வைகோ சொன்ன "கதை"

"ஈழத்தில் போர் புரிந்து விட்டு இளவரசன் அருள்மொழிவர்மன் தன் நண்பனான வந்தியத்தேவனுடன் சோழ மண்ணுக்கு கடல் வழியே திரும்பினான். அப்போது வந்தியத்தேவன் வந்த கப்பல் தீப்பிடித்து மூழ்கத் தொடங்கியது. எல்லோரும் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, தன் வசதி, வாழ்க்கையை எல்லாம் மறந்து விட்டு நண்பனுக்காக கடலுக்குள் குதித்தான் அருள்மொழி வர்மன். தன் உயிரை அடகு வைத்து நண்பனைக் காக்கிறான். நட்பென்றால் அதுதான் நட்பு. அப்படிப்பட்ட நட்பு இதயம் கொண்டவர்களும் சோழ மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்"

இது வைகோ தமிழ் இலக்கிய விழாவில் எல்.ஜியை ஓட்டும் நோக்கில் பேசியதாக அறிகிறேன். எல்.ஜியை ஓட்டுவதைப் பற்றி எனக்கு எந்த ஒப்பீனியனும் இல்லை. அதற்கு மேற்கோளாக காட்டிய விஷயம் தான் கொஞ்சம் உறுத்தியது.

கல்கி எழுதியது அப்படியே உண்மை என நம்பும் ஒருவராக நான் வைகோவைப் பார்க்காததால் இந்த விஷயம் ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சிக்கலான நேரத்தில் சொல்லிக்காட்ட கற்பனை விஷயமா உங்களுக்குக் கிடைத்தது வைகோ.

0 comments: