்ட் மாடர்னிஸத்தின் தியரிடீஷ்யனா? இங்கே மொத்தம் படிப்பவர்களே ஆயிரம் பேர்தான். இங்கே அதற்கெல்லாம் ‘ஸ்கோப்’பே கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று சொன்னால் ஓ.கே. இருக்கலாம். நான் அதற்கான லிட்ரேச்சரை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் நிறையப்பேர் இருக்கிறார்கள். அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, கு.பா.ரா., ப.சிங்காரம் இப்படி பலபேர்... கடல் மாதிரியான ஆட்கள் இருக்கிறார்கள். அசோகமித்திரனுக்கு போஸ்ட் மாடர்னிஸம் என்றால் என்னவென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி எங்கேயும் எந்தக் கருத்தும் சொன்னதில்லை.

இங்கே போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் முன்னவர்களைவிட ரொம்ப ரொம்ப ‘வீக்’ என்பதுகூட சரியாகாது; செத்துப்போன ஒரு tமீஜ்t டை உருவாக்குகிறார்கள். இவர்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸத்தை ஒரு tஷீஷீறீஆக, இந்த உலகத்தைப் பார்க்கும் ஒரு அணுகுமுறையாக எடுத்துக்கொள்கிறேன்.

தீராநதி: ஒரு tஷீஷீறீஆக போஸ்ட் மாடர்னிஸத்தைப் பயன்படுத்துகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் சிலர் ‘உங்களுக்கு போஸ்ட் மாடர்னிஸமே தெரியாது. சாரு படிக்காமல் உளறுகிறார்’ என்று சொல்கிறார்களே?

சாரு: நான் புத்தகங்களைப் படிப்பதில்லை என்று சொன்னால் பிறவி மேதை என்று ஆகிவிடும். போஸ்ட் மாடர்னிஸத்தைப் பற்றி ‘மாத்ரு பூமி’யில் ஒரு தொடர் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். அந்தத் தொடர் கட்டுரை பின்னால் புத்தகமாக வெளிவரும். இந்த மாதிரியான புத்தகங்கள் எழுதுவது ரொம்பவும் சுலபம். பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு 400 பக்க புத்தகம் எழுதுவது_இதைவிட சுலபமான வேலை வேறு எதுவும் கிடையாது.

ஆனால், இந்த 400 பக்கத்திற்குப் பின் நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதற்கு உங்களின் வாழ்க்கையையே நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டதுதான் ‘ராஸலீலா’. சொரணையுள்ள ஒரு சமூகத்தில் எழுதி வெளி வந்திருந்தால், என்னை உள்ளே தூக்கிப் போட்டிருப்பார்கள். அதன் வெளியீட்டாளர் மனுஷ்ய புத்திரனிடம் ‘இது வெளிவந்தால் நீங்களும், நானும் சேர்ந்து ஜெயிலுக்குப் போக வேண்டி வரும். தயாரா?’ என்று கேட்டேன். அவரும் ‘நான் தயார். ஆனால், கக்கூஸ் போவது மட்டும்தான் பிரச்னையாக இருக்கும்’ என்றார். அதற்குப் பிறகுதான் நான் அவரிடம் அந்த நாவலைக் கொடுத்தேன். இவ்வளவு சீரியஸாக இருக்கிறோம் நாங்கள். ஏன் தெரியுமா? 400 பக்கத்தில் பின்நவீனத்துவம் பற்றி ஒரு தியரி புத்தகம் எழுதுவது சுலபம் என்றேன். நாங்கள் ஃபூக்கோவைப் பற்றி இருபது முப்பது வருடமாக இங்கே ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறோம். ராஸலீலாவில் தண்டனை என்ற ஒரு வார்த்தை வருகிறதென்றால், உடனே ஃபூக்கோ தண்டனை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று மேற்கோள் காட்டி எழுதி இருப்பேன். ‘ஐ பியர்’ என்பதுதான் ஃபூக்கோவின் முதல் புத்தகம். 100 வருடங்களுக்கு முன்னால் பியர் என்பவன் பத்துப் பதினைந்து கொலைகள் செய்திருப்பான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கும்போது ‘ஐ பியர்’ என்று ஆரம்பித்து நீதிமன்றத்தில் அவனுடைய வாக்குமூலத்தைச் சொல்கிறான். அது அப்படியே கருவூலத்தில் ஆவணமாக இருக்கிறது. அந்த ஆவணத்திற்கு ஃபூக்கோ எடுத்துப் போட்டு அறுபது, எழுபது பக்கத்திற்கு முன்னுரை கொடுத்தார். இதுதான் அவரின் முதல் புத்தகம். இப்படி 50 புத்தகம், 100 புத்தகத்தைப் படித்துவிட்டு அப்படியே எடுத்து எடுத்து எடுத்து 400, 500 பக்கத்திற்கு பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவது என்பது ரொம்பவும் சுலபம். அது ஒரு அகாடமி ஒர்க். ஆனால், நான் ‘ஐ பியரை’ படித்துதான், குற்றம் என்றால் என்ன? ஒரு குற்றவாளியை எப்படி அணுகுவது? சமூகத்தில் குற்றம் எப்படி ஏற்படுகிறது? எப்படி தண்டனை என்பது உருவாகுகிறது? என்பதையெல்லாம் புரிந்து கொண்டேன். நீங்கள் என்ன சொல்லுவீர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பீர்கள். மாதா, பிதா, என்பதையே தண்டனை சிஸ்டத்திற்குள் வைத்து ஃபூக்கோவைப் பார்க்கிறேன். ஏனென்றால், மாதாதான் உங்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறாள். உதாரணத்துக்கு சாதி உணர்வை எடுத்துக் கொள்வோம். இதை உருவாக்குவது அன்னைதான். இதையெல்லாம் நான் தெரிந்து கொண்டது ‘ஃபூக்கோ’வைப் படித்து. எங்களுக்கு எங்கள் அம்மா கொடுக்கின்ற தாய்ப் பாலோடு சாதிய உணர்வு என்பது கலந்து இருக்கிறது. இதைவிட்டு நீ வெளியே வரவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தவன் ‘ஃபூக்கோ’. நான் ஃபூக்கோவைப் படிக்கவில்லை என்று சொன்னால், அப்போது என்ன அர்த்தம்? நானே ஒரு ஃபூக்கோ. நன்றாகத்தான் இருக்கிறது.

தீராநதி: உங்களின் ‘ராஸலீலா’ நாவல் கோணல் பக்கத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகிறது. வழக்கமான நாவல் வடிவத் தன்மையில்லாமல் அது வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்து சரியா?

சாரு: இது ஒரு நல்ல அப்சர்வேஷன் என்றுதான் சொல்லவேண்டும். நான் ஒரு கட்டத்தில் மலையாளத்தில் மூன்று பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். ‘மாத்ரு பூமி’யில் இசை குறித்தான கட்டுரை. ‘ராஸலீலா’ ‘கலா கௌமுதியில்’. ‘மாத்யமம்’ என்ற இதழில் பொதுவான விஷயங்களைப் பற்றியும் அரபி இலக்கியம் பற்றியும் எழுதினேன். அந்த நேரத்தில் ஒரு கட்டுரையை எழுதி இதை ‘ராஸலீலா’வில் சேர்க்கலாமா? இல்லை மியூசிக் கட்டுரையில் சேர்க்கலாமா? என்பதை பிறகுதான் முடிவு செய்வேன். அப்போது அப்படி அப்படி இன்ன இன்னதில் தூக்கி கோர்ப்பேன். நான் எழுதுவதென்னவோ ஒரே விஷயம்தான். அதனால் இதில் ஒரு சௌகர்யம் கிடைத்தது.

மியூசிக் பற்றிய கட்டுரையில் பெரிய பிலாஸஃபர் ஒருவர் ‘பீ’’யைப் பற்றியும் மூத்திரத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருப்பதைப் பற்றி எழுதி இருந்தேன். இது ஒரு சமூகவியல் ஆய்வுக் கட்டுரை. சென்ற மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஆங்கில இலக்கியத்தில் பலப்பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அந்த பிலாஸஃபர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

அந்தக் காலத்தில் ராணிகள், அரசிளங்குமரிகள் எல்லாம் உப்பரிகையிலிருந்து நிலவைப் பார்த்து ரசித்ததைப்போல நிகழ்வுகள் வரும். விக்டோரியா காலத்தைச் சேர்ந்தவர்களின் உடைகளைப் பார்த்தால் கீழே அகண்டு இருக்கும். உள்ளாடை இறுக்கமாக ஓர் உறை போல இருக்கும். பெரிய பெரிய விருந்துகள் எல்லாம் நடக்கும் போது _ குறைந்தது ஒரு விருந்து நிகழ்ச்சி ஐந்து, ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும். அவர்கள் இயற்கை உபாதைகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். அந்தப் பெரிய பெரிய உடைகளை கழற்றுவதற்கே குறைந்தது அரை மணி நேரம் பிடிக்கும். இது ஒரு பெரிய காரியம். உடனே ஆடைகளைக் களைந்துவிட்டு மலஜலம் கழிப்பதென்பது அந்த உடையில் சாத்தியமில்லை. அதனால்தான் அவர்கள் உப்பரிகையில் நின்று கொண்டு ஒன்றுக்கு அடித்திருக்கிறார்கள். நிலவையெல்லாம் ரசிக்கவில்லை என்று அவ்வாராய்ச்சியாளர் கண்டறிந்திருக்கிறார். இதை எப்படி அவர் கண்டுபிடித்தார்? வெறும் ஊகத்தினால் அல்ல; அந்தக் காலகட்டத்தில் வெளியான பத்திரிகை விளம்பரம் ஒன்றை வைத்து இதைக் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார். அந்தப் பத்திரிகை விளம்பரம் என்ன சொல்கிறதென்றால், ஆடைக்குள்ளாகவே ஒரு டியூப்பை பொறுத்தி அதன் மூலம் நீங்கள் சிறுநீர் கழிக்கலாம் என்கிறது.

அந்த வசதிகளுடன் ஒரு புதிய ஸ்கர்ட் விற்பனைக்கு வந்திருக்கிறது என விளம்பரம் சொல்கிறது. உடனே அந்த ஆராய்ச்சியாளன் என்ன நினைக்கிறான்? அப்படியானால் அதற்கு முன் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கிறான். இப்படி விரியும் கட்டுரை அது. நான் இதைப் படிப்பதற்கு முன்னாலேயே இந்தியாவிலுள்ள முக்கால்வாசி அரண்மனைகளுக்கும் கோட்டைகளுக்கும் சென்று இருக்கிறேன். அங்கு பல் துலக்கும் இடம், உப்பரிகை, நீச்சல் குளம், குளியலறை எல்லாம் இருக்கும். ஆக்ரா கோட்டையில் மீன்காரன் ஒருவன் அரண்மனைக்குள்ளாகவே யமுனை நதியோடு மீன் கொண்டுவர ஒரு இடம் இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாட, இசைக் கச்சேரிகள் நடத்த இப்படி பல இடங்கள் இருக்கிறது. ஆனால், எங்கும் கக்கூஸ் மட்டும் இல்லை. அரண்மனைக்குள் எவ்வளவு பெரிய ஜனக்கூட்டம். அவர்கள் எப்படி கக்கூஸ் போய் இருப்பார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது. இப்படி நான் எழுதும் விஷயங்கள் எல்லாமே ஒன்றுதான். எழுதி முடித்த பிறகுதான் இதை நாவலில் சேர்க்கலாம், இதை கட்டுரையாகக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறேன்.

