ஜெயாவின் கொள்ளையும், ஸ்டாலின் தாராள மனதும் !

கேபிள் இணைப்புடன் டிவி தருவோம்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் வெறும் கலர் டிவியை மட்டும் தர மாட்டோம், கூடவே கேபிள் இணைப்பும் கொடுப்போம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ¬ஸ்டாலின் கூறியுள்ளார்.

உடுமலைப்பேட்டையில் நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன் என்று ஜெயலிதா கூறினார். ஆனால் எதில் எல்லாம் தமிழகம் இப்போது முதலிடத்தில் உள்ளது தெரியுமா? நீதிமன்றக் கண்டனத்தைப் பெறுவதில் முதலிடம், டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடம், ஊழலில் முதலிடம், அரசு இடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதலிடம் என ஏகப்பட்ட முக்கியமான விஷயங்களில் தமிழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு வந்துள்ளார் ஜெயலலிதா.

2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கூட்டுறவு கடன் தள்ளுபடி ஆகிய அறிவிப்புகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

வெறும் டிவி மட்டும்தானா கேபிள் இணைப்பு கிடையாதா என்று கேட்கிறார்கள். டிவி மட்டும் தர மாட்டோம், கேபிள் இணைப்பும் சேர்த்தே கொடுப்போம். இதெல்லாம் சாத்தியமா என்று ஏகடியம் பேசுகிறார்கள்.

ஜெயலலிதா, சசிகலா கும்பல் அடித்து வரும் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினால் எல்லாமே சாத்தியம்தான் என்றார் ஸ்டாலின்.

ரூ.100 கோடி சைக்கிள் ஊழல்:

முன்னதாக பொள்ளாச்சிபல்லடம் சாலையில் நடந்த திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,

இது சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போர். கடந்த ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.

அரசு ஊழியர்கள், சலுகைகளை கேட்டார்கள், கிடைத்தது என்னவோ எஸ்மா, டெஸ்மா வழக்குகள்தான்.

ஒரே கையெழுத்தில் ஒன்றே முக்கால் லட்சம் அரசு ஊழியர்களை நீக்கினார் ஜெயலலிதா, 10,000க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 72 சாலைப் பணியாளர்கள் வறுமையால் தற்கொலை செய்துகொண்டனர்.

ஒரு தீவிரவாதியைப் பிடிப்பது போல திமுக தலைவர் கருணாநிதியை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.

அதிமுக அரசின் இலவச சைக்கிள் திட்டம் நல்ல திட்டம்தான். அதற்கு பணம் தந்தது மத்திய அரசு.

ஆனால் அந்தத் திட்டத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளார்கள் அதிமுக ஆட்சியினர் என்றார் ஸ்டாலின்.

இதுவும் சோத்தனமான பேத்தனமா???

தயாநிதி மீது ஜெயா டிவியில் சோ பாய்ச்சல்.

தொழிலதிபர் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிநதி மாறன் மிரட்டியதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் 'சோ' ராமசாமி ஜெயா டிவியில் தெரிவித்துள்ள கருத்து:

டாடாவையே தயாநிதி மாறன் மிரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. நாட்டில் யாருமே தொழில் நடத்தக் கூடாது, தங்களைத் தவிர வேறு யாருமே இருக்கக் கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வாறு மிரட்டிப் பணிய வைக்க முனைகிறார்கள்.

தயாநிதி மாறன் அமைச்சராக இருந்து கொண்டு பதவியைத் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ஏற்கனவே துக்ளக்கில் நான் எழுதியிருந்தேன். இதுதொடர்பாக ஏற்கனவே சில தொழிலதிபர்கள் புகார்கள் கூறியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் பகிரங்கமாக வெளியில் சொல்லப் பயப்பட்டார்கள். ஆனால் டாடா இதற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.

நாட்டிலேயே கண்ணியமான, மிகவும் நேர்மையான, மிகப் பெரிய வர்த்தகத்தை நடத்தி வருகிறவர்கள் டாடா குழுமத்தினர். அவர்கள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு எதையும் செய்தார்கள் என்று புகார் கூட வந்ததில்லை.

அப்படிப்பட்ட நிறுவனத்தையே மிரட்டத் தொடங்கியுள்ளார்கள் என்றால் மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்கின்ற திமுக எவ்வளவு தூரம் அந்த வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்து வருகிறது என்பது நிரூபணமாகிறது.

டாடா நிறுவனத்தின் டிடிஎச் திட்டத்தில் 33 சதவீத பங்குகளை அதாவது மூன்றில் ஒரு பங்கை, அதுவும் அடிமாட்டு விலைக்கு தர வேண்டும், நிர்வாக அதிகாரம் தர வேண்டும், முக்கிய முடிவுகளை எடுக்கிற அதிகாரங்களும் தர வேண்டும் என்று தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் கேட்டுள்ளனர். ஆனால் இதை ஏற்க டாடா நிறுவனம் மறுத்து விட்டது.

இதையடுத்து தயாநிதி மாறன், டாடாவை அழைத்து உங்களது பிசினஸையே தொலைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அப்புறமும், அவர் மசியவில்லை. இதனால் டாடா நிறுவனத்தின் பங்குதாரரான முர்டோச்சை அழைத்து பேசியுள்ளார் தயாநிதி மாறன். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மறுத்து விட்டார்.

முர்டோச் உலகின் முன்னோடி தொழிலதிபர்களில் ஒருவர், டிவி, பத்திரிக்கை என பல்வேறு தொழில்களை நடத்துபவர். எத்தனையோ நாட்டு அமைச்சர்களை பார்த்தவர். ஆனால் அந்த உலக அமைச்சர்களுக்கெல்லாம் பெரிய அமைச்சராக நடந்து கொண்டுள்ளார் தயாநிதி மாறன்.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கலைஞர் குடும்பத்தினர் வேறு என்னதான் செய்ய மாட்டார்கள்?. இங்கே ஆட்சிப் பொறுப்பு இல்லை என்பதுதான் அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக உள்ளது. வேறு யாரும் பிசினஸ் செய்யக் கூடாது, எதைச் செய்தாலும் அதில் 50 சதவீதம் ஷேர் கொடு என்று மிரட்டலாம்.

இப்படித்தான் கேபிள் டிவிக்காரர்களை மிரட்டியே சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை பெரிதாக்கினார்கள். பின்னர் ராஜ் டிவி மீதும் புகார் வந்தது.

அரசியல்வாதிகள், பதவிக்கு வந்த பின்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்வார்கள். ஆனால் தங்களுக்காக மட்டுமல்லாது, மற்றவர்கள் வாழக் கூடாது, நாங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். பிசினஸ் என்றால் அது எங்களது குடும்பம் மட்டும்தான் என்று தயாநிதி மாறன் புறப்பட்டிருக்கிறார். இது மிகவும் விபரீதமான ஒரு விஷயம்.

பொருளாதார தாராளமயமாக்கல் என்கிறோம், தனியார் முதலீடுகளுக்காக மெனக்கெடுகிறது மத்திய அரசு. இதுகுறித்து மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் தினம் தினம் ஏதாவது பேசி வருகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் தொலைத்து விடுவேன் என்று தயாநிதி மாறன் போய்க் கொண்டிருக்கிறார்.

இவர்கள் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் விபரீதத்திற்குத் தடையே இல்லாமல் போய் விடும்.

வருகிற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் இவர்களது செல்வாக்கு மங்கி விடும். தயாநிதி மாறன் டாடாவை மிரட்டும் அளவுக்கு வர முடியாது. சோனியா காந்திக்கு, தமிழக முதல்வர் மீது உள்ள கோபத்தின் காரணமாகவே, திமுகவுக்கு பெரிய செல்வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய செல்வாக்கு பெயரளவில்தான், ஓட்டளவில் இல்லை, தேர்தலில் மக்கள் ஆதரவு கிட்டவில்லை என்று மக்கள் காட்டி விட்டால், மத்தியிலும் இவர்களது செல்வாக்கு தானாகவே மங்கி விடும். அது நாட்டுக்கு நல்லது, இல்லையென்றால் யாரையும் வளர விட மாட்டார்கள், தமிழகத்தையும் மிரட்டுவார்கள் என்றார் சோ.

மைலாப்பூரில் சு.சுவாமி பொதுக்கூட்டத்தில் ஜனக்கூட்டம்

ஆளே இல்லாவிட்டாலும் சு.சுவாமி பிரச்சாரம்!



நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து சுப்பிரமணியம் சுவாமி பிரச்சாரம் செய்தார். அவர் கூறியதாவது:

வருடத்துக்கு ரூ. 6,000 கோடி அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நகரம் திருப்பூர். ஆனால், நகராட்சிக்கு ரூ. 40 கோடி மட்டுமே வரி கிடைக்கிறது. இந்தப் பணத்தை வைத்து திருப்பூருக்கு வேண்டிய பணிகளை செய்ய முடிவதில்லை.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாமல் திருப்பூர் மிக மோசமாக காட்சியளிக்கிறது. பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் இதை மாற்றிக் காட்டுவோம். இந்த நகருக்குத் தேவையானது வரும்.

உலக வர்த்தக அமைப்புகளோடு இணைந்து திருப்பூரை வளமாக்கிக் காட்டுவோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் குட்டிச் சுவராக்கியவர் ஜெயலலிதா. நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும்.

ஜெயேந்திரரைக் கைது செய்ய ஜெயலலிதாவை மன்னிக்கவே கூடாது. இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

கூட்டமே இல்லாவிட்டாலும்..

முன்னதாக நேற்று சென்னை மைலாப்பூரில் ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை ஆதரித்து சுப்பிரமணியம் சுவாமி பிரச்சாரம் செய்தார்.

சுவாமிக்கு பாதுகாப்புக்கு வந்த 10 போலீசார், ரோட்டோரம் கிட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 சிறுவர்கள், ரோட்டில் நின்று கொண்டிருந்த சுமார் 10 பேர் என மொத்தமே சுமார் 20 பேர் தவிர சுவாமியைத் திரும்பிப் பார்க்க ஆளே இல்லை.

கேட்க ஆளே இல்லாவிட்டாலும் விடாமல் பிரச்சாரம் செய்தார் சுவாமி.

ஜெவிடம், நான் ரெடி, நீங்க ரெடியா? சிதம்பரம் கேள்வி

ஜெயலலிதாவின் நகைகள்: ப.சிதம்பரம் கேள்வி

சுனாமி நிதி முறைகேடுகள் குறித்து பொது மேடையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் விவாதிக்க நான் தயார், அவர் ரெடியா என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சவால் விட்டுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில் நிதியமைச்சர் என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை. அவர் அலுவலகத்திற்குப் போயே ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

சுனாமி நிவாரண நிதி குறித்து முதல்வர் கூறும் தகவல்கள் எல்லாம் பொய்யானவை, தவறானவை. இதுகுறித்து நான் பொது மேடையில் ¬தல்வருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன், அவரும் தயாரா என்பதைச் சொல்லட்டும்.

சுனாமி நிதி குறித்து முதல்வருக்கு தரப்படும் தகவல்கள் சரியா, தவறா என்பதைக் கூட அவர் பகுத்துப் பார்க்காமல் பேசி வருகிறார். அவருக்கு இதுதொடர்பாக புள்ளி விவரங்களை எழுதிக் கொடுக்கும் அதிகாரிகள் யார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

வேட்பு மனு தாக்கல் செய்தபோது ஜெயலலிதா கொடுத்த சொத்துக் கணக்கு ஆவணத்தில், வழக்கு இருப்பதால் நகைகளின் மதிப்பு தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

சொத்துக் கணக்கை காட்டும்போது நகைகளின் மதிப்பும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். தெரியாது என்று சொல்வதை ஏற்க முடியாது என்று கூறினார் சிதம்பரம்.

ராணிமுகர்ஜியும் இந்தி தெரியாத தமிழ்நாட்டு மக்களும்

இந்தி நடிகை ராணி முகர்ஜி கோவையில் பாஜக வேட்பாளர்களைஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளார்.

அதிமுக மற்றும் திமுக சார்பில் ஏராளமான நடிகர், நடிகைகள் பிரசாரக் களத்தை கலக்கி வருகின்றனர். இப்போது பாஜகவும் கலையுலகினரை பிரசாரத்தில் இறக்கி விட்டுள்ளது.

இந்தியிலிருந்து நடிகை ராணி முகர்ஜி தமிழக பிரசாரத்திற்கு வரவுள்ளார்.

நாளை கோவை வரும் ராணி முகர்ஜி தொண்டா¬த்தூரில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் சின்னராஜுவை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.

அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மே 1ம் தேதி இதே தொகுதியில் பிரசாரம் செய்கிறார். தொண்டா¬த்தூர் தொகுதியில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராணி முகர்ஜி தமிழகத்தின் வேறு பகுதிகளுக்குப் போவாரா என்பது குறித்துத் தெரியவில்லை.


இதைப் பார்த்ததும் திருவிளையாடலில் பாலையா சொல்வார்,

என்னாடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று அது தான் நினைவில் வந்தது.



நடிகைகளின் பிரசாரம்: தா.பாண்டியன் வேதனை

வள்ளுவர் வாழ்ந்த தமிழகத்தில், ராஜாஜி போன்ற தலைவர்கள் ஏறிய மேடைகளில் இன்று நடிகைகள் பிரசாரம் செய்யும் அளவுக்கு தமிழக அரசியல் தரம் தாழ்ந்து விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் வருத்தத்துடன் கூறினார்.

விளாத்திகுளம் திமுக வேட்பாளர் ராஜாரமை ஆதரித்து தா.பாண்டியன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

சிந்தித்து ஓட்டுப் போடுங்கள். இன்னும் 12 நாள்தான் உள்ளது, உங்களது தலையெழுத்தை தீர்மானிக்க.

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் இது. ராஜாஜி போன்ற தலைவர்கள் ஏறிய மேடைகளில் இன்று கவர்ச்சி சொட்டசொட்ட நடிகைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். இவற்றைப் பார்க்கும்போது வேலைக்கே போகாமல் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலத் தெரிகிறது.

அந்த அளவுக்கு அள்ளி வீசுகிறார்கள் என்றார் தா.பாண்டியன்.

ஜெ. ஒரு பயங்கர சர்வாதிகாரி:

இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பர்தான் திருவாரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில்,

கிட்டத்தட்ட 1 லட்சத்து 75,000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. இப்படி ஒரு சம்பவம் இந்திய வரலாற்றில் நடந்ததே இல்லை.

என்ன முதல்வர் இவர்? எனது 60 ஆண்டு கால தொழிற்சங்க வாழ்வில் இப்படி ஒரு கொடூரமான நிகழ்வை, சர்வாதிகார முதல்வரை நான் பார்த்ததே இல்லை.

முகம்மது பின் துக்ளக், முகம்மது பாதுஷா போன்றவர்கள் போல நடந்து கொள்கிறார் ஜெயலலிதா.

இப்படி ஒரு முதல்வர் தமிழகத்திற்கு மீண்டும் வரக் கூடாது. எனவே தமிழக மக்கள்வ விழிப்போடு இருந்து திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பர்தான்.

ப.சி புள்ளி விவரமும் ஜெயாவின் காதில் வரும் புகையும்

ப.சி தரும் புள்ளி விவர டென்சன்ஜெ. பாய்ச்சல்

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகவும் மத்திய அரசால் அளிக்கப்பட்ட உதவிகள் குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டு வருவாத முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகவும் அளிக்கப்பட்ட உதவி குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

சிதம்பரத்தின் பசப்பு, பாசாங்கு வார்த்தைகளால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் வேதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற வலி தெரியாமல் மேட்டுக்குடி பிரபுத்துவ மன நிலையோடு பொய்க் கூற்றுக்களை வேடிக்கையாக வீசிக் கொண்டே போகிறார்.