தீராநதி: போர்னோகிராஃபி வகையறா எழுத்துகளுக்கும் உங்களின் எழுத்திற்கும் என்ன வித்தியாசம்?

சாரு: அது உங்களுக்கே தெரியுமே?!

தீராநதி: வாசகனுக்கு விளக்கச் சொல்கிறேன்.

சாரு: ஃபோர்னோகிராஃபியில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று _ கமர்ஷியல் ஃபோர்னோ. அதைத்தான் இங்கு செக்ஸ் புத்தகங்கள் என்று சொல்லி போலீஸ் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறது. அதில் வெறும் வல்காரிட்டி மட்டுமே இருக்கும். எந்த ஃபோர்னோ கலாபூர்வமான அனுபவத்தைக் கொடுக்கிறதோ, அது கிரியேடிவ் ஃபோர்னோகிராஃபி. நான் எழுதுவது கிரியேடிவ் ஃபோர்னோ கிராஃபி கூட கிடையாது.

அலினா ரேயிஸ் என்று ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர் இருக்கிறார். கேத்தி ஆக்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கேத்தியின் ஃபோர்னோவில் ஆன்மீகமும் உண்டு. அதனால் கேத்தியை முழுக்க முழுக்க போர்னோ எழுத்தில் அடைக்க முடியாது ‘புஸ்ஸி’ என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார் கேத்தி. அது போர்னோ வகையைச் சேர்ந்தது. அலினா ரேயிஸ் எழுத்து ஃபோர்னோ வகையைச் சார்ந்தது. இது எல்லாமே ஆர்ட்டிஸ்டிக் ஃபோர்னோவைச் சார்ந்தது. நான் எழுதுவது ஃபோர்னோ வகையையே சார்ந்தது. இல்லை என்று ஏன் சொல்கிறேன் என்றால், என் 700 பக்க நாவலில் 50 பக்கம் மட்டுமே போர்னோ கிராஃபி இருக்கும். ஒரு 1000 சதுர அடி வீட்டில் 100 சதுர அடி அளவுக்கு பெட்ரூம் இருப்பதுபோல்தான் அது. சொல்லப்போனால் ஃபோர்னோவுக்குள் நான் இன்னும் போகவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தீராநதி: ‘செக்ஸைப் பற்றிய பொதுவான மதிப்பீடுகளைத் தாண்டி ஆழ்மன ஏக்கம் என்ற ஒன்றிற்குள் சென்று பிணாத்திக் கொண்டிருக்கிறார் சாரு.’ _ இப்படி ஷோபாசக்தி ஒருமுறை குறிப்பிட்டார். இது ஆழ்மன நிம்மதியின்மையால் எழுகின்ற பிரச்னையா சாரு?

சாரு: பெரிய செக்ஸ§வல் சர்வே ஒன்றை எடுத்தால்தான் இதற்கு பதில் தெரியும். அப்புறம் ஒருவனின் செக்ஸ் அனுபவம் என்பது இன்னொருவனுக்கு பொய்யாகவும், புனைவாகவும்தான் தெரியும். தன்னுடைய செக்ஸ§வல் பார்ட்னர், அதாவது மனைவியின் முழு நிர்வாணத்தைப் பார்த்த இந்தியர்களே இங்கு கம்மி. பெர்லினில் ஒரு இடம் இருக்கிறது. பத்து இருபது பெண்கள் எப்போதும் நிர்வாணமாக அங்கே இருப்பார்கள். அங்கு ஒரு நீச்சல் குளம். நீங்கள் விரும்பினால் அப்பெண்களுடன் குளத்தில் ஜலக்கிரீடை செய்யலாம். இதை நான் எழுதினால் ‘இது மாதிரியெல்லாம் எங்கேயுமே இல்லை’ என்பார்கள். அப்படிச் சொன்னால் ‘போடா பொக்கா’ என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். என்னிடமே ஒருமுறை ஷோபா சக்தி நேரிலேயே சொன்னார். ‘ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் உறவு என்பது நீங்கள் சொல்வது போலெல்லாம் இருக்காது’ என்றார்.

என் நண்பர் மனுஷ்ய புத்திரன் அடிக்கடி கூறுவார்; ‘எவனொருவன் ஒரு கலைப் படைப்பை அணுகும்போது அது உண்மையா, பொய்யா?’ என்று கேள்வி கேட்கிறானோ அவனோடு எனக்கு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை’ என்று. நான் ஒரு கலைஞன். நான் பொய்யை எழுதுவேன்; உண்மையை எழுதுவேன். எதை வேண்டுமானாலும் எழுதுவேன். கலைஞன் என்பவன் உலக மக்களின் சுபிட்சத்திற்காக தன் சட்டைப் பையில் பல உண்மைகளை வைத்து விநியோகித்துக் கொண்டிருப்பவன் அல்ல, உண்மையைச் சொல்வது என் வேலை அல்ல. அதற்குப் பல தீர்க்கதரிசிகளும் உபதேசிகளும் இருக்கிறார்கள்.

மேலும் செக்ஸ் என்பது கடலைப் போன்றது. இந்தப் பூமியில் எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான செக்ஸ் இருக்கிறது. ‘‘நான் எழுதுவது போன்ற செக்ஸ் இல்லை; அது ஃபாண்டஸி’’ என்று கூறுவது மிகவும் பத்தாம்பசலித்தனமானது. ஃப்ரான்ஸில் வசித்தாலும் பத்தாம் பசலிகளுக்கு விடிவே இல்லை என்பதையே ஷோபா சக்தியின் கூற்று நிரூபிக்கிறது. இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், இந்தியாவில் தீவிர இடது சாரியாக உள்ளவரும் மதவாதிகளின் மொழியிலேயே பேசுவதும் சிந்திப்பதும்தான். ஷோபா சக்தியின் மேற்கண்ட கூற்று இங்கே இந்துத்துவவாதிகள் செக்ஸ் பற்றி கொண்டுள்ள அதே பழைய கருத்தையே பிரதிபலிக்கிறது.

சரி, ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலில் ஒரு அப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான பாலுறவு மிக விஸ்தாரமாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரி வீஸீநீமீst உறவுகள் சரீர வேட்கையின் காரணமாகவே நடப்பவை. ஆனால் ‘ம்’ மில் அது ஒரு ‘காதலாக’ சொல்லப்படுகிறது. ஆக, உலகத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா? இதன் மூலம் திருவாளர் ஷோபா சக்தி கூறும் ‘உண்மை’ என்ன?

மேலும் ஒன்று, நான் ஒரு கீஷீனீணீஸீவீsமீக்ஷீ என்ற வகையில் எனக்கு பெண்களைப் பற்றியும், காமத்தைப் பற்றியும், போகத்தைப் பற்றியும் சற்றே அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ‘உள்ளே’ போகப் போகத்தான் ‘கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு’ என்பது தெரிய வருகிறது. எனவே ஷோபா சக்தி போன்றவர்கள் இவ்விஷயத்தில் அடக்கம் காட்டுவது நல்லது.

தீராநதி: உங்களின் ‘நேநோ’ சிறுகதைத் தொகுதி தமிழ் நான்_லீனியர் ரைட்டிங் ஸ்டைலுக்குக் கிடைத்த நல்ல தொகுதி. ஏன் நீங்கள் சிறுகதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கவில்லை?

சாரு: அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். ‘நேநோ’வில் வராத சில கதைகள் என்னிடம் இருக்கிறது. ‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ என்ற கதை ரொம்பவும் முக்கியமான சிறுகதை. இந்தக் கதையை வெளியிடுவதற்குக் கூட வழி கிடையாது. அது எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவேயில்லை. எனக்காக நாகார்ஜுனனே போய் டைப் பண்ணி, புத்தகமாகத்தான் வெளிவந்தது. அதேபோல் நாடகம்...