சொன்னதையே சொல்லும் கிளிப் பிள்ளை போல தமிழக அரசுக்கு மத்திய அரசு சுனாமி நிவாரணத்துக்காக ரூ. 5,025.56 கோடி வழங்கியதாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பேசி வருகிறார்.

அவரது கபடத்தனத்தை நான் சட்டமன்றத்திலேயே தோலுரித்துக் காட்டினேன். தமிழக அரசு பெற்ற கடனைக் கூட மத்திய அரசு வழங்கியது மாதிரி பொய்க் கதை கட்டி வருகிறார் சிதம்பரம்.

மத்திய அரசு அளிப்பதாக உறுதியளித்த தொகை ரூ. 2,347.19 கோடி. ஆனால், தந்தது வெறும் ரூ. 820.31 கோடி மட்டுமே. இதன்மூலம் தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார் சிதம்பரம்.

அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை தமிழக அரசு ஒரு வீடு கூட கட்டித் தரவில்லை என்றும் கூறியிருக்கிறார் சிதம்பரம். ஆனால், மாநில அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதுவரை 7,835 வீடுகளைக் கட்டி உள்ளன (தமிழக அரசு மட்டும் கட்டிய வீடுகள் எத்தனை? இதில் ஏன் தன்னார்வ நிறுவனங்கள் கட்டிய வீடுகளையும் தமிழக அரசு தனது கணக்கில் சேர்க்க வேண்டும்??) என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

சிதம்பரத்தின் பிரச்சார பாணி:

இதற்கிடையே ப.சிதம்பரம் தனது ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும், கையில் பேப்பருடன் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட நிதி, கடன் தொகை, மானியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கிடைக்கச் செய்த கடன் தொகை, இதில் தமிழக அரசு பயன்படுத்திய நிதி, பயன்படுத்தாத நிதி என புள்ளி விவரங்களுடன் விளக்கிக் கூறி வருகிறார்.

நர்சரி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவது மாதிரி சிக்கலான நிதி விஷயங்களை மிக எளிøயாக விளக்கி புட்டுப் புட்டு வைத்து வருகிறார் சிதம்பரம். இது மக்களிடையே எளிதாகவும் ரீச் ஆகி வருகிறது.

குறிப்பாக கடலூர் போன்ற சுனாமி பாதித்த பகுதிகளில் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இதுவரை ஒரு வீடு கூட கட்டித் தரவில்லை என்பதை தனது பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தினார் சிதம்பரம். அவரது பேச்சுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

ஜெ. குழப்புவது ஏன்?

இந் நிலையில் தான் ஜெயலலிதாவிடம் இருந்து பாய்ச்சல் அறிக்கை பறந்து வந்துள்ளது. ஆனால், அதில் கூட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு கட்டிய வீடுகள் எத்தனை என்ற விவரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசும் 'சேர்ந்து' 7,935 வீடுகள் கட்டியுள்ளதாக பொத்தம் பொதுவாகவே கூறியுள்ளார் ஜெயலலிதா.

உண்மையிலேயே அரசு வீடுகளைக் கட்டித் தந்திருந்தால் அந்த எண்ணிக்கையை மட்டும் தெளிவாக, குழப்பாமல் சொல்லிவிடலாமே?

திமுக 41% அதிமுக 36% - புதுசு கண்ணா புதுசு

திமுக 41% அதிமுக 36%: புதிய கருத்துக் கணிப்பு

தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து குட்வில் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

இது குறித்து கருத்துக் கணிப்பை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் ஜோ அருண், ஜெகத் காஸ்பர் ராஜா ஆகியோர் கூறியதாவது:

160 தொகுதிகளில் நாங்கள் கருத்துக் கணிப்பை நடத்தினோம். தொகுதிக்கு 100 பேர் வீதம் மொத்தம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 3 தொகுதிகளில் நடத்தப்பட்ட கணிப்பில் தவறுகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் அதை நீக்கிவிட்டு 157 தொகுதிகளில் மட்டும் எடுத்த சர்வேயை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம்.

இதில் 56 சதவீதத்தினர் கிராமப் பகுதியினர் மற்றும் பெண்கள். மேலும் 15 சதவீதம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள்.

இந்தக் கருத்துக் கணிப்பு ஏப்ரல் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது.

எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள், யார் முதல்வராக வேண்டும் போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

அவர்கள் அளித்த பதிலை வைத்து திமுக கூட்டணிக்கு 41.09 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 36.07 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 49 சதவீதத்தினர் கருணாநிதியையும் 39 சதவீதம் பேர் ஜெயலலிதாவையும் தேர்வு செய்துள்ளனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 2 ரூபாய்க்கு அரிசி என்ற திட்டத்தை 65 சதவீதம் பேர் வரவேற்றனர். இலவச கலர் டிவி அறிவிப்புக்கு 57 சதவீத ஆதரவு கிடைத்தது.

சர்வே நடந்த 157 தொகுதிகளில் 102ல் திமுக கூட்டணிக்கும், 53 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கும் மேலும் 2ல் பிற கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது தெரியவந்தது.

இதை மாதிரியாக வைத்துக் கொண்டால் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 149 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 83லும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

தமிழகததில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என 54 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வைகோவால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு 65 சதவீதம் பேர் இல்லை என்றே பதிலளித்துள்ளனர்.

இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

யார் இவர்???

வட்டத்திற்குள் இருப்பவர் யார்?



நோ க்ளூஸ்

சிங்கத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள் - கருணாநிதி

சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தி¬க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கரூரில் இன்று செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், காவிரி நடுவர் மன்றத்தின் புதிய உத்தரவு காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே, தீவிரப் பிரசாரத்திற்கு இடையேயும், சென்னையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 4ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிட¬ம் இதுகுறித்து பேசப்படும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் மத்திய அரசு தலையிடுவது அவசியமாகியுள்ளது.

கடந்த சட்டசபை இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஜெயலலிதா, ரேஷன் அரிசியின் விலையை ரூ. 6 ஆக உயர்த்தினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையடுத்து அதை ரூ. 3.50 ஆக குறைத்தார்.

இன்னும் விலை குறைவாக ரேஷன் அரிசி வழங்கப்பட÷ வண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் கிலோ அரிசி ரூ. 2 என்று கூறியுள்ளோம். அதை ஆட்சிக்கு வந்த பின்னர் நிச்சயம் நறைவேற்றுவோம்.

வரும் சட்டசபைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். 200 தொகுதிகள் குறையாமல் வெற்றி பெறுவோம் என்றார் கருணாநிதி.

சிங்கத்துக்கு தடையா?:

முன்னதாக நேற்று முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் சீமானை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் கருணாநிதி. அவர் பேசுகையில்,

சொன்னதைச் செய்வோம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறோம். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம். நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் நிச்சயமாக வழங்கப்படும்.

தாய்மார்களுக்கு பொழுதுபோக்க கலர் டிவி தரப்படும். மொத்தமாக கலர் டிவியை வாங்கும் போது அதன் விலை 2,000 ரூபாயாகத்தான் இருக்கும். கலர் டிவியை வாங்கும் திட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுதான் அமல்படுத்தும்.

பெண்களுக்கு திருமண உதவித் தொகை ரூ. 10,000 வழங்கப்பட்டு வந்தது. அதை பின்னர் வந்த அதிமுக அரசு ரத்து செய்து விட்டது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அத்தொகையை ரூ. 15,000 ஆக உயர்த்திக் கொடுப்போம்.

தம்பி கார்த்திக் இன்று படாதபாடு பட்டு வருகிறார். அவர் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். ஆனால் அவர்களை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டுகிறார்கள்.

படாதபாடு படுத்துகிறார்கள். சிலர் ஓடி ஒளிகிறார்கள், சிலர் கடத்தப்படுகிறார்கள், ஒருவர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் கூட அக்கட்சி வேட்பாளரை வாபஸ் பெற வைத்துள்ளனர். கார்த்திக் கட்சியின் சிங்கம் சின்னத்தைப் பார்த்துத்தான் இப்படிப் பயப்படுகிறார்கள்.

நாட்டில் சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக் கூடாதா? சிங்கம் சின்னத்தைத் தடை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

வெட்டுவேன், குத்துவேன் என்று பார்வர்ட் பிளாக் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள்.

கார்த்திக் என்ற வாலிபருக்காக, சாதாரண நடிகருக்காக பயந்து போய், போலீஸாரையும், குண்டர்களையும் ஏவத் துணிந்துள்ள இந்த அரசு நீடித்தால் நாடு என்னவாகும் என்பதை எண்ணிப் பாருங்கள் என்றார் கருணாநிதி.

'கணிப்புக் கருத்தில்' தவறில்லை:

பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

திமுகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளதாகக் கூறுகிறீர்கள். அதைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள், அதாவது கணிப்புக் கருத்து. இதில் தவறில்லை. மக்கள் கருத்துதான் எல்லாவற்றையும் விட முக்கியம். மக்கள் கணிப்பு எங்கள் பக்கம்தான். 200க்கும் மேல் வெற்றி உறுதி.

நாங்கள் வன்முறையைத் தூண்ட ¬யற்சிப்பதாக புகார் கூறினார் ஜெயலலிதா. அதை அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக எதிர்த்ததால் இப்போது அதுகுறித்துப் பேசுவதை விட்டு விட்டார்.

மதுரையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தியுடன், நான் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசவுள்ளனர் என்றார்.

20 பா.பி வேட்பாளர்கள் மாயம்: அதிமுகவினர் கடத்தல்?

கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களைக் காணவில்லை என்று தெரிகிறது. அவர்களை அதிமுகவினரும் போலீசாரும் தூக்கிக் கொண்டு போய்விட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே ஊட்டியில் எனது குடும்பத்தினரை சிபிசிஐடி போலீஸார் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர் என்று நடிகர் கார்த்திக் புகார் கூறியுள்ளார்.

கார்த்திக் கட்சி வேட்பாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அதிமுக தரப்பு கடும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. இந்த மிரட்டலால் ஒரு வேட்பாளர் தற்கொலையே செய்து கொண்டார்.

அதே போல ஆண்டிப்பட்டியில் முத்துராமலிங்கத் தேவரின் சிங்கம் சின்னம் போட்டியிட்டால் தங்கள் நிலைமை கவலைக்கிடமாகி விடும் என்பதால் பார்வர்ட் பிளாக் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாங்கிவிட்டது அதிமுக.

அங்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்யவிருந்த கார்த்திக் திடீரென காணாமல் போய் (கடத்தப்பட்டு??) மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகே வெளியில் வந்தார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த பார்வர்ட் பிளாக் கட்சி கூட்டத்தில் பல்வேறு பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்தன.

கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சி மொத்தம் 64 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். இதில், திருமங்கலம் தொகுதி வேட்பாளர் செந்தில் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

20 வேட்பாளர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கு சென்றார்கள், யாரேனும் கடத்தினார்களா என்று தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து மீத¬ள்ள 43 வேட்பாளர்களையும் பத்திரப்படுத்த கார்த்திக் முடிவு செய்தார். இதற்காக ஊட்டியிலிருந்து அவர் மதுரை வந்தார்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள தனமணி திருமண மண்டபத்திற்குத் தனது கட்சியின் வேட்பாளர்கள் 43 பேரை வரவழைக்க உத்தரவிட்டார். அதன்படி அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.

கல்யாண மண்டபத்திற்கு வந்த கார்த்திக் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது வேட்பாளர்கள் அனைவரும் நீங்கள் எங்களது தொகுதிகளுக்குப் பிரசாரம் செய்ய வர வேண்டும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறிய கார்த்திக் மீண்டும் உங்களை சந்திகிகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவர் போன பின்னர் மண்டபத்திற்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்கள் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர். உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும், வெளியில் இருந்து யாரும் உள்ளே போகாமலும் அவர்கள் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டனர்.

அதிமுகவினரால் தங்களது வேட்பாளர்கள் கடத்தப்படாமல் பாதுகாக்கவும், வேட்பாளர்கள் தவறான முடிவுக்குப் போகாமல் தடுக்கவுமே இந்த நடவடிக்கை என கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், பிரசாரம் செய்ய முடியாத வகையிலும், தொகுதிப் பக்கம் நடமாட முடியாத வகையிலும் எங்களது கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்றனர். யார் மிரட்டுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட மிரட்டல் காரணமாகவே செந்தில் தற்கொலை செய்து கொண்டார். எனது குடும்பத்தினரைக் கூட மிரட்டியுள்ளனர்.

ஊட்டியில் எனது வீட்டுக்குப் போன் செய்து சிபிசிஐடி போலீஸார் என்று கூறி மிரட்டியுள்ளனர். உசிலம்பட்டியில் மட்டும் எங்களுக்கு சிங்கம் சின்னம் கிடைக்கவில்லை. மற்ற 63 தொகுதிகளிலும் நாங்கள் சிங்கம் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

எங்களை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம். சில விஷயங்களை (தான் கடத்தப்பட்டது) வெளியில் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் சட்டம் ஒழுங்குக்கு பாதகம் ஏற்படும். நாங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டோம்.

எனவே மதுரை ஆதீனம் போன்றவர்கள் என்னைச் சுற்றி வரத் தேவையில்லை என்றார் கார்த்திக்.

இதன்மூலம் மதுரை ஆதீனம், கார்த்திக்கை தொடர்ந்து விரட்டிக் கொண்டிருப்பது தெளிவாகிறது.

மிரட்டவில்லை: தேவர் பேரவை இதற்கிடையே பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்களை நாங்கள் மிரட்டவில்லை. கார்த்திக்தான் முக்குலத்தோர் மக்களை குழப்பி வருகிறார் என்று தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் சீனிச்சாமித் தேவர் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முக்குலத்தோர் சமுதாயத்தால் பெரிதும் மதிக்கப்படுகிற மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக், முக்குலத்து மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு இளைஞர்கள் பலியாகி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுகவுடன் கூட்டணி என்று ஆரம்பத்தில் கூறி வந்த கார்த்திக், சந்தானம் எம்.எல்.ஏ.வுடன் சேர்ந்து எளிதாக கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு திடீரென திமுக பக்கம் தாவினார் கார்த்திக். அவர்களுக்கு ஆதரவாக இப்போது செயல்பட்டு வருகிறார்.

முக்குலத்தோர் சமுதாயம் ஒற்றுமையுடன் திகழ முத்துராமன் பாடுபட்டார். ஆனால் அவரது புதல்வர் கார்த்திக்கோ, தனது தந்தையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதன் பின்னணியில் திமுக உள்ளது. இதை தேவர் பேரவை முறியடிக்கும்.

தனது கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக கார்த்திக் கூறுவதில் துளியும் உண்மை இல்லை. அந்த வேலையில் நாங்கள் ஈடுபடவில்லை. ஆனால் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் பார்வர்ட் பிளாக் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றதில் எங்களது பங்கு உள்ளதை நாங்கள் மறுககவில்லை.

அதிமுக மீண்டும் ஜெயிக்க வேண்டும், அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். கார்த்திக் பின்னால் இளைஞர்கள் தவறான பாதையில் போய் விடக் கூடாது என்பதற்காக கடுமையாக பாடுபட்டு வருகிறோம் என்றார் சீனிச்சாமித் தேவர்.