‘ரெண்டாம் ஆட்டம்’ என்று மதுரையில் ஒரு நாடகம் போட்டோம். நான்தான் அதை கன்சீவ் பண்ணேன். நம் நண்பர்கள் எல்லாம் நடித்தார்கள். நானும் நடித்தேன். எல்லோரையும் அடித்து தூக்கிப் போட்டு மிதித்தவர்கள் எல்லாம் பொதுமக்கள் கிடையாது. நாடகத்தில் பிஹெச்டி வாங்கியவர்கள், சக நாடகக் கலைஞர்கள். சண்டையை விலக்கியவர் மு. ராமசாமி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், சண்டையை மிகத் தீவிரமாக மூட்டிவிட்டவர் அ. மங்கைதான். ‘அடிங்கடா அவனை’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த நாடகம் சம்பந்தமாக நான் 500 பக்கம் உள்ள புத்தகத்தை அகஸ்தோ போவாலைப் பற்றி ‘ஃபாரம் தியேட்டர்’ என்று ‘வெளி’ பத்திரிகையில் மொழி பெயர்த்திருக்கிறேன். இப்படி அடித்தவுடன் அதற்குப் பிறகு நாடகத்தையே விட்டு விட்டோம்.

தொடர்ந்து நீங்கள் செயல் வீரனாக இருக்க வேண்டுமென்றால் அடிவாங்க வேண்டும். நீங்கள் பெரிய ‘கொரில்லா’ மாதிரி இருக்க வேண்டும். அந்த அளவுக்கெல்லாம் சமூகத்தில் நமக்கு இடமே கிடையாது.

தீராநதி: பொது மக்களைவிட எழுத்தாளனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் சக படைப்பாளிகளாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?

சாரு: ஆமாம். நிச்சயமாக கோடிட்டு உறுதியாகச் சொல்கிறேன். பொதுமக்கள் எப்போதும் பாதுகாப்பான ஆட்கள். பொது மக்களிடம் சென்று நீங்கள் நாடகம் போடலாம். அவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. சக படைப்பாளிகள்தான் ஜனநாயக உணர்வே இல்லாத ஆட்களாக இருக்கிறார்கள். நம்முடைய காம்ரேட் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்.

தீராநதி: ஜனநாயகத்தைக் கோரியும், மனித உரிமைகளின் அடி ஆழம் வரை சென்றும் விவாதிக்கும் படைப்பாளிகள் பொதுமக்களைவிட வன்முறையாகச் செயல்படுகிறார்களே, ஏன்?

சாரு: அது எனக்குத் தெரியவில்லை. யார் அதிகமாக ஜனநாயகத்தைப் பற்றி படிக்கிறானோ, அவனே பாசிஸ்ட்டாகி விடுகிறான். ‘ஒருவிதமான ‘ஐரனி’ தான் இது. அல்லது விதி. கம்யூனிஸம் என்பது மிகப்பெரிய ஜனநாயகக் கோட்பாடு. எல்லா மனிதனும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் உயரிய சித்தாந்தம். ஆனால் அது எப்படி பாசிஸமாக மாறியது? உதாரணம்; மாவோ. இது ஏதோ கம்யூனிஸத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆன்மிகத்திலும் நடக்கிறது. ஆன்மிகவாதி என்ன சொல்கிறான். ‘நான் சொல்வது மக்களுக்காக. நான் சொல்வது ரொம்ப ரொம்ப நிஜம்’ என்று அவன் நினைப்பதனாலேயே அதை மற்றவர் மீது திணிக்கப் பார்க்கிறான். இப்படி அதீத ஜனநாயகம் பேசுபவன் சர்வாதிகாரியாகவும், அதீத ஆன்மிகம் பேசுபவன் பாசிஸ்ட்டாகவும் ஆவதெல்லாம் இந்த உள் முரண்களால்தான். இதற்கு நேர்வாழ்க்கையில் உங்களுக்குத் தெரிந்த பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். ஆனால், அது அநாவசியம், வேண்டாம்.