சுப்பிரமணிய சுவாமிக்கு தர்ம அடி போட்ட காங்கிரஸார்

உத்தரப் பிரதேசத்தில் சு.சுவாமிக்கு அடி, உதை
ஏப்ரல் 22, 2006

ரே பரேலி (உத்தரப் பிரதேசம்):

ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஆட்சேப மனுவைக் கொடுக்கச் சென்றபோது இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களால், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டார்.




காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரே பரேலி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந் நிலையில் அவர் குறித்த ஒரு ஆட்சேப மனுவைக் கொடுக்க ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ¬ரே பரேலி சென்றார்.

கட்சியின் உ.பி. மாநலத் தலைவர் சங்காத்கருடன் ரே பரேலி தொகுதி தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு சுவாமி சென்றார்.

ஆனால் அலுவலகத்திற்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. இவர்களை வழிமறித்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சுவாமியையும், மற்றவர்களையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

இதனால் சுவாமியும் மற்றவர்களும் திரும்பினர். திரும்பும் வழியில் சுவாமியையும் மற்றவர்களையும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர். சுவாமிக்கு முகத்திலும் முதுகிலும் அடி விழுந்தது.

இதையடுத்து காருக்குள் ஓடிச் சென்று அமர்ந்தார் சுவாமி. ஆனால், அவரை வெளியே இழுத்து அடிக்க காங்கிரசார் முயன்றனர். இதைத் தொடர்ந்து சுவாமியும் மற்றவர்களும் வேக வேகமாக அங்கிருந்த கிளம்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து சுவாமி கூறுகையில், நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னை வெளியே இழுத்து அடிக்க முயன்றனர், கொலை செய்யவும் முயன்றனர்.

ரே பரேலி தொகுதியில் அராஜகம் நிலவுகிறது. அங்கு ராணுவத்தைத்தான் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். என் மீதான தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்பேன்.

நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்குப் போடுவேன் என்றார் சுவாமி.

கலாநிதி கொலை மிரட்டல் - சரத் விடும் கரடி

என்னையும், எனது மனைவி ராதிகாவையும் 'ஃபினிஷ்' செய்து விடுவதாக சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தாக நடிகர் சரத்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.


அதிமுகவில் சேர்ந்துள்ள நடிகர் சரத்குமார், சென்னையில் முதலில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் நேற்று தூத்துக்குடிக்குச் சென்ற சரத்குமார் அம்மாவட்டத்தில் சூறாவளிப் பிரசாரத்தைத் தொடங்கினார்.

திருச்செந்தூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கலாநிதி மாறன் குறித்து பரபரப்புப் புகாரைக் கூறினார்.

சரத் பேசுகையில், திமுகவில் இருந்தபோது, நான் பட்ட அவமானங்கள் ஒன்று, இரண்டல்ல. அத்தனையையும் நியாய, தர்மத்திற்காக பொறுத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை. கலைஞரிடம் கொட்டித் தீர்த்தேன்.

அவரை சந்தித்து விட்டு வந்த பிறகு எனக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. பேசியது யார்? கலாநிதி மாறன். என்னிடம் பேசியது போல எனது மனைவி ராதிகாவிட¬ம் பேசியுள்ளார் கலாநிதி மாறன்.

அன்று இரவு என் மனைவி, அவரை பற்றி நான் ஒரு விஷயம் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மிகவும் தைரியமான பெண்மணி அவர், ஆனால் அன்று இரவு அவர் என்னிடம் கதறிக் கதறி அழுதார். அவர் அழுது நான் அன்றுதான் பார்த்தேன்.

ராதிகாவிடம் கலாநிதி மாறன் சொல்லியுள்ளார், அவரை பத்திரமாக இருக்கச் சொல்லு, இந்த விளையாட்டை என்னிடம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் மிரட்டியுள்ளார்.

இன்னும் என்னென்னவோ சொல்லி மிரட்டியுள்ளார். இதைக் கேட்டதும் ராதிகா பயந்து போய் விட்டார். கதறி அழுதபடி என்னிடம், நீங்கள் உடனே கலாநிதி மாறனுக்குப் போன் செய்து மன்னிப்பு கேளுங்கள்.

இல்லாவிட்டால் என்னைத் தொழில் செய்ய விட மாட்டார்கள், உங்களையும் ஃபினிஷ் செய்து விடுவார்கள், நம்மை பிரித்து விடுவார்கள் என்று கதறிக் கதறி அழுதார்.

அவ்வளவு தைரியம் மிக்க ராதிகா அப்படிக் கதறி அழுது பயந்து போய் என்னிடம் கெஞ்சுகிறார் என்றால் எந்த அளவுக்கு அவர்கள் மிரட்டியிருப்பார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இன்று தயாநிதி மாறனுக்கும், ஸ்டாலினுக்கும் முதல்வர் பதவியைப் பிடிப்பதில் பெரும் மோதல் நடந்து வருகிறது என்றார் சரத்குமார்.

கார்த்திக் கடத்தப்பட்டாரா???

கார்த்திக் சந்திப்பு:

இந் நிலையில் நேற்று முழுவதும் காணாமல் போய்விட்ட பார்வர்ட் பிளாக் தலைவர் கார்த்திக் மாலையில் திடீரென மதுரை வந்தார்.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த வேட்பாளர் செந்திலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். (இதன் பின்னர் நள்ளிரவில் தான் செந்தில் இறந்தார்)

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கார்த்திக். அப்போது, நீங்கள் ஆண்டிப்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிடாமல் தடுக்க உங்களை ஆளும் தரப்பினர் கடத்திச் சென்றுவிட்டதாக செய்திகள் வந்ததே என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கார்த்திக், என்னை யாரும் கடத்தவில்லை என்றார்.

அப்படியானால் நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?

உங்களை கட்சியினரால் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையே? செல்போனையும் ஆப் செய்து வைத்து விட்டீர்கள், உங்களை யாரும் கடத்தினார்களா? என்று நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு கார்த்திக் பதிலளிக்கையில், என்னை யாரும் கடத்தவில்லை, அப்படி வெளியான செய்தியில் உண்மை இல்லை. நான் ஆண்டிப்பட்டியில் போட்டியிடவில்லை. அப்படி நான் ஒருபோதும் சொல்லவில்லை என்றார்.

அதன் பின்னர் மீண்டும் அவர் சென்னைக்குத் திரும்பினார்.

இதற்கிடையே, நான் நேரடியாக பிரசாரத்திற்கு வர மாட்டேன் என்று கட்சியினரிடம் கார்த்திக் கூறி விட்டதாகத் தெரிகிறது.

அதற்குப் பதிலாக, தனது பேச்சு அடங்கிய கேசட்டுகளை அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகளிட¬ம் கார்த்திக் கொடுத்துள்ளார்.

அந்த கேசட்டுகளை ஊர் ஊராக சென்று ஒலிபரப்பி பிரசாரம் செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக தரப்பிலிருந்து வரும் கடும் நெருக்கடிகள், மிரட்டல்கள் காரணமாகவே கார்த்திக் தலைமறைவு அரசியல்வாதி போல மாறி விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திருமங்கலம் தொகுதியில் செந்திலுக்குப் பதில் துணை நடிகரான ராஜு என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கார்த்திக், சத்தியராஜ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்தான்.

கார்த்திக்கை ஆளும் தரப்பினர் கடத்தி விட்டதாக நேற்று முழுவதும் பார்வர்ட் பிளாக் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தன்னை யாரும் கடத்தவில்லை என்று கார்த்திக் கூறினாலும், ஏதோ ஒன்று நடக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

இதற்கிடையே செந்திலின் மரணத்தைத் தொடர்ந்து ஏராளமான பார்வர்ட் பிளாக் தொண்டர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கூட்டணியால் திமுக முன்னிலை - கருத்துக் கணிப்பு

கூட்டணியால் திமுக முன்னிலை: லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 44.5 சதவீதத்தினரும், அதிமுக கூட்டணிக்கு 40.1 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் தனிப்பட்ட கட்சி என்ற முறையில் திமுகவை விட அதிமுகவே அதிகமான ஆதரவைப் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 38.5 சதவீத ஆதரவும் திமுகவுக்கு 36.8 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.

சென்னையின் பிரபல லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை மற்றும் காட்சித் தகவலியல் துறை ஆகியவை இணைந்து நீலகிரி மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆண்டில் இரண்டாம் முறையாக கருத்துக் கணிப்பு நடத்தியது.

122 சட்டசபைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம் கடந்த 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துக் கணிப்பு முடிவுகளை குழுத் தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

அதன் விவரம்:

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 44.5 சதவீதம் பேர் திமுக அணிக்கு ஆதரவாகவும், 40.1 சதவீதம் பேர் அதிமுக அணிக்கும் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களில் 62.5 சதவீதம் பேர் திமுக அணிக்கு ஆதரவாகவும், 28.3 சதவீதம் பேர் அதிமுக அணிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுய தொழில் செய்வோரில் 45.1சதவீதம் பேர் திமுக அணிக்கு ஆதரவாகவும், 39.9 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தனியார் துறையில் மாத ஊதியம் பெறுவோரில் 44.5 சதவீதம் பேர் திமுக அணிக்கு ஆதரவாகவும், 35.3 சதவீதம் பேர் அதிமுக அணிக்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் மத்தியில் திமுகவுக்கு 47 சதவீத ஆதரவும், அதிமுகவுக்கு 44.5 சதவீத ஆதரவும் காணப்படுகிறது.

இப்போது தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு ஆதரவாக 38.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு 36.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுக்கு 12.3 சதவீதம் பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுக, திமுகவுக்கு அடுத்து வாக்காளர்கள் மனதில் விஜயகாந்த் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பது இதில் கவனிக்கத்தக்கது.

மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோர் விவரம்:

காங்கிரஸ் 4.5 சதவீதம், சிபிஎம் 2.1 சதவீதம், பாமக 1.8 சதவீதம், மதிமுக 1.2 சதவீதம், பாஜக 0.5 சதவீதம், விடுதலைச் சிறுத்தைகள் 0.3 சதவீதம்.

2004ம் ஆண்டு அதிமுக ஆதரவாக கருத்து தெரிவித்தோர் சதவீதம் 19 சதவீதமாக இருந்தது. ஆனால் திமுகவுக்கு 41.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

2005ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்போது, அதிமுகவுக்கு 30.1 சதவீதம் பேரும், திமுகவுக்கு 46.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 33.7 சதவீதம் பேரும், திமுகவுக்கு 38.5 சதவீதம் பேரும் ஆதரவு அளித்திருந்தனர்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் அதிமுக சற்றே முந்தியுள்ளது. 38.5 சதவீத ஆதரவு அக்கட்சிக்குக் கிடைத்துள்ளது. திமுகவுக்கு 36.8 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

இது கட்சி அடிப்படையிலான கருத்துக் கணிப்பு. ஆனால் எந்த அணிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக அணிக்கு சாதகமாகவே கருத்து வெளியாகியுள்ளது.

44.5 சதவீத ஆதரவை திமுக அணி பெறுகிறது, அதிமுக அணிக்கு 40.1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பதால் கூட்டணி ஆட்சிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதும் புலனாகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு இரு கூட்டணிகளும் கடும் நெருக்கடியில் இருக்க முக்கியக் காரணம் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம்தான் என்பதையும் அறிந்து கொள்ள மு¬டிகிறது. இக்கட்சிக்கு வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதும் புலனாகிறது.

இந்தத் தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை என்று வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல சேப்பாக்கத்தில் கருணாநிதியும், ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவும் வெல்வார்கள் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தேர்தல் அறிக்கைகளைப் பொறுத்தவரை திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக அறிக்கைக்கு 59.4 சதவீத ஆதரவும், அதிமுக தேர்தல் அறிக்கைக்கு 58.6 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.

இதிலும் இரு கட்சிகளும் சம ஆதரவையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் ஓட்டுக்கள் பெரும்பாலாக அம்மா கட்சிக்குத்தான். கிட்டத்தட்ட 55.4 சதவீத பெண்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு 31.7 சதவீத பெண்களின் ஆதரவுதான் உள்ளது. விஜயகாந்த் கட்சிக்கு 11. 2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

ஆண்களைப் பொறுத்தவரை திமுக முந்திக் கொண்டுள்ளது. இக்கட்சிக்கு 45.8 சதவீத ஆதரவும், அதிமுகவுக்கு 38.6 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு 12.4 சதவீத ஆதரவு காணப்படுகிறது.

படிக்காதவர்கள் மத்தியிலும் அதிமுகவுக்கே ஆதரவு அதிகம் உள்ளது. 55.6 சதவீதம் பேர் அதிமுகவையும், 31.8 சதவீதம் பேர் திமுகவையும் ஆதரித்துள்ளனர்.

கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மத்தியில் திமுகவுக்கு நல்லஆதரவு காணப்படுகிறது. அதாவது 47.3 சதவீதம் பேர் திமுகவுக்கும், 34.2 சதவீதம் பேர் அதிமுகவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் 'அம்மா'வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. அதிலுள்ளவர்களில் 68.1 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தோர் எண்ணிக்கை 23.2 சதவீதமாகும்.

திருமணமான பெண்கள் மத்தியில் அதிமுகவுக்கு 50 சதவீத ஆதரவும், திமுகவுக்கு 41.1 சதவீத ஆதரவும் உள்ளது.

மொத்தத்தில் இந்தக் கருத்துக் கணிப்பை கூர்ந்து பார்த்தால் திமுக மற்றும் அதிமுக அணிகள் இரண்டும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பதும், அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் பலத்தால் திமுக சற்றே முன்னிலையில் உள்ளதும் தெரியும்.

அதே போல விஜயகாந்த் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க இருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதுவரை வந்த கருத்துக் கணிப்புகளிலேயே தற்போதுதான் திமுக அணிக்கு சாதகமாக ஒரு கருத்துக் கணிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி முன்னிலை:

தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை சன் டிவியே முதலிடத்தில் உள்ளது.

சன் டிவியை பார்ப்போரின் எண்ணிக்கை 35.6 சதவீதமாகும். பொதிகை டிவிக்கு 18.6 சதவீத ஆதரவுடன் 2வது இடம் கிடைத்துள்ளது. ராஜ் டிவிக்கு 6.6 சதவீத ஆதரவுடன் 3வது இடமும் ஜெயா டிவி 4.4 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்தில் உள்ளது. விஜய் டிவிக்கு 3 சதவீத ஆதரவுடன் 5வது இடமும் கிடைத்துள்ளது.

முதலிடத்தில் தினத்தந்தி:

தமிழ் நாளிதழ்களில் வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் தினசரிகளில் தினத்தந்தி வழக்கம் போல முதலிடத்தில் உள்ளது. இந்த நாளிதழுக்கு 25.5 சதவீதம் பேரும், தினமலருக்கு 15.8 சதவீதமும், 'புதிய' தினகரன் நாளிதழுக்கு 15.7 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. தினமணி நாளிதழுக்கு 6 சதவீத வாசகர்கள் ஆதரவும் உள்ளது.

தினகரனை சன் டிவி வாங்கி ரீலாஞ்ச் செய்தது குறிப்பிடத்தக்கது.

மருதநாயகமும் 100 கோடி பேரமும்



சென்னை:

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு நடிகர் கமல்ஹாசனிடம் ரூ. 100 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட கமல் உடனடியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பிரபல திரைப்பட நடிகரை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறும், இதற்காக ரூ. 100 கோடி வரை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும், ஆனால், அந்த நடிகர் அதை ஏற்கவில்லை என்றும் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து அந்த நடிகர் யார்? ரஜினியா என்று நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டனர்.

அதற்கு, அவர் இல்லை. அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் என பதிலளித்தார்.

இந் நிலையில் அந்த நடிகர் யார் என்பது இப்போது வெளியில் வந்துள்ளது.

நான் அரசியலிலேயே இல்லை.. நான் இலக்கியவாதி என்று கூறிக் கொண்டு அரசியல் செய்து வரும் தில்லை அம்பலத்தார் தான் கமலையும் அதிமுகவுக்கு இழுக்க முயற்சி செய்துள்ளார்.

கமல் தரப்பைத் தொடர்பு கொண்டு, நிதிப் பற்றாக்குறையால் நின்று போய்விட்ட உங்கள் மருதநாயகம் படத்தை முடித்துத் தருகிறோம். உங்களுக்கு ரூ. 100 கோடி தரவும் தயாராக இருக்கிறோம் என்று பேரம் பேசியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன கமல், எனக்கு அரசியலே வேண்டாம். எனக்கு அது சரிப்பட்டு வராது என்று கட்அண்ட்ரைட்டாக சொல்லிவிட்டார்.

அத்தோடு இங்கிருந்தால் தொல்லை தொடரும் என்பதால் உடனே அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். தேர்தல் முடிந்த பின்னரே அவர் ஊர் திரும்புவார் என்று தெரிகிறது.

இது குறித்து கமலின் உதவியாளர் குணசீலன் கூறுகையில், கமல் சாரை யாரும் அணுகவில்லை. தனது தசாவதாரம் பட வேலை விஷயமாக அவர் அமெரிக்கா போயுள்ளார் என்றார்.

மேலும் அவர் மே மாதம் 20ம் தேதி தான் சென்னை திரும்புவார் என்றார்.

மே 8ம் தேதி தேர்தலும் 11ம் தேதி வாக்குப் பதிவும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகையர்கள் களத்தில் குதித்தும் கூட அதிமுகவுக்கு நிலைமை சாதகமாகத் திரும்பாததாலும், ரஜினி கைவிட்டுவிட்டதாலும் கமலை ஆளும் தரப்பு குறி வைத்ததாகத் தெரிகிறது.

PS: அவருடைய கனவுப்படத்தை முடிக்கும் ஆசையை காட்டினாலும், சாக்கடை அரசியலில் விழாத கமலுக்கு தலை வணங்குகிறேன்.

செல்விக்காக கட்சி மாறிய சரத் மிரளவைக்கும் பிண்ணனி



கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணி.. தென் மாவட்ட சரத்குமார் ரசிகர் மன்றத் தலைவர்களின் செல்போன்கள் சிணுங்கின. ‘‘நாளை காலை ஏழரை மணிக்கு மதுரை விமான நிலையம் வந்திருங்க. எவ்வளவு ரசிகர்களோடு வரமுடியுமோ, அவ்வளவு ரசிகர்களோடும் கணிசமான வாகனங்களிலும் வாருங்கள். வாகனங்களில் நம் மன்றக் கொடி கட்டாயம் கட்டியிருக்கவேண்டும். மற்றவற்றை நாளைக்குப் பேசிக்கலாம்.’’ _ தலைமை ரசிகர் மன்றத்திலிருந்து வந்த இந்த உத்தரவை மாவட்டத் தலைவர்கள் பவ்யமாகக் கேட்டுக் கொண்டார்கள்.

சரத்குமார் ரசிகர்களின் வேன்களின் படையெடுப்பால் காலை ஏழு மணிக்கே மதுரை விமானநிலையம் திணறியது. பத்தரை மணிக்கு விமானம் மதுரையைத் தொட்டது. ராதிகாவுடன் வந்த சரத்குமாருக்கு அவரது ரசிகர்கள் ஆரவார வரவேற்பு அளித்தார்கள்.

மதுரை சங்கம் ஹோட்டலுக்கு காலை பதினொன்றேகால் மணிக்கு ராதிகாவுடன் வந்தார் சரத்குமார். பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் சூழ்ந்து கொள்ள.. ‘‘பத்து நிமிடத்தில் வந்து உங்களிடம் பேசுகிறேன்...’’ என பத்திரிகையாளர்களை தவிர்த்துவிட்டு, ராதிகாவை கூட்டத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் அரவணைத்தவாறு சென்றார். ராதிகாவின் முகம் இறுக்கமாகவே இருந்தது.

மீண்டும் அவர் நிருபர்களைப் பார்த்தபோது, ‘அ.தி.மு.க.வில் சேரப் போகிறீர்களா..?’ எனக் கேட்டார்கள். ‘‘முதல்வரைச் சந்தித்த பிறகு சொல்கிறேன்’’ என்றார். ‘உங்கள் முடிவில் மாற்றமிருக்குமா?’ எனக் கேட்டபோது.. ‘‘நாட்டாமை முடிவு முதல்வரைப் பார்த்த பிறகு தெரியும்..’’ எனச் சிரித்தவாறே அறையை விட்டு வெளியேறினார். முதலில் அவர் பேட்டியளிப்பதாகத்தான் இருந்தாராம். ஆனால், அவருக்கு வந்த திடீர் உத்தரவை அடுத்து பேட்டியை ரத்து செய்தாராம்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்த சரத்குமார், காரை அவரே ஓட்டிக்கொண்டு தேனியை நோக்கிக் கிளம்பினார். இந்தக் கார் சரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை இரவே சென்னையிலிருந்து புறப்பட்டு இங்கு வந்துவிட்டதாம். அவர் காரைத் தொடர்ந்து அவரது ரசிகர்களின் வாகனங்கள் அணிவகுத்தன.

நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் என்பவர்தான் சரத்குமாரை முதல்வரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தராம். அவரது காரும் பின்னாலேயே புறப்பட்டுச் சென்றது.

மதியம் அவர் தங்கியிருந்த வீட்டில் 1.20_க்கு தேனி வந்து சேர்ந்தார் சரத். 15 நிமிடங்கள் சரத், ராதிகா இருவரும் தனியாக ஜெ.வை அவர் தங்கியிருந்த வீட்டில் சந்தித்துப் பேசினர். பின்னர் டி.டி.வி. தினகரனுடன் சரத் தம்பதியர் 15 நிமிடம் பேசினர். அதன் பின்னால் சரத்திற்கு ஜெ. தன் கையால் அ.தி.மு.க. அடையாள அட்டையை வழங்கினார். இருவரிடமும் மிக சந்தோஷமாகப் பேசிய முதல்வர், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் போஸ் கொடுத்தார்.

வீட்டிலிருந்து வெளியில் வந்த சரத்குமார், நிருபர்களிடம், ‘‘தி.மு.க.விலிருந்து குடும்ப அரசியல் காரணமாகத்தான் விலகினேன். பல முன்னணித் தலைவர்களை மதிக்காமல், தற்போது தி.மு.க.வில் நுழைந்தவர்கள் அதிகாரம் செய்கின்றனர். நான் என் நண்பர்கள், ரசிகர்களின் கருத்தைக் கேட்ட பின்னால் தான் அ.தி.மு.க.வில் சேர முடிவெடுத்தேன். இன்று காலை 11 மணிக்கு என் எம்.பி. பதவிக்கான ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பின்னால்தான் இங்கு வந்துள்ளேன். 20_ம் தேதிக்கு மேல் அ.தி.மு.க.வுக்காகப் பிரசாரம் செய்வேன்!’’ என்றார்.

மிகவும் சலசலப்பாகப் பேச ஆரம்பித்த ராதிகா, ‘‘நான் என் கணவருடன் துணைக்குத்தான் வந்திருக்கிறேன். அ.தி.மு.க. பிரசாரத்திற்குப் போகமாட்டேன். என் கணவர் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் ராடன் டி.வி.க்கு பாதிப்பு வராது. தி.மு.க., சன் டி.வி., ராடன் டி.வி. ஆகியவையெல்லாம் தனித்தனியாக இயங்குபவை இதனால் சன் டி.வி.யில் எனக்கு பிரச்னைகள் ஏற்பட்டால், ராடன் டி.வி. நிறுவனம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன்’’ என்றார்.

அன்று மாலையே இருவரும் சென்னைக்குத் திரும்பினர்.

சரத்குமாரின் இந்த முடிவு பற்றி அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலேயே விசாரித்தோம். ‘‘இது எதிர்பார்த்திருந்ததுதான், புதியதல்ல’’ என்ற சரத்குமாரின் பழைய நண்பர் ஒருவர், சில விவரங்களை விவரித்தார்.

‘‘சரத்குமாரின் தொடக்கக்காலம் மிஸ்டர் மெட்ராஸாகத்தான் இருந்தது. சென்னை ஆணழகனாக தேர்வான அவர், சாயாவைக் காதலித்து மணம் புரிந்துகொண்டார். அடையாறு கற்பகம் கார்டனில் குடியிருந்த அவர்கள், சில பிஸினஸ்களிலும் இறங்கினார்கள்.

அதில் வந்த லாபத்தில் ஒரு பங்கை எடுத்துத்தான் கொட்டிவாக்கத்தில் நான்கு கிரவுண்டில் இடத்தை வாங்கினார்கள். முறைப்படி சரத்திற்கு இரண்டு கிரவுண்ட், சாயாவிற்கு இரண்டு கிரவுண்ட் என இருந்தது. பின்னாளில் அது முழுவதும் சரத்துக்கு வந்துவிட்டது.

அப்போது சினிமாவிற்கு ஃபைனான்ஸ் செய்யும் வேலையையும் கவனித்து வந்தார்கள். அந்த வகையில் நடிகர் விஜயகாந்தின் ‘புலன் விசாரணை’ படத்திற்குப் பணம் கொடுத்திருந்தார்கள். அப்போது சரத்தின் உடல்வாகை கவனித்த விஜயகாந்த்தான், அவரை நடிக்க வற்புறுத்தி அந்த புலன் விசாரணையிலேயே முதன் முதலாக வில்லன் ரோல் கொடுத்தார்.

அந்த வகையில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததே விஜயகாந்த்தான். ஆனால், பின்னாளில் நடிகர் சங்க விஷயத்தில் அவருக்கு எதிராகவே களமிறங்கினார் சரத். திரைப்படத் தொழிலாளர்கள் சார்ந்த ‘பெப்சி’யில் தி.மு.க. ஆதரவு பெற்றவர்களின் சர்வாதிகாரத்தை முறியடிக்க, அ.தி.மு.க.விற்கு ஒரு கரம் தேவைப்பட்டது. அந்தக் கரம் ‘சரத்’ தாக மாறினார்.

இதைத் தொடர்ந்து, போயஸ் கார்டனுடன் நல்லுறவு ஏற்பட்டது. எந்நேரமும் ஜெ.வுடன் பேசும் உரிமையைப் பெற்றிருந்தார். இதற்கிடையில் மும்பை வரவான நடிகை நக்மாவின் செல்வாக்கு, பல விதத்திலும் சரத்துக்கு உதவியாக இருந்தது. அப்போதுதான் ‘ரகசிய போலீஸ்’ படம் லண்டனில் எடுக்கப்பட்டது. அங்கே அனுமதியில்லாமல் படம் எடுத்தது, கூடுதல் செலவு என பெரிய நெருக்கடி. கேமராவை பிடுங்கி வைத்துக் கொண்டது அந்த அரசு. அந்தப் பிரச்னையைத் தீர்க்கச் சுமார் எழுபத்தைந்து லட்ச ரூபாய் வரை தேவைப்படவே, யாரும் சென்னை திரும்ப முடியவில்லை.

அப்போது உதவிக்கரம் நீட்டச் சொல்லி ‘கார்டனுக்கு’ பேசினார். அவர்களும் அப்போதைய அமைச்சர் ரகுபதி மூலமாக சுமார் ஒரு கோடி வரை கொடுத்து செட்டில் செய்து பிரச்னையைத் தீர்த்தார்கள். அதன்பிறகு சென்னை திரும்பினாலும் ரகசிய போலீஸ§க்கு ஏகச்சிக்கல். எல்லாவற்றிற்கும் ‘கார்டன்’ உதவியது.

இந்த நேரத்தில்தான் மனைவி சாயாவை உதறினார்.

இந்த நிலையில் லண்டன் நெருக்கடிக்காகக் கொடுத்த பணத்தைக் கேட்கத் தொடங்கியது கார்டன் தரப்பு. தினமும் ஆள் விட்டுப் பார்த்தார்கள். பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த ரகுபதியே சரத் வீட்டிற்கு நடையாய் நடக்கத் தொடங்கினார். இதில் மொத்தமாக மூன்று கோடி ரூபாய் பாக்கி. சமாதானப்படுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டுமே.

அதற்காகவே ஜூ.டி.வி.யின் தமிழ் சேனலுக்கு ஒரு சிறப்புப் பேட்டியை ரெடி செய்தார் சரத். அதில் ‘அம்மா’ புகழ் பற்றி அதிகம் பாடினார். பேட்டி வெளி வந்தால் பணத்திற்கான விரட்டல் குறையும் என்ற கணக்கு. ‘கார்டன்’ தரப்பு விடுவதாய் இல்லை. நிலைமை மோசமானது. அப்போது 1996 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். தப்பிப்பதற்காக தி.மு.க.வில் சேர எண்ணியவருக்கு, அவர் நடித்த படமொன்றை அ.தி.மு.க. தரப்பு டி.வி.யில் உரிமை பெறாமல் ஒளிபரப்பிவிட, தி.மு.க.வில் சேருவதற்கான காரணம் கிடைத்தது.

‘ஜெயலலிதாவை ஓட ஓட விரட்ட வேண்டும்’ என பரபரப்பாக ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்து விட்டு, அடுத்த நாளே கலைஞரைச் சந்தித்து தி.மு.க.விற்கு ஆதரவு என்று திசையை மாற்றிக் கொண்டார்’’ என்ற அந்தப் பழைய நண்பர், ‘எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க.விற்காகப் (1996 காலக் கட்டத்தில்) பிரசாரம் செய்தேன். பிரதிபலனை பார்க்காமல் தி.மு.க.விற்கு உழைத்தேன்’ என்று சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாரே, அதன் பின்னணி இதுதான்’’ என்று கூறினார்.

சரி, இன்று அ.தி.மு.க.வை நாடிப்போய் அவர் சேர்ந்ததற்கான பின்னணி என்ன என்பது குறித்து மேலும் துருவினோம். இந்த விவரங்களில் தொடர்புடையவர்களே நம்மிடம் பேசினார்கள்.

‘தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறேன்’ என்ற அறிக்கையை, கடந்த வாரம் கொடுத்திருந்தார் சரத்.

அதில் தன் மனைவி ராதிகா சரத்குமாருக்கும் அசௌகர்யத்தை ஏற்படுத்தினார்கள் எனக் குறிப்பிட்டிருந்ததைக் கவனிக்க வேண்டும். கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. நாடார் சமூகத்தைச் சேர்ந்த ராதிகா செல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் சரி. அமைச்சர் தயாநிதிமாறன் தன்னை புறக்கணித்து, நடிகர் விஜயை வைத்து தமிழர் திருநாள் தபால் தலையை வெளியிட வைத்தார். அதனால் அதிருப்தி என்றால் சரி.

அது என்ன? தன் மனைவி ராதிகா சரத்திற்கு அசௌகர்யம்? அரசியல் திருப்பு முனையே இங்குதான் இருக்கிறது. ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா தயாரித்து வழங்கி வரும் ‘செல்வி’ தொடர், சன் டி.வி.யில் இரவு ஒன்பது முப்பதுக்கு, அதாவது மிக முக்கிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

‘சித்தி’ தொடரைப் போன்று ‘செல்வி’ தொடருக்கு வரவேற்பு பெரிதாக இல்லை. சன் டி.வி. குழுமத்தின் விதிப்படி, இப்படிப்பட்ட தொடர்களை முக்கியமான நேரத்தில் ஒளிபரப்ப முடியாது. அதன்படி பட்டென்று ஒரே நாளில் அதை நிறுத்திவிட்டு, வேறு ஒரு நல்ல நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்திருக்க முடியும்.