தீராநதி: இளையராஜாவின் இசையை விமர்சித்து கோணல்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள்?’ உங்களின் இசை ரசனை பற்றி விளக்கமுடியுமா?

சாரு: ‘ஆல் இண்டியா ரேடியோவின் சங்கீத்’ சம்மேளன் மூலமாக ரவிசங்கரின் இசைக் கச்சேரிகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து என் இசைத் தேடல் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னாலேயே எங்கள் ஊர் பள்ளி வாசல்களில் கேட்கும் ‘நகரா’ இசை மூலம் என் இசை ரசனையைப் பெருக்கிக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால், இலக்கியத்தைவிட எனக்கு இசையின் மேலும் சினிமாவின் மேலும்தான் ஆர்வம் அதிகம். சினிமா சம்பந்தமாக நான் நிறைய எழுதி இருப்பதால் அச்சந்தேகம் யாருக்கும் எழவில்லை. இசை பற்றி நான் அதிகம் எழுதாதது கூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 25 வருடங்களுக்கு முன்னால் ‘மீட்சி’ இதழில் ‘சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்’ என்ற எஸ்.ராமநாதன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து கர்நாடக இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் உள்ள இணைத்தன்மைகள் பற்றி ஒரு ஒப்பீட்டுக் கட்டுரை எழுதி இருக்கிறேன். ‘ஷங்கர்லால் இசைவிழா’ என்று கணையாழியில் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அதைப் பாராட்டி அப்போது அசோகமித்திரன் கூட ஒரு கடிதம் போட்டார். நான் டில்லியில் இருந்தபோது பல இசைக் கலைஞர்களின் கச்சேரியை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இசை என்றால் அவர்களின் வரம்பிற்குள் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்தான் இருக்கிறது. இசை என்பது உலகம் பூராகவும் இருக்கின்ற ஒன்று. இவற்றையெல்லாம் இசையென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய செவியும் அறிவும் உணர்வும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசனை இல்லாதவர்களெல்லாம் இசை ரசனையே இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.

இளையராஜாவை விட யுவன் ஷங்கர்ராஜா பல மடங்கு இசை ரசனையுள்ளவர். ‘புதுப்பேட்டை’யில் அவர் கொடுத்திருக்கும் இசை பெரிய சிம்பொனி மாதிரி இருக்கிறது. மேற்கத்திய இசையில் ரொம்பவும் ஆழமான ரசனை உள்ளவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதே போல ஏ.ஆர்.ரஹ்மான் ‘குரு’ படத்திற்குப் போட்டிருப்பதும் உயர்தரமான இசை என்று சொல்ல முடியும். நான் எழுதிய இசைக் கட்டுரைகள் ‘கலகம் காதல் இசை’ என்று தொகுக்கப்பட்டு சமீபத்தில் ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. இதுதான் எனக்கும் இசைக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் சான்று. இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கும் மேலாகச் சென்று இசையில் சாதனை செய்தவர்கள் சுமாராக பதினைந்து பேரையும் மறந்துவிட்டு, மறுத்துவிட்டு இவர் இருப்பது நன்றி கெட்டதனம். ஒருவன் தன்னை இசைஞானி என்று கூப்பிட்டால், எனக்கு முன்னால் பதினைந்து ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று தன்னடக்கத்துடன் அவர் சொல்லியிருக்க வேண்டும்.