ஆனால், அப்படிச் செய்யவில்லை. காரணம், ராதிகா கலைஞரின் பாசமகள். அறிவாலய குடும்ப உறுப்பினர்களில் ஒருவர். அதனால் அவரை அழைத்துப் பேசினார்கள். ‘செல்வி தொடரை விரைவில் முடித்துக் கொள்ளுங்கள். வேறு ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தயார் செய்து கொடுங்கள்’ என்று கூறப்பட்டது.

அணி மாறியவரின் ‘முடிச்சு’ இதுதான். அப்போதே ஆதாய அரசியல் கணக்கைப் போடத்தொடங்கி விட்டார்கள். அவர்களின் ராடன் டி.வி. சார்பாக லண்டனில் உள்ள ஒரு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு, தமிழில் நிகழ்ச்சி தயாரித்து கொடுக்கும் வேலையை ஏற்றிருக்கிறார்கள். அதே போன்று இலங்கையிலும் ஒரு டி.வி.சேனலுக்கு தமிழ் புரோகிராமை எடுத்துக் கொடுக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். இரண்டிலுமே நல்ல வருமான சூழ்நிலை. போதிய நிதி நிலை உள்ளது. இது தவிர, அவர்களின் ராடன் நிறுவன பங்குகளில் ஐம்பது சதவிகித பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் தகவல். இப்படிப் பொருளாதார நெருக்கடி இல்லாத சூழ்நிலை.

இந்த நிலையில், சன் டி.வி.யில் வெளியான ‘செல்வி’ தொடர் மற்றும் ‘தங்க வேட்டை’ நிகழ்ச்சிகளை என்ன செய்வது? திறந்திருந்த அ.தி.மு.க. வாசல் கதவருகே இந்த நிலையைக் கூறியிருக்கிறார்கள். சரத்தின் விலகல் அறிக்கைக்குப் பின் ஒரு வார காலதாமதத்திற்குக் காரணம் இதுதான்’’ என்றவர்கள்,

‘‘இதன்பிறகு ராதிகா, ‘செல்வி’ தொடர் படப்பிடிப்பிற்கென்று சிங்கப்பூர் சென்றார். அடுத்த இரண்டாவது நாளில் சரத்தும் அங்கே சென்றார். தொடர்ந்து சசிகலா நடராஜனும் சிங்கப்பூருக்கு ரகசிய விசிட் அடித்தார்.

அங்கே வைத்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது! அதாவது சன் டி.வி.யில் இருந்து ‘செல்வி’ மற்றும் ‘தங்கவேட்டை’ நிறுத்தப்பட்டால், அவற்றை ஜெ.டி.வி.யில் ஒளிபரப்ப ஒப்புக்கொள்வது. இனி தயாரிப்புச் செலவு என்பதை ஜெயா டி.வி. நிறுவனமே கொடுக்கும். பிரச்னை இல்லை என்ற உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டன. அதோடு தமிழகம் தவிர, கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இருக்கும் சன் நெட் ஒர்க் மூலமாக நடந்துக் கொண்டிருக்கும் ‘தங்க வேட்டை’ நிகழ்ச்சிகள் ரத்தாவதால் ஏற்படும் நஷ்டத்துக்கு ஈடாக, பெரிய தொகை கொடுப்பதாகவும் முடிவாகியிருக்கிறது. அவற்றுடன் மேலும் பல நிகழ்ச்சி தயாரிப்புகள் அவர்கள் வசம் இருக்கிறது. அதுவும் பாதிக்கப்படக்கூடாது’’ எனப் பேசி, தொழில்ரீதியாக ‘உதவிகளும்’ பேசிமுடிக்கப்பட்டன.

சரத்தின் அரசியல் இழப்பை ஈடுகட்ட?... அதற்கு ராஜ்யசபா உறுப்பினர் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி எல்லாமும் முடிந்த பிறகுதான் அங்கிருந்து குடும்ப சகிதமாக ஜெ.வை சந்தித்து அ.தி.மு.க. வில் இணைந்தார்கள்’’ என்று விளக்கினார்கள் அவர்கள்.



நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

மாறன் சகோதரர்களிடம் 10000 கோடி - சுவாமி புது கண்டுபிடிப்பு

மாறன் சகோதரர்களிடம் 10000 கோடிசுவாமி
ஏப்ரல் 20, 2006

சென்னை:

சன் டிவி தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது தம்பியும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகிய இருவருக்கும் ரூ. 10,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருவரும் பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாகவும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

நிருபர்களிடம் சுவாமி கூறுகையில்,

கலாநதி மாறன் மற்றும் தயாநதி மாறன் ஆகிய இருவரும், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் ரூ. 10,000 கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்கள் அனைத்தும் பணமாக இல்லை. வீடுகள், ரியல் எஸ்டேட், ஷேர்கள் என மட்டும் ரூ. 10,000 கோடிக்கு இரு சகோதரர்களும் சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.

இது ஒரு குற்றச் செயல். இரு சகோதரர்களும் நியாயமான, நேர்மையான முறையில் தொழில் செய்து இவற்றை சம்பாதிக்கவில்லை. இருவரிடமும் விசேஷமான படிப்பும் இல்லை.

சன் டிவியின் விளம்பர வருவாய், கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் இந்த அளவுக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.

இவ்வளவு அதிக அளவில் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதால் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கோப்பு ஒன்றை அனுப்பினர்.

ஆனால் அதற்கு அனுமதி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் சிதம்பரம்.

எனக்கு இந்தத் தகவல் 2 நாட்களுக்கு முன்புதான் கிடைத்தது. தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்தச் சொத்துக்கள் உள்ளன. இதுதவிர, மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இவர்கள் இறங்கியுள்ளனர்.

அங்கு பல வீடுகளையும் வாங்கி வைத்துள்ளனர். இவர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் தக்க ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்குப் போடுவேன் என்றார் சுவாமி.

ரூ. 100 கோடிக்கு ரஜினி ஆதரவைப் பெற பேரம்

ரூ. 100 கோடிக்கு பிரபல நடிகரிடம் பேரம் பேசிய அதிமுக: கருணாநிதி பரபரப்பு தகவல்!


தூத்துக்குடி:

பிரபல திரைப்பட நடிகரை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறும், இதற்காக ரூ. 100 கோடி வரை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும் திமுக தலைவர் கருணாநிதி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.



தூத்துக்குடியிலிருந்து இன்று மாலை தென் மாவட்ட பிரசாரத்தை தொடங்கினார் கருணாநிதி. முன்னதாக ரயில் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்த கருணாநதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி,

ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் இலவச அரிசி, அது, இது என்று போட்டா போட்டி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்.

அதிமுகவுக்கு பெரும் தோல்வி கிடைக்கப் போகிறது என்பதை உணர்ந்து விட்ட ஜெயலலிதா, தமிழகத்தின் பிரபல நடிகர் ஒருவரை அதி¬கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு வலை வீசிப் பார்த்துள்ளார். இதற்காக ரூ. 100 கோடி வரை தருவதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடிகர் வர மறுத்து விட்டார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படாது. அப்படியே கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாது என்றால் அதை திமுக எதிர்க்காது. இப்போதைய நிலையில் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் கருணாநிதி.

இன்று மணிக்கு தூத்துக்குடியிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கும் கருணாநிதி. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து காயல்பட்டனம், திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நெல்லை ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கருணாநிதி குறிப்பிடும் அந்த நடிகர் யார் என்று தெரியவில்லை.

நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற அதிமுக முன்பு பிரம்மப்பிரயத்தனம் செய்ததும், அவர் ஒப்புக் கொள்ள மறுத்ததால் அவரது ரசிகர் மன்றத்தை உடைத்து ஆட்களை இழுக்க முயன்றதும் நினைவுகூறத்தக்கது. ஆனால், பெருவாரியான ரசிகர்களை ரஜினி அடக்கிவிட்டார்.

ஆங்காங்கே ஒரு சில மன்றத்தினரே பாமக தவிர்த்து ஏதாவது ஒரு கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிபந்தனையில்லாமல் 10 கிலோ அரிசி - Really Funny

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி ¬ற்றிலும் இலவசமாக வழங்கப்படும். 20 கிலோ அரிசி வாங்கினால்தான் பத்து கிலோ அரிசி இலவசம் என்று நிபந்தனை ஏதும் இல்லை. கண்டிப்பாக ¬பத்து கிலோ அரிசி இலவசமாகவே வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.



திமுக ரூ. 2க்கு அரிசி தருவதை பொருளாதார விளக்கத்துடன் எதிர்த்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில் கருத்துக் கணிப்புகள் வெளியான பின் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம் என்று அறிவித்தார். இந் நிலையில் 10 கிலோ வாங்காவிட்டாலும் கட 10 கிலோ அரிசி இலவசமாகத் தரப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்த்தி கணேசனை ஆதரித்து அல்லிநகரத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. கிலோ ரூ. 3.50 என்ற விலையில் இந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது.

உங்கள் ஆதரவோடு இந்த அரசு அமையுமானால், 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். அடுத்த பத்து கிலோ அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ. 3.50 என்ற விலையில் விற்கப்படும்.

நான் வெளியிட்ட இந்த அறிவிப்பைப் பிடிக்காத சில தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் வேண்டுமென்றே இந்த நல்ல செய்தியைக் கூட திரித்துக் கூறி வெளியிட்டுள்ளன.

நான் சொன்ன அறிவிப்பையே மாற்றி, 20 கிலோ அரிசியையும் வாங்கினால்தான் பத்து கிலோ அரிசி இலவசம் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது கிலோ அரிசி 3.50க்கு வாங்கினால்தான் இலவசமாக பத்து கிலோ அரிசியை தருவோம் என்று அவர்கள் இட்டுக் கட்டி எழுதியும், செய்திகளில் சொல்லியும் வருகிறார்கள்.

ஆனால் என்னுடைய அறிவிப்பு அப்படி அல்ல. தற்போது வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மட்டும்தான் இருக்கிறார்கள் என்றால், எங்களுக்கு பத்து கிலோ அரிசி போதும் என்று நனைத்தால் இலவசமாக வழங்கப்படும் பத்து கிலோ அரிசியுடன் சென்று விடலாம். அதற்குப் பணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

அதற்கு மேல் பத்து கிலோ அரிசி வேண்டும் என்றால்தான் கிலோவுக்கு ரூ. 3.50 பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

இப்போது உங்கள் அனைவருக்கும் தெளிவாக புரிய வைத்து விட்டேன் என்று நம்புகிறேன்.

20 கிலோ அரிசியில் 10 கிலோ அரிசி இலவசம் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அந்த இலவச அரிசியைப் பெற எந்த நிபந்தனையும் இல்லை.

10 கிலோ அரிசி போதும் என்றால் இலவசமாக வழங்கப்படும் அரிசியுடன் சென்று விடலாம், கூடுதலாக 10 கிலோ தேவை என்றால் மட்டும் கிலோவுக்கு ரூ.3.50 கொடுத்து பெற்றுச் செல்லலாம்.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்த 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரள அரசு செவிமடுக்கவில்லை. மாறாக சட்டத் திருத்தம் கொண்டு வந்து விட்டது.

ஆனால் உண்மையான அளவான 152 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளும். தமிழக விவசாயிகளின் நலனை விட்டுக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த ஓசி அரிசி அறிவிப்பு திமுகவை அலற வைத்துள்ளது.

Credits - Thatstamil.com

நிபந்தனையில்லாமல் 10 கிலோ அரிசி

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி ¬ற்றிலும் இலவசமாக வழங்கப்படும். 20 கிலோ அரிசி வாங்கினால்தான் பத்து கிலோ அரிசி இலவசம் என்று நிபந்தனை ஏதும் இல்லை. கண்டிப்பாக ¬பத்து கிலோ அரிசி இலவசமாகவே வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.



திமுக ரூ. 2க்கு அரிசி தருவதை பொருளாதார விளக்கத்துடன் எதிர்த்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில் கருத்துக் கணிப்புகள் வெளியான பின் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம் என்று அறிவித்தார். இந் நிலையில் 10 கிலோ வாங்காவிட்டாலும் கட 10 கிலோ அரிசி இலவசமாகத் தரப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்த்தி கணேசனை ஆதரித்து அல்லிநகரத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. கிலோ ரூ. 3.50 என்ற விலையில் இந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது.

உங்கள் ஆதரவோடு இந்த அரசு அமையுமானால், 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். அடுத்த பத்து கிலோ அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ. 3.50 என்ற விலையில் விற்கப்படும்.

நான் வெளியிட்ட இந்த அறிவிப்பைப் பிடிக்காத சில தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் வேண்டுமென்றே இந்த நல்ல செய்தியைக் கூட திரித்துக் கூறி வெளியிட்டுள்ளன.

நான் சொன்ன அறிவிப்பையே மாற்றி, 20 கிலோ அரிசியையும் வாங்கினால்தான் பத்து கிலோ அரிசி இலவசம் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது கிலோ அரிசி 3.50க்கு வாங்கினால்தான் இலவசமாக பத்து கிலோ அரிசியை தருவோம் என்று அவர்கள் இட்டுக் கட்டி எழுதியும், செய்திகளில் சொல்லியும் வருகிறார்கள்.

ஆனால் என்னுடைய அறிவிப்பு அப்படி அல்ல. தற்போது வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மட்டும்தான் இருக்கிறார்கள் என்றால், எங்களுக்கு பத்து கிலோ அரிசி போதும் என்று நனைத்தால் இலவசமாக வழங்கப்படும் பத்து கிலோ அரிசியுடன் சென்று விடலாம். அதற்குப் பணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

அதற்கு மேல் பத்து கிலோ அரிசி வேண்டும் என்றால்தான் கிலோவுக்கு ரூ. 3.50 பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

இப்போது உங்கள் அனைவருக்கும் தெளிவாக புரிய வைத்து விட்டேன் என்று நம்புகிறேன்.

20 கிலோ அரிசியில் 10 கிலோ அரிசி இலவசம் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அந்த இலவச அரிசியைப் பெற எந்த நிபந்தனையும் இல்லை.

10 கிலோ அரிசி போதும் என்றால் இலவசமாக வழங்கப்படும் அரிசியுடன் சென்று விடலாம், கூடுதலாக 10 கிலோ தேவை என்றால் மட்டும் கிலோவுக்கு ரூ.3.50 கொடுத்து பெற்றுச் செல்லலாம்.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்த 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரள அரசு செவிமடுக்கவில்லை. மாறாக சட்டத் திருத்தம் கொண்டு வந்து விட்டது.

ஆனால் உண்மையான அளவான 152 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளும். தமிழக விவசாயிகளின் நலனை விட்டுக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த ஓசி அரிசி அறிவிப்பு திமுகவை அலற வைத்துள்ளது.

Credits - Thatstamil.com

கலங்கடிக்குது கலர் டி.வி..!

‘‘இதுவரையில் நான் சென்ற தேர்தல் சுற்றுப் பயணங்களைவிட இந்த முறை பல மடங்கு வெற்றிகரமாகவும், பிரமாண்டமாகவும் என் சுற்றுப்பயணம் அமைந்தது. ஏற்கெனவே நான் கண்ட சுற்றுப் பயணங்களைவிட, இந்த முறை மக்களின் எழுச்சியை எல்லா இடங்களிலும் காண முடிந்தது...’’