இளையராஜா கொடுக்கின்ற பேட்டிகளில் எல்லாம் தனக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து உளறிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நான் அவரை விமர்சிக்க வேண்டி இருக்கிறது. ‘பாப் மார்லி’யை குப்பை என்கிறார். கத்தாரை குப்பை என்கிறார். ஆந்திராவில் சென்று கத்தாரை குப்பையென்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

தீராநதி: யுவன் ஷங்கர் ராஜாவின் இசை குறித்து பேசியதால் கேட்கிறேன். இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது அதில் ஒரு மன அமைதியின்மை நிலவுகிறது. அதே யுவன் ஷங்கர்ராஜாவின் இசையைக் கேட்டால் ஒரு விளிம்பு நிலை கலாச்சாரத் தன்மையுடன் கூடிய ஒரு கொண்டாட்டம் பீறிடுகிறது. இது சரியான ஒப்பீடா?

சாரு: யுவனைப் பொறுத்த அளவில் நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால், இளையராஜாவின் இசையில் நீங்கள் சொல்வது போன்ற ஒரு குணாம்சம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை நான் உணர்ந்திருந்தால் அவரைக் கொண்டாடி இருப்பேன். எனக்கு அவரிடம் அப்படி ஒரு குணாம்சமே இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை அதற்குக் காரணம் _ என் எரிச்சல் சார்ந்ததாகக்கூட இருக்கலாம். அவர் செய்கின்ற பல ‘லந்து’களால் என் புலனுணர்வுக்கு அது எட்டாமலேகூட போய் இருக்கலாம். ஒருவேளை உங்களுடைய அனுமானம் சரியாக இருந்தால், அதற்கு அவரின் ஆன்மிகத் தேடல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆன்மிகத் தேடல் இருந்தாலே அது ஒருவித அமைதியையும், அமைதியின்மையையும் ஒருங்கே ஏற்படுத்திவிடும்.

தீராநதி: உங்களுடைய எழுத்துகளில் சொல்லத்தகுந்த அறமாய் ஒரு மெலிதான திராவிட அரசியல் தன்மை இழையிடுவதாகத் தெரிகிறது. அந்தக் குரல் ஒலித்துக் கொண்டேயும் இருக்கிறது. திராவிட அரசியலின் தொடர்ச்சியில் வரும் ஒரு எழுத்தாளனாக உங்களை நீங்கள் உணருகிறீர்களா?

சாரு: இதற்கு முன்னால் அப்படி இருந்த ஒரு எழுத்தாளரை உங்களால் சொல்ல முடியுமா?

தீராநதி: நிறைய இருக்கிறார்கள். குறிப்பாக பிரமிள்?

சாரு: இவ்வளவு அப்ஜெக்டிவ்வாக நான் இதுவரை யோசித்ததில்லை. ஆனால், எனக்கும் திராவிட அரசியலுக்குமான ஒரு தொடர்பு முப்பது வருடமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. இல்லை என்றால் கருணாநிதிக்கு ஒரு கடிதம் என்னால் எழுதியிருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வைத்தே ஒரு நாவல் எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. அதை ஏன் யாரும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது. உலக அளவில் இப்படி எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட ஓர் இயக்கமாக சீலேவில் பெரோன் மூமெண்ட்டை மட்டுமே சொல்லலாம். அதற்கடுத்தது திராவிட இயக்கம்.

வேறு எங்கேயும் இப்படிப்பட்ட தீவிரமான ஒரு வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே ஒரு வீழ்ச்சி இவ்வளவு டிராமாடிக்காக நடந்ததில்லை. சிவாஜி கணேசனும் கருணாநிதியும் ஒரே மேடையில் கட்டித் தழுவிக் கொண்ட காட்சியை உங்களால் மறக்கமுடியுமா? எப்படிப்பட்ட நாடகத் தன்மை கொண்ட காட்சி அது! இவற்றையெல்லாம் தொடர்ந்து மனதில் நான் பதிவு செய்து கொண்டே இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அத்தன்மை என்னிடமும் இருக்கத்தான் செய்யும்.

நன்றி - குமுதம் தீராநதி

டெஸ்டிங்கிற்காக ஒரு மீள்பதிவு.