&ஏப்ரல் 12&ம் தேதி தன் முதல்கட்டத் தேர்தல் பிரசாரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உற்சாக வார்த்தைகள்தான் இவை. உண்மையைச் சொல்லப் போனால், தன் பிரசாரப் பயணத்தைத் தொடங்கும்போது கருணாநிதியே இப்படி ஒரு மக்கள் வெள்ளத்தை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஏன் இந்தத் திடீர் திருவிழா?

ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டு மென்றால்& இலவச கலர் டி.வி. என்ற திடீர் அலை தான்! இந்தத் தேர்தலில் எந்த அலையும் இல்லை என்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படியரு திடீர் அலை கிளம்பி, தி.மு.க&வினர் உற்சாகத்தில் திளைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதைப்பற்றி பரவசத்துடன் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர் தி.மு.க. பிரமுகர்கள் சிலர்.

‘‘தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக எடுத்துச் சொல்லி, அது எப்படி சாத்தியம் என்று கலைஞர் பேசுவதைக் கேட்பதற்காகவே அத்தனை மக்களும் வருகின்றனர். குறிப்பாக, Ôவறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களுக்கு வீடுதோறும் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும், கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும், நிலமில்லாதவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும்Õ என்ற அறிவிப்புகள் மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

‘இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி எப்படிக் கொடுப் பார்கள்? இப்போது எட்டு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு ஒரு கிலோ அரிசியை வாங்கி, மூன்று ரூபாய் ஐம்பது பைசாவுக்கு ரேஷனில் கொடுக்கும்போதே சில ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம். அப்படி இருக்கும்போது, இது எப்படி சாத்தியம்? அதுபோல இலவசமாக டி.வி. தருவோம் என்று சொல்லியிருப்பதும் சுத்த ஹம்பக்’ என்று அ.தி.மு.க. தரப்பில் கிண்டலடித்தார்கள். மக்களும்கூட சந்தேகப்பட்டார்கள்.

ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் பிரசார மேடைகளில் தவிடுபொடியாக்கி விட்டார் கலைஞர். அதனால்தான் இந்த விவகாரத்தை மேற்கொண்டு ஊத முடியாமல், தடுமாற ஆரம்பித்து விட்டார்கள் அ.தி.மு.க&வினர். அதனால், ‘இலவச டி.வி. கொடுப்பார்கள், சரி... இலவசமாக கேபிள் டி.வி. இணைப்பையும் கொடுப்பார்களா?’ என்று இப்போது வீம்பு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது மக்களை வெறுப்படைய வைத்திருக்கிறது. இந்தத் திட்டம் சாத்தியம் என்றால், ‘நாங்கள் டி.வி&யோடு டி.வி.டி. பிளேயரும் சேர்த்துக் கொடுக்கிறோம் என்று அ.தி.மு.க&வினர் சொல்லலாமே... ஏன் இப்படி விதண்டாவாதம் செய்ய வேண்டும்?’ என மக்கள் எரிச்சல் அடைந்துவிட்டனர். இருந்தாலும், முதல்வர் ஜெயலலிதா, ‘இது கருணாநிதியின் ஏமாற்று வேலை...’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவே அவருக்கு எதிராக மக்களைத் திருப்பி விடும் பாருங்கள்’’ என்றனர் அந்தப் பிரமுகர்கள்.

கலர் டி.வி. அறிவிப்பால் கிடைத்த அமோக உற்சாகத்தில், தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களைக் கணக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தி.மு.க&வினர். இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்தோடுதான் நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்தவே கணக்கெடுக்கும் பணியை முடுக்கி விட்டிருக்கிறது தி.மு.க!

இலவச கலர் டி.வி. திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்ததில் திருவல்லிக்கேணி தி.மு.க. வேட்பாளரான பேராசிரியர் நாகநாதனுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்கிறார்கள். அவர் தனது பேராசிரிய நண்பர்களோடு கலந்து பேசித்தான் இப்படியரு திட்டத்தைத் தீட்டியதாகச் சொல்லப்பட, அந்த நண்பர்கள் சிலரிடம் பேசியபோது டெக்னிக்கலான விளக்கங்களை அள்ளிப்போட்டார்கள்.

‘‘தொலைக்காட்சிப் பெட்டியில் முக்கியமான பாகம் பிக்சர் டியூப்தான். கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில்தான் அதிக அளவில் பிக்சர் டியூப்கள் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான டி.வி. தயாரிப்பு கம்பெனிகள் இந்த நாடுகளிலிருந்து பிக்சர் டியூப்களை இறக்குமதி செய்து நம்நாட்டில் அசெம்பிள் செய்துதான் விற்பனை செய்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பிக்சர் டியூப்களுக்கு மத்திய அரசு 40 சதவிகிதம் வரை சுங்க வரி வசூலிக்கிறது. மத்திய அரசின் இந்த வரியை முழுமையாக நீக்கிவிட்டால், கிட்டதட்ட பிக்சர் டியூபின் விலை பாதியாக குறைந்து விடும். மேலும் லட்சக்கணக்கில் பிக்சர் டியூப்களை வெளிநாட்டில் இருந்து வாங்கும்போது, பேரம் பேசி இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

அதேபோல, அரசே இங்கு டி.வி. பெட்டிகளை அசெம்பிள் செய்து தரும்போது, பிக்சர் டியூப்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துதரும் நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபம், டி.வி&யை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிக்குக் கிடைக்கும் லாபம் ஆகியவையும் அரசுக்கே கிடைக்கும். இதனால் இன்னும் பணம் மிச்சப்படும். தமிழகத்தில் வேலை வாய்ப்பையும் பெருக்கலாம். மொத்தத்தில் ஒரு கலர் டி.வி&யை இரண்டாயிரம் ரூபாய் அல்லது இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் அடக்கவிலையில் கொடுக்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பதினாறு பெரிய கம்பெனிகள் கலர் டி.வி&க்களைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில கம்பெனிக்காரர்களிடம் கலர் டி.வி. திட்டம் பற்றி கேட்டபோது, ‘தமிழக அரசு சார்பில் இப்படியரு திட்டம் கொண்டு வந்தால், அதற்கு நாங்கள் முழுமையாக உதவி புரிவோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

அடுத்து, இந்தத் திட்டம் இரண்டாண்டு காலத்துக்குள் முடிக்கப்படுவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் இது நிச்சயம் சாத்தியம்தான். 2001&ம் ஆண்டில் மத்திய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்தே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கணக்கிட்டுவிடலாம். இல்லையென்றால், சத்துணவு அமைப்பாளர்கள், ரெவின்யூ ஊழியர்கள், ஆசிரியர்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தலாம். கடைசியாக எடுத்த கணக்கெடுப்புப் பிரகாரம் தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களில் டி.வி. இல்லாதவர்கள் சுமார் 22 லட்சம் பேர். அது இன்னும் கொஞ்சம் கூடலாம். அல்லது வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கென்று வெளிர் சிவப்பு நிறத்தில் வகை பிரித்து ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை வைத்தும் எவ்வளவு பேருக்கு டி.வி. வழங்க வேண்டும் என்று கண்டு பிடித்து விடலாம்...’’ என்றவர்கள், ‘‘தி.மு.க. தரப்புச் சொன்னால் மத்திய அரசு எதையும் செய்யத் தயாராக இருக்கும். அதனால்தான் இந்தத் திட்டம் சாத்தியப்படும் என்பதை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மேடைதோறும் சொல்லி வருகிறார். டி.வி. ஓகே ஆனால், கேபிள் கனெக்ஷனை யார் கொடுப்பார்கள் என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது. டி.டீ.ஹெச். எனப்படும் வீடு தேடி வரும் நேரடி ஒளிபரப்பு முறையில் ஒரு ஆன்டெனா மூலமாக வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாமல் டி.வி. பார்க்கமுடியும். அந்த ஆன்டெனாவை மொத்தமாக வாங்கும்போது அறுநூறு ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு முறை செலவு செய்து இந்த ஆன்டெனாவைப் பொருத்தி விட்டால், மாதாமாதம் கேபிள் கட்டணமாக நூறில் இருந்து இருநூறு வரையில் செலவு செய்யத் தேவையில்லை.

ஆனால், இந்த டி.டீ.ஹெச். முறையில் நாம் விரும்பும் சேனல்கள் அத்தனையும் கிடைக்காது. தமிழில் சன் டி.வி மற்றும் பொதிகைச் சேனல்கள் தவிர மற்றவை தெரியாது. விரைவில் எல்லா சேனல்களும் தெரியுமாறு ஏற்பாடு செய்து விடுவார்கள்.

அடுத்து, ‘ஆட்சிக்கு வந்தபிறகு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவார்களா?’ என்ற சந்தேகக் கேள்வி எதிர்த்தரப்பினரால் எழுப்பப்படுகிறது. இவ்வளவு தூரம் தேர்தல் அறிக்கையில் சொல்லி, அது மக்களைச் சென்றடைந்துவிட்ட பிறகு அதை நிறைவேற்றாமல் இருக்க முடியாது’’ என்று சொல்லி முடித்தார்கள் நாகநாதனின் நண்பர்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 22 முக்கிய நகரங்களில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது பேபி எலெக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம். நினைத்துப் பார்க்க முடியாத விலையில் டி.வி., ஃபிரிஜ், வாஷிங் மெஷின், ஏர்&கண்டிஷன் போன்ற பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. அவர்களிடம் இந்த கலர் டி.வி. பற்றிபேசியபோது, ‘‘அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை வாங்கும்போது குறைந்த விலைக்கு வாங்க முடிகிறது. இதனால் பொருளின் அடக்கவிலை குறைகிறது. ஆயிரம், இரண்டாயிரம் எண்ணிக்கையில் பொருட் களை வாங்கும்போதே இப்படி என்றால், லட்சக்கணக்கில் பொருட்களை வாங்கும்போது இன்னும் மலிவாக வாங்க முடியும். எனவே அரசாங்கத்தால் கலர் டி.வி. வழங்க முடியும்’’ என்கிறார்கள், பேபி எலெக்ட்ரானிக்ஸ் தரப்பில்.

ஆனால், ‘இதெல்லாம் சாத்தியமில்லாதவை’ என்று அடித்துச் சொல்லுகிறது அ.தி.மு.க. தரப்பு,

‘‘இலவசமாக கலர் டி.வி. தரப்போவதாக அறிவிக்கப்போகிறார்கள் என்றதும் இது சாத்தியமா என்று விசாரணையில் இறங்கினோம். இந்தியா முழுவதும் டி.வி&க்களை சப்ளை செய்யும் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப் பினரான பிரசாத் என்பவரிடம் இது குறித்துக் கேட்டபோது, ‘இதெல் லாம் சாத்தியமில்லாத விஷயம்’ என்று தெளிவாகச் சொன்னார். அதன்பிறகுதான் கருணாநிதியால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். இலவச கலர் டி.வி. மட்டுமின்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சாத்தியமில்லாத பல வாக்குறுதிகள் இலவசம் என்ற பெயரில் அள்ளி வீசப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட பதினேழு அறிவிப்புகள் அரசுக்கு செலவு வைக்கக்கூடியவை. இவற்றை நிறைவேற்ற ஆரம்பித்தால், அரசு கஜானா துடைக்கப்பட்டு விடும். இதை சரிகட்ட பஸ் கட்டணம், நில வரி, வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி என எல்லா வரிகளும் உயர்த்தப்படும். இது நடுத்தர மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடும்...’’ என்கிறார்கள்.

இலவசம் என்பதே ஏமாற்று வேலை என்பதை காலகாலமாக எல்லா அரசியல்வாதிகளும் சொல்லி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். இலவச சத்துணவு... இலவச காலனி... என்று கொடுத்தபோது, அதையெல்லாம் கிண்டல் அடித்தவர்கள்தான் தி.மு.க&வினர். ஆனால், அவர்களே... இன்றைக்கு இலவசத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். இந்த Ôஇலவச ஆசைÕ தி.மு.க&வுக்கு வெற்றியைக்கூடத் தேடி தரலாம். ஆனால், இதெல்லாம் மக்களை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!

நன்றி ஜூனியர் விகடன்.

கைவிலங்குடன் ஜெயேந்திரர்!

இதைப்பற்றிய செய்தியொன்றையும் நான் பதிவுகளில் பார்க்காததால்.

கைவிலங்குடன் ஜெயேந்திரர்: பேனர் வைத்த மந்திரி மீது வழக்கு!

காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கராச்சாரியாரை முதல்வர் ஜெயலலிதாவின் மேற்பார்வையில் போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வது போல பேனர் வைத்த அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



(இடது) முதலில் வைக்கப்பட்ட பேனர். பின்னர் மாற்றப்பட்ட பேனர் (வலது)

இந்த பேனருக்கு எதிராக காஞ்சி மட பக்தர் மகாதேவன் என்பவர் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்துத் துறவிக்கு கைவிலங்கிட்டு பேனர் வைத்ததன் மூன் இந்துக்களை புண்படுத்திவிட்டனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, உடனே கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி இந்த பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனருக்கு எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே ஜெயேந்திரர்விஜயேந்திரர் இருந்த போர்ஷனைத் தூக்கிவிட்டு பெரிய ஜெயலலிதா படத்தை அதில் ஒட்டினர் அதிமுகவினர்.

இந்த விவகாரம் பெரிதானதையடுத்து அமைச்சரைக் கூப்பிட்டு ஜெயலலிதா டோஸ் விட்டதையடுத்து பின்னர் அந்த பேனரே தூக்கப்பட்டுவிட்டது.

கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும் 1

நான் இப்படியே ஜல்லியடித்துவிட்டு போய்விடலாம்னு நினைத்தேன் ஆனால் அது முடியாது போலிருக்கிறது. பரவாயில்லை ரொம்ப விளக்காமாகவும் போகாமல் ரொம்ப மேலோட்டமாகவும் போகாமல் விவரிக்க முயல்கிறேன்.

இரண்டாம் உலகப்போரின் முக்கயத்துவத்தை கருத்தில் கொண்டு, எல்லா முக்கயமான நாடுகளும் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற, பலமுறைகளில் இந்த கிரப்டோகிராபியை பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியினர், உடைப்பதற்கு மிகவும் கடினமான ஒரு சிப்பரை தாங்கள் வைத்திருக்கும் எனிக்மாவை(Enigma) உருவாக்கி உபயோகித்து வந்திருந்தார்கள்.

இந்த இயந்திரத்தின் பழைய சிப்பர்களை போலந்து நாட்டைச்சேர்ந்த மரியன் ரெஜெவ்ஸ்கி(Marian Rejewski) என்பவர் அவரது குழுக்களை பயன்படுத்தி 1932ல் உடைத்தார். ஆனால் அடுத்தடுத்த மாறுதல்களை செய்துகொண்டே இருந்த ஜெர்மானியர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தான் வைத்திருந்த அந்த இயந்திரத்தின் சிப்பரை உடைக்கும் சூத்திரத்தை(Algorithm!!!), இங்கிலாந்தினரிடமும், பிரெஞ்சுக்காரர்களிடமும் தந்துவிட்டார். அதாவது போலந்து நாட்டுக்காக வேலைசெய்யாமல் இங்கிலாந்துக்காக வேலை செய்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக அந்த சூத்திரம்(Algorithm) கைமாறி கைமாறி அமேரிக்காவினரிடம் வந்தடைந்தது. அவர்கள் தான் அப்பொழுது ஜெர்மானியர்கள் பயன்படுத்தி வந்த ஒன்டைம் பேட்(One time pad) எனப்படும், ஒருமுறையை பயன்படுத்தினர், இந்த முறை தியர விதிமுறைகளின் படி உடைக்கவேமுடியாத ஒரு விஷயம். அதாவது உங்கள் உண்மையான தகவல்களுடன், தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளும் அதே அளவில் கலந்து உருவாக்கப்படும் ஒரு விஷயம். இந்த முறையை அதன் முறைகளின் மூலம் சரியாக உபயோகித்தால் உடைக்கவேமுடியாது.

ஆனால் அமேரிக்கர்கள் இந்த முறையைத்தான் சுமார் 30,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்களைக்கொண்டு உடைத்தார்கள்.



அமெரிக்கர்கள் Enigma வை உடைக்க பயன்படுத்திய இயந்திரம். SIGABA, 2001 ஆம் ஆண்டு அமெரிக்கர்களால் வெளியிடப்பட்டது.


இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து உதவிய போலந்து நாட்டுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்து, பிரெஞ்ச் ஆகிய நாடுகளஇல் வாழ்ந்த கணிதமேதைகளும் உதவினார்கள். இப்படி உடைக்கப்பட்ட சிப்பர்களை வைத்துத்தான் Battle of Britan, மற்றும் Battle of Atlantica வை நேசப்படைகள் வென்றன.

அப்பொழுது ஜெர்மனியர்களிடம் இருந்த நீர்முழ்கி கப்பல்கள் மிகவும் பிரபலம். எப்பொழுது வருவார்கள், எப்பொழுது தாக்குவார்கள் என்பதே தெரியாது, தாக்குதல் முடிந்துவிடும், துறைமுகம் சின்னாபின்னமாகும். அதுவும் கடல்பலத்தையே பெரிதும் நம்பியிருந்த இங்கிலாந்திற்கு இது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலை.

ஆரம்பத்தில் போலந்து நாட்டினர் எனிக்மாவை எப்படி உடைப்பது என்று இங்கிலாந்தினரிடம் காண்பித்த பொழுது, இவ்வளவு கடினமானதா என்றும் இதை உடைக்கத்தான் வேண்டுமா என நினைத்ததாகவும் சொல்கிறார்கள். இதுமட்டும் நிகழ்ந்திருக்காவிட்டால் நினைத்துக்கூடபார்க்கமுடியவில்லை. பதுங்குக்குழிக்குள் இரண்டு தரப்பு பதுங்கிய இருந்த காலம் அது, இரண்டு பக்கமுமே போர் நடக்கவில்லை, ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்கும் அத்துனை வேலைகளையும் முடக்கிவிட்டிருந்தார். அவர்களுடைய மிகப்பிரபலமான வி2 வை இன்னும் அதிக திறனுள்ளதாக்கி, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளாக தயாரிக்கவும் சொல்லியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் இப்படி விட்டிருந்தால், அவர்கள் தயாரித்திருப்பார்கள், உலகம் நினைத்திருக்காத ஒன்று நிகழ்ந்திருக்கும், எப்படியோ அமேரிக்கா அந்தச் சிப்பர்களை உடைத்து அவர்கள் நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை முன்பே அறிந்து தாக்குதல்களை சமாளித்தது. இதில் இன்னொரு பிரச்சனை அதாவது, இப்படி தாங்கள் எனிக்மாவை உடைத்துவிட்ட விவரமும் தெரியக்கூடாது என்பதுதான் அது. இல்லையென்றால் அந்த சிப்பரை மாற்றி புதிதான ஒன்றை உபயோகிக்கி தொடங்கிவிடுவார்கள்.

நீர்மூழ்கிக் கப்பல்களுடனேயே செல்லும் விமானங்கள், அந்த இலக்கை சென்றடைந்ததும் திட்டம் சரியாக நிறைவேற்றப்பட்டதா, அல்லது தங்கள் தகவல் இடையில் மறிக்கப்பட்டு உடைக்கப்பட்டதா என்று கவனித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு அது தெரியாமலும் அதே சமயம் நீர்மூழ்கிக்கப்பல்களை விதிவசத்தாலே முறியடித்ததைப்போல் காட்டினர் நேசப்படையினர்.

இப்படியாக இரண்டாம் உலகப்போரின் முடிவையே மாற்றிய பெருமை அமேரிக்க கோட் பிரேக்கர்ஸ்க்கு உண்டு. இதன் மூலம் சொல்லப்போனால் ஜெர்மானியர்களுடைய அத்துனை விஷயங்களும் நேசப்படைகளுக்கு தெரிந்திருந்தது.

இப்படியே இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, அமேரிக்காவின் எஸ்ஐஎஸ்(SIS) எனப்படும் இந்த கிரிப்டோகிராபிக்கான பிரிவின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைத்துக்கொள்ளப்பட்டது, ஆனால் சிப்பர்களை உடைப்பதில் இவர்கள் பின்தங்கிவிடவில்லை, சூழ்நிலையும் இவர்களை விடவில்லை. இந்தச் சமயத்தில் தான் கோல்ட் வார்(Cold War) எனப்படும் குளிர்போர் என்று தமிழாக்கத்தில் நக்கலாக அழைக்கப்படும் ஒரு மறைமுக யுத்தம் அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்து வந்தது. இதன் முக்கிய காரணங்களில் ஒன்று, ஜெர்மனி. அதாவது இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர், ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி அமேரிக்க சார்பு நேசப்படைகளிடமும், ஒரு பகுதி இரஷ்யர்களிடமும் இருந்தது.

இதனால் உளவறிய அவர்கள் இரஷ்யர்களின் சிப்பர்களையும் உடைக்கவேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை. இதில் ஒரு விஷயத்தை கூறிப்பிடவேண்டும் அது இந்த எஸ்ஐஎஸ் எனப்படும் அமேரிக்க கிரிப்டோபிரிவு அமேரிக்க காங்கிரஸின் இரண்டே பேருக்கு மட்டும் தான் தன் விவரங்களை சொல்லிக்கொண்டு வந்திருந்தது. அதாவது முழு சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது போன்ற இரண்டாம் உலகப்போரைப்பற்றி விவகாரங்கள் எப்படி வெளியே தெரிந்ததென்றால் அமேரிக்கர்கள் இரண்டாம் உலகப்போரைப்பற்றிய சில கோப்புக்களை, வெளியிட்ட காரணத்தால் மட்டும் சாத்தியமானது. அதைப்போல் இரஷ்யர்களின் சிப்பர்களையும் உடைத்த விவரங்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து விவரமாகக் கிடைக்கலாம். ஆனால் இரஷ்யர்களின் சிப்பர்களை அமேரிக்கர்கள் உடைத்துவிட்டனர் என்பது உறுதி.

இதை வைத்துத்தான் இரஷ்ய அணுஆயுத ஏவுகணைகளை கியூபாவில் நிறுத்திவைத்த விவகாரத்தை அமேரிக்க அரசாங்கம் சாதுர்யமாக முறியடித்தது. அதுமட்டுமில்லாமல், இரண்டு ஜெர்மனிகளையும் இணைத்தது, பெர்லின் சுவரை உடைத்தது போன்ற இன்னபிற விவகாரங்களிலும் இதன் ஆளுமை பின்னால் இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமானால் இரஷ்யாவின் இரும்புத்திரைக்குள் அமேரிக்காவின் கை மிக நீண்டு இருந்திருக்கிறது.

ஆனால் 1970 களுக்குப்பிறகு, அமேரிக்க அரசு இந்த கிரிப்டோ விவகாரத்தை கொஞ்சம் நெருக்கிப்பிடித்தது, அதாவது அமேரிக்க கிரிப்டோ ஆட்கள் தங்கள் நாட்டினரின் செய்திகளையே உளவரிகிறார்கள் என்பது போன்ற விவரங்கள் வர அவர்களின் சுதந்திரம் குறைக்கப்பட்டது என சொல்லிக்கொள்கிறார்கள். (உண்மையில் சொல்லமுடியாது.) இப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்ட என்எஸ்ஏ(NSA) என அழைக்கப்பட்டு வரும் அமேரிக்காவின் கிரிப்டோ அலுவலகம் உலகத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியது.

அதேப்போல் அவர்களது நடவடிக்கைகள் மட்டும் கிடையாது, உள்ளிருக்கும் அமைப்பு பற்றிய எந்த ஒரு புகைப்படமோ இல்லை, அவர்கள் உபயோகிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றின் விவரங்களோ வெளியிடப்படவில்லை. உலகத்தையே அமேரிக்கா ஒற்றரிந்து வருகிறது என்பதுமட்டும் உண்மை. இடையில் சில சமயங்களில் அமேரிக்காவிற்கும் அடி சறுக்கியிருக்கிறது. அது இந்தியா போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்போகும் விவரமே தெரியாதது, மற்றும் செப். 11 தாக்குதல் போன்றவை ஆகும்.

செப். 11 தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஒரு அமேரிக்க அதிகாரி கூறுகையில், இந்த வகையான முறைகளால், இப்பொழுது 40 பிட்களுக்கு(40 bits) மேற்பட்ட கிரிப்டோகிராபியின் கீக்கள் இப்பொழுது வெளிநாட்டுக்கு தருவது/செல்வது கிடையாது. இதுபற்றி விவரமாக பிறகு பார்க்கலாம். தற்பொழுது கோல்டு வாரும் முடிந்துவிட்ட நிலையில் அமேரிக்க அரசாங்கம், இன்டர்நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்ற பிரச்சனைகளில் முக்கியத்துவம் அளித்துவருகிறது.

ஒன்றுமட்டும் உறுதியாக நம்பப்படுகிறது அது அமேரிக்காவிடம் தான் உலகத்தின் மிக வேகமான கணணியிருக்கிறது என்றும், அவர்கள் நினைத்தால் எல்லா தகவல் பரிமாற்ற விவகாரங்களிலும் தலையிடுவார்கள் என்பதும்தான் அது. இதைப்பற்றி அமேரிக்க மக்களிடம், கிரிப்டோ அதிகாரிகள் சொன்னபொழுது. அமேரிக்காவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று கூறுவதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஒருவழியாக இதன் முக்கியத்துவத்தை விவரித்தாகிவிட்டது, அடுத்து கொஞ்சம் விலாவரியாக, கொஞ்சம் டெக்னிக்கலாக பார்க்கலாம்.


-----------------------------


இன்னும் விவரமாக படிக்க,

எனிக்மாவை(Enigma) உடைத்தமுறை

U போட் களை முறியடித்த விதம்.

முத்துத்துறைமுக தாக்குதலைப் பற்றி

கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும்

நான் வழக்கமான பதிவுகளாக இல்லாமல், ஆழமான பதிவுகள் மட்டுமே போடவேண்டும்(தலைப்பில் கூட உம்மைத்தொகையிருக்கிறது.) என நினைத்ததும் நினைவுக்கு வந்த முதல் எண்ணம் சோழர்களைப்பற்றி, அடுத்து நினைவிற்கு வந்தது தான் இந்த கிரிப்டோகிராபி.

கிரிப்டோகிராபி என்பது ஒன்றும் பெரிய விளங்காத விஷயமில்லை, சுலபமானதுதான். சில கணித முறைகளைப்பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் கிரிப்டோகிராபி. முக்கியமாக தகவல்தொடர்பின் பொழுது. அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலை பரிமாறும் பொழுது இடையில் இருப்பவர்களிடம் இருந்து அந்தத் தகவலை பாதுகாப்பது.

ஆரம்ப காலங்களில் தகவல்களை எழுதியனுப்பும் பொழுது மற்றவர்களுக்கு புரியாதவகையில் எழுது அனுப்புவதில் இருந்து தொடங்கியது இந்த கிரிப்டோகிராபி. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது என்று கருதப்படுகிறது. முன்காலங்களில் ஒற்றர்கள், ராணுவத்தளபதிகள், அரசர்கள் இவர்களுக்கிடையில் கருத்துப்பரிமாற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த இந்த கிரிப்டோகிராபி இப்போது பலபடிகள் உயர்ந்து உலகின் மிகமுக்கியமான ஒரு விஷயமாக பரிமாணம் பெற்றிருக்கிறது.

இதன் வரலாறு சுமார் கி.மு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்குகிறது, அப்பொழுது எகிப்தில் வாழ்ந்த மன்னர்கள் முதற்கொண்டு, ரோம சாம்ராஜியம், கிரேக்க சாம்ராஜியம் என ஆளுக்காள் உபயோகித்து, நாளொருமேனியும் பொழுதொறு வண்ணமாய் வளர்ந்து வந்திருக்கிறது இந்த கிரிப்டோகிராபி.





பண்டையகாலத்தில் எகிப்தியர்கள் பயன்படுத்தியவிதம்

ஒரு சமயம் எங்கள் தமிழய்யா சொன்னது ஞாபகம் வருகிறது, தமிழில் இதுபோன்ற விஷயங்கள் உண்டென்றும் பாடல்களிலிலேயே இம்மாதிரி எழுதுவதுண்டு என்றும் சொன்னார். அதாவது ஒரு பதினாறு அடி கொண்ட பாடல் இருந்தால் அதில் இருந்து சில சில வார்த்தைகளை மட்டும் எடுத்து தனியாகப் படித்தால் வேறு ஒரு பொருள் தரும் என்றும், தான் இளங்கலை முதுகலை தமிழ் படித்தபொழுது படித்ததாக நினைவு உண்டென்றும் சொல்லியிருந்தார். நம்மவர்கள் கணக்கில் வல்லவர்கள், பாடல்களுக்கே கணக்கு வைத்து, பாடிக்கொண்டிருக்கும் பொழுது இலக்கணம்(கணக்கு?) தவறுகிறதா என கண்டுபிடித்த புத்திசாலிகள் அல்லவா அவர்கள்.

புரியும்படி ஒரு சிறு உதாரணம் தருகிறேன்,

இப்போ நீங்க மோகன்னு எழுத வேண்டுமென்றால், mohan அப்படின்னு எழுதாம என்கிரிப்ட் பண்ணி இப்படி prkdq ன்னு எழுதலாம், அதாவது நீங்கள் ஆங்கில் எழுத்தின் முதல் எழுத்தான a க்கு பதில் முதல் எழுத்தாக d யை வைத்துக்கொண்டு, mohan என்பதை, prkdq என எழுதலாம் இதை நீங்கள் ஒரு தகவலாக உங்களிடமிருந்து மற்றவருக்கு அனுப்பினால் அவரிடம் இந்த prkdq வந்து சேர்ந்ததும், அவர் இதில் இருந்து mohan ஐ வரவழைக்க முடியும், நீங்கள் எப்படி இந்த பார்மேட்டை உருவாக்கினீர்கள் என்று சொல்லியிருந்தால் அதாவது a க்குபதில் d என்பதை. இதைத்தான் சிப்பர்(cipher) என்று சொல்வார்கள். முன்பு சொன்னதைப்போல் இந்த கிரிப்டோகிராபி, சீசரின் காலத்திலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக(?) சீசர் சிப்பர் என்ற ஒரு முறை வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. (நான் கூட உபயோகப்படுத்தியிருக்கிறேன்.!!!)

இதைப்போல் தகவல்களை உருவாக்குவதற்கும், பிறகு மாற்றப்பட்ட(என்கிரிப்ட் செய்யப்பட்ட) தகவல்களை சாதாரண தகவல்களாக மாற்றுவதற்கும் ஆரம்பகாலத்தில் மனதாலேயே கணக்குப்போட்டுத்தான் செய்தனர். ஆனால் பிற்காலத்தில் இது புதுவடிவம் பெற்று இதற்கென இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதாவது நீங்கள் mohan என்று தட்டச்சினலே அந்த இயந்திரம் prkdq என்று தட்டச்சும்.

இது போன்ற இயந்திரங்கள் தட்டச்சுவதற்கு மட்டும் பயன்படாமல், தொலைபேசி கண்டறியப்பட்ட பிறகு, இராணுவ விஷயங்களை தொலைபேசுவற்கும் கண்டறியப்பட்டது, அதாவது தகவலை சாதாரணமாக நீங்கள் தொலைபேச அது பாதுகாக்கப்பட்ட (என்கிரிப்டட்) தகவல்களாக மற்றவர்களை சென்றடையும், அதாவது தகவல் பரிமாறப்படும் பொழுது அது பாதுகாக்கப்பட்ட தகவலாகவே இருக்கும், அந்தப்பக்கம் போய்ச்சேர்ந்த பிறகு அந்தத் தகவல்களை மீண்டும் சாதாரண தகவல்களாக மாற்றவும் இயந்திரங்கள் இருந்தன.

இங்கேத்தான் கோட்பிரேக்கர்ஸ்(code brakers) வராங்க, அதாவது நீங்கள் அனுப்பும் தகவல் உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் எதிரிகளையும் சென்றடையும்(ஒலிஅலைகளை கடத்தியாக பயன்படுத்துவதால்). அதனால் அவர்களிடம் உங்கள் பாதுகாக்கப்பட்ட தகவலானது, சிப்பர் இருந்தால் சுலபமாக படிக்க முடிந்துவிடும். அதற்குத்தான் கோட்பிரேக்கர்ஸ் என்பவர்கள் தேவைப்பட்டார்கள். அதாவது நம் உதாரணத்தின் படி பார்க்கவேண்டுமானால் prkdq என்பதை வைத்து அவர்கள் mohan என்பதை உருவாக்க முயற்சிப்பார்கள், அதாவது நாம் பயன்படுத்திய a என்றால் d என்பதை கண்டறிய முயல்வார்கள். இவர்கள் தான் கோட்பிரேக்கர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இதைப்போன்றே கோட்மேக்கர்ஸ் என்பவர்கள் a என்றால் d என உருவாக்குபவர்கள்.

நான் உங்களுக்கு உதாரணமாக சொன்னதைப்போன்று சுலபமாக இருக்காது அந்த பாதுக்கப்பட்ட தகவல், நான் உபயோகித்தது a உடன் மூன்றைக்கூட்டி d என்ற ஒரு சுலபமான சமாசாரத்தை. இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜெர்மனியினர் உபயோகித்த சிப்பர்கள் மிகப்பெரிய அடுக்குகளைக்(permutations) கொண்டது அதாவது இரண்டின் அடுக்கு 238 (2 pow 238) என வைத்துக்கொள்ளலாம். அவர்கள் நினைத்தார்கள் இந்த சிப்பர்களை யாராலும் உடைக்க முடியாது என்று. ஆனால் அமேரிக்கா இதற்காகவே சுமார் 30,000 நபர்களை வேலைக்குவைத்து அவர்களுடைய சிப்பர்களை சாமர்த்தியமாக உடைத்துவிட்டார்கள்.



ஜெர்மானியர்களின் உபயோகப்படுத்திய Enigma இயந்திரம்

அதைப்போலவே ஜப்பானியர்களினுடையதையும், அவர்களுடைய பிரபலமான கடல்படையின் JN - 25, என்ற சிப்பரை (crypto systems) உடைத்தார்கள், இதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு முத்துத்துறைமுகம்(perl harbour) ஜப்பானியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகப்போகிறது என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்களின் தயார்படுத்தும் அல்லது உஷார்படுத்தும் அல்லது எச்சரிக்கும், அரசு இயந்திரம் சரியாக செயல்படாததால் தான் அவர்களால் அந்த தாக்குதலை தடுக்கமுடியவில்லை. இதை நினைக்கும் பொழுது எனக்கு இந்தியாவை தாக்கிய சுனாமிதான் நினைவில் வருகிறது. அப்பொழுது பலர் கேட்டது, அம்மேரிக்கா எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வியை, அதைப்பற்றி எழுதும் பொழுது சுஜாதா சொன்னது,

நம்முடைய அரசாங்கத்தின் தொடர்பு கொள்ளும் தன்மை மோசமானது, அமெரிக்க அரசு, இந்திய அரசை தொடர்புகொண்டு, இந்திய அரசு, தமிழக அரசை தொடர்பு கொண்டு இப்படியாக ஒரு பெரும் சுழற்சி முடிந்து மக்களை சென்றடையும் பொழுது சுனாமி தாக்கியிருக்குமென்று சொன்னதாக நினைவு. அதேபோல் நீங்கள் நம் மக்களிடம் சுனாமி என்று சொன்னால் அதன் விபரீதத்தை உணராமல் போய்ப்பார்க்கத்தான் பலர் விரும்புவார்கள் என்றும் சொல்லியிருந்தார் அதைப்போலத்தான் இதுவும் அந்தக்காலத்தில் அமேரிக்காவின் அரசாங்கத்தின் நிலையும் இப்படித்தான் இருந்தது அதனால் தான் அவர்களால் அந்த தாக்குதலை முறியடிக்க முடியவில்லை.

ஆனால் பிற்காலத்தில் பல ஜப்பானிய தாக்குதல்களை முறியடித்தனர். இன்னும் நன்றாக சொல்லவேண்டுமானால் அமெரிக்காவும் நேச நாடுகளும் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற இந்த கிரிப்டோகிராபி மிகவும் பயன்பட்டிருக்கிறது.

இதைப்பற்றியும் இன்றைய காலத்தில் வழக்கத்தில் உள்ள சில கிரிப்டோ முறைகளைப்பற்றியும் அடுத்த முறை பார்ப்போம்.

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸும் ஜல்லியடித்தலும்

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)

இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

இயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக முக்கியமாக கணிணியை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க முயற்சி என்றே கூறலாம். கணிணி கண்டுபிடித்த தொடக்கத்திலேயே இது சம்மந்தமான ஆராய்சிக்களும் தொடங்கிவிட்டது. மனிதனைப்போலவே, இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கவே இந்த முயற்சிகள் பெரிதும் செய்யப்பட்டன.

80 களில், இது சம்மந்தமான முயற்சிகளுக்கு அமேரிக்க அரசாங்கம் அதிக அளவில் பொருள் செலவழித்தது. அதைப்போலவே ஜப்பானும் ஐந்தாம் தலைமுறை கணிணி (Fifth Generation Computer) என்ற பெயரில் இது சம்மந்தமான முயற்சிகளை அதிக பொருள்செலவில் ஊக்குவித்தது. ஆனால் இவை அந்த அளவிற்கு வெற்றிகளை குவிக்காததால், இதற்கான ஃபண்ட்ஸ்(Funds) விரைவில் குறைத்துக்கொள்ளப்பட்டது.

கணிணிகள் தற்சமயம் வரை நாம் செய்யச் சொன்னது போலச் செய்யுமே ஒழிய தானாக சிந்திக்கவோ இல்லை முடிவுகளை எடுக்கவோ செய்யாது. வேண்டுமானால் ஒரு பிரச்சனை சார்ந்த விஷயத்திற்கு மனிதனைப்போல சிந்திக்க கணிணிகளை பழக்கப்படுத்த முடியும். இதற்கு தற்சமயத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படும் சில துறைகளையும் அது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும்.

தற்பொழுது இருக்கும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முறைகளில் கணிணி தானே சிந்தப்பது என்பதற்கு அது பிரச்சனை சார்ந்து, அதிகம் தனக்குத்தானே கணக்கிட்டுக்கொண்டு முடிவு எடுக்கிறது எனக் கூறலாம். உதாரணமாக செஸ் ஆட்டத்தை எடுத்துக்கொள்வோம் இதில் கணிணி எப்படி விளையாடுகிறது, எப்படி கணக்கிடுகிறது என்பதைப் பார்த்தோமானால் கணிணி எப்படி தானாய் சிந்திக்கிறது அல்லது தானாய் எப்படி சிந்திக்க வைத்தார்கள் என்பதை அறியலாம். முதலில் நாம் 8 குயின் பிராப்ளம் (8 queen problem or n queen problem) என்ற ஒரு முறை உண்டு அதைப்பார்ப்போம்.

செஸ் ஆட்டத்தில் இராணியின் நகர்வுதிறன் உங்களுக்கு தெரிந்திருக்கும், தான் இருக்கும் இடத்திலிருந்து நேராகவும் குறுக்காகவும் நகர முடியும் ராணியால். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட செஸ் அட்டையில், ஒரு இராணியின் ஆளுமையை(நேராகவோ, குறுக்காகவோ) மற்றொரு ராணி மறிக்காமல் மொத்தம் எட்டு ராணிகளை வைக்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்லவேண்டுமானால் ஒரு செஸ் போர்டில் எட்டி ராணிகளை ஒன்றையொன்று வெட்டாமல் வைக்க வேண்டும்.

இப்படி வைப்பதற்கு கணிணி முறையில் ஒரு கொள்கையை பயன்படுத்துகிறார்கள், அது பேக் டிராக்கிங்(Back Tracking), அதாவது முதலில் ஒரு ராணியை போர்டில் வைத்துவிடுகிறோம் பின்னர், அடுத்த ராணியை வைப்பதற்கான முயற்சியில் கணிணியானது முதலில் தான் எங்கே அந்த ராணியை வைக்க முடியும் என சிந்திக்காமல் எங்கெல்லாம் வைக்க முடியாது என சிந்தப்பதை தான் பேக் டிராக்கிங் என அழைக்கிறார்கள். இதன் காரணமாக அடுத்த ராணியை எங்கு வைப்பது என கண்டுபிடிப்பதில் நமக்கு ஆகும் கணக்கிடுதலின் பணி குறையும். (The backtracking method is based on the systematically inquisition of the possible solutions where through the procedure, set of possible solutions are rejected before even examined so their number is getting a lot smaller. )

கீழே உள்ளதும் இது போன்ற ஒன்றுதான் இது தானாகவே ஒன்றிலிருந்து அடுத்தது என எட்டு ராணிகளை வைக்கும் ஒரு ப்ரோக்கிராமே. நெக்ஸ்ட் ஸொல்யூஸனைக்(Next Solution) கிளிக்கும் பொழுது புதிது புதிதாக எத்தனை முறைகளை (எட்டு ராணிகளை வெட்டாமல் வைக்கும் முறை) பாருங்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுதப்பட்டது கிடையாது.



இதை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸின் முதல் படி எனலாம். இப்படி அடுத்த ராணியை வைப்பதற்கு முன் முறைப்படி நிராகரிக்கவும் பின்னர் அடுத்த வைத்தலைப்பற்றிய கணக்கையிடவும் கணிணிக்கு சொல்லிவிட்டால் கணிணியால், ஒன்றன் பின் ஒன்றாக எட்டு ராணிகளை வைக்க முடியும் இதுதான் முதல் பரிமாணம் கணிணியில் செஸ் ஆட்டத்திற்கு.

இதைப்போலவே உண்மையான செஸ் ஆட்டத்திற்கான கணக்கு முறையும் இப்படித்தான் தொடங்கும் முதலில் எங்கெல்லாம் வைக்க முடியாது எனப்பார்ப்பது. பின்னர். ஏற்கனவே தன் நினைவில் இருக்கும் நகர்த்துதளின் படி அடுத்த நகர்ததலை தேர்ந்தெடுப்பது போன்றவைதான் ஒரு தேர்ந்த சதுரங்கக்கணிணியை உருவாக்குகிறது. அதாவது இந்த வகை ஆர்டிபிஷியல் இன்டெலிஜனஸ் கணிணிகள் முன்னால் நடந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும், அதாவது முன்னர் விளையாடிய ஆட்டத்தின் நகர்தலை.


கீழே உள்ளதும் ஒரு சதுரங்கக் கணிணியே இதில் நீங்கள் முதலில் நகர்த்த வேண்டும் பின்னர் கணிணி எவ்வளவு கணக்கிடுகிறது எனப்பார்க்கலாம். தன்னுடையதையும்(பிராஸஸர்) நம்முடையதையும். அது போடும் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் அது சிந்திக்கும் அடுத்த நகர்த்தல்கள்.இது ஒரு முழுமையான சதுரங்கக்கணிணி கொஞ்சம் சிந்தித்து விளையாடினால் இதை வெல்லலாம். ஆனால் போன பதிவில் சொன்னதைப்போல டீப்புளு போன்ற உலக வல்லுநர்களையே தோற்கடிக்கும் சதுரங்கக்கணிணிகள் புழக்கத்தில் உள்ளன.



கையெழுத்தை உணர்ந்து கொள்வது(handwriting recognition), பேசுவதை உணர்ந்து கொள்வது(speech recognition), முகங்களை உணர்ந்து கொள்வது(speech recognition), இமேஜ் பிராஸஸிங்(Image Processing), பிறகு நம் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு சம்மந்தமான ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(Game AI).

இந்த ஒவ்வொரு துறையுமே ஒவ்வொரு பெரிய கடலைப்போன்ற ஆராய்ச்சிகளை தன்னுள் அடக்கயது. கையெழுத்தை உணர்வது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் எழுதும் எழுத்தையோ இல்லை வார்த்தையையோ, தன்னிடம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளஇடம் ஒப்பிட்டு கண்டறிவது. இதைப் போலவே முகங்களை அறிவதும், பேசுவதை அறிவதும் பாட்டர்ன் ரெககனைசிங்(Pattern Recoginition) சொல்லப்படும் இந்த ஒப்பிடுதல் முறைகளால் நடைபெறுகிறது.

இதைப் போலத்தான் இமேஜ் பிராஸஸிங் அதாவது ஒரு இமேஜை இன்புட்டாக கொண்டு செய்யப்படும் எல்லா வேலைகளுமே இதில் அடங்கும், இமேஜ்கள் சிக்னல்களாகவோ, புகைப்படங்களாகவோ, இல்லை இரண்டு பரிமான திரைப்படங்களாகவோ இருக்கும். அந்த இமேஜ்களை இருப்பதை விட பெரிதாக்குதல், சிறிதாக்குதல், சுழற்றுதல், காணப்படும் வண்ணங்களை மேம்படுத்துதல், ஒப்பிடுதல், ஒலியில் இருக்கும் இரைச்சலை குறைத்தல் போன்றவைகள் தான் முக்கியமானது.

இதனால் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது சில அல்லது பல அரிய சூத்திரங்களை கணிதமுறைகளை பயன்படுத்தி கணிணியை ஓரளவு சிந்திக்க வைப்பது. ஆனால் மனித அளவுக்கு சிந்திக்க முடியாததற்கு காரணம் இதுவரை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸில் இருக்கும் முறைகளின் அடிப்படைகளிலேயே பிரச்சனையிருப்பது தான்.

Computability and computational complexity theories are relevant to AI but don't address the fundamental problems of AI. Intelligence is the computational part of the ability to achieve goals in the world. The problem is that we cannot yet characterize in general what kinds of computational procedures we want to call intelligent.

The ultimate effort is to make computer programs that can solve problems and achieve goals in the world as well as humans. However, many people involved in particular research areas are much less ambitious. A few people think that human-level intelligence can be achieved by writing large numbers of programs of the kind people are now writing and assembling vast knowledge bases of facts in the languages now used for expressing knowledge. However, most AI researchers believe that new fundamental ideas are required, and therefore it cannot be predicted when human level intelligence will be achieved.