கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும் 1

நான் இப்படியே ஜல்லியடித்துவிட்டு போய்விடலாம்னு நினைத்தேன் ஆனால் அது முடியாது போலிருக்கிறது. பரவாயில்லை ரொம்ப விளக்காமாகவும் போகாமல் ரொம்ப மேலோட்டமாகவும் போகாமல் விவரிக்க முயல்கிறேன்.

இரண்டாம் உலகப்போரின் முக்கயத்துவத்தை கருத்தில் கொண்டு, எல்லா முக்கயமான நாடுகளும் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற, பலமுறைகளில் இந்த கிரப்டோகிராபியை பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியினர், உடைப்பதற்கு மிகவும் கடினமான ஒரு சிப்பரை தாங்கள் வைத்திருக்கும் எனிக்மாவை(Enigma) உருவாக்கி உபயோகித்து வந்திருந்தார்கள்.

இந்த இயந்திரத்தின் பழைய சிப்பர்களை போலந்து நாட்டைச்சேர்ந்த மரியன் ரெஜெவ்ஸ்கி(Marian Rejewski) என்பவர் அவரது குழுக்களை பயன்படுத்தி 1932ல் உடைத்தார். ஆனால் அடுத்தடுத்த மாறுதல்களை செய்துகொண்டே இருந்த ஜெர்மானியர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தான் வைத்திருந்த அந்த இயந்திரத்தின் சிப்பரை உடைக்கும் சூத்திரத்தை(Algorithm!!!), இங்கிலாந்தினரிடமும், பிரெஞ்சுக்காரர்களிடமும் தந்துவிட்டார். அதாவது போலந்து நாட்டுக்காக வேலைசெய்யாமல் இங்கிலாந்துக்காக வேலை செய்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக அந்த சூத்திரம்(Algorithm) கைமாறி கைமாறி அமேரிக்காவினரிடம் வந்தடைந்தது. அவர்கள் தான் அப்பொழுது ஜெர்மானியர்கள் பயன்படுத்தி வந்த ஒன்டைம் பேட்(One time pad) எனப்படும், ஒருமுறையை பயன்படுத்தினர், இந்த முறை தியர விதிமுறைகளின் படி உடைக்கவேமுடியாத ஒரு விஷயம். அதாவது உங்கள் உண்மையான தகவல்களுடன், தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளும் அதே அளவில் கலந்து உருவாக்கப்படும் ஒரு விஷயம். இந்த முறையை அதன் முறைகளின் மூலம் சரியாக உபயோகித்தால் உடைக்கவேமுடியாது.

ஆனால் அமேரிக்கர்கள் இந்த முறையைத்தான் சுமார் 30,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்களைக்கொண்டு உடைத்தார்கள்.



அமெரிக்கர்கள் Enigma வை உடைக்க பயன்படுத்திய இயந்திரம். SIGABA, 2001 ஆம் ஆண்டு அமெரிக்கர்களால் வெளியிடப்பட்டது.


இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து உதவிய போலந்து நாட்டுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்து, பிரெஞ்ச் ஆகிய நாடுகளஇல் வாழ்ந்த கணிதமேதைகளும் உதவினார்கள். இப்படி உடைக்கப்பட்ட சிப்பர்களை வைத்துத்தான் Battle of Britan, மற்றும் Battle of Atlantica வை நேசப்படைகள் வென்றன.

அப்பொழுது ஜெர்மனியர்களிடம் இருந்த நீர்முழ்கி கப்பல்கள் மிகவும் பிரபலம். எப்பொழுது வருவார்கள், எப்பொழுது தாக்குவார்கள் என்பதே தெரியாது, தாக்குதல் முடிந்துவிடும், துறைமுகம் சின்னாபின்னமாகும். அதுவும் கடல்பலத்தையே பெரிதும் நம்பியிருந்த இங்கிலாந்திற்கு இது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலை.

ஆரம்பத்தில் போலந்து நாட்டினர் எனிக்மாவை எப்படி உடைப்பது என்று இங்கிலாந்தினரிடம் காண்பித்த பொழுது, இவ்வளவு கடினமானதா என்றும் இதை உடைக்கத்தான் வேண்டுமா என நினைத்ததாகவும் சொல்கிறார்கள். இதுமட்டும் நிகழ்ந்திருக்காவிட்டால் நினைத்துக்கூடபார்க்கமுடியவில்லை. பதுங்குக்குழிக்குள் இரண்டு தரப்பு பதுங்கிய இருந்த காலம் அது, இரண்டு பக்கமுமே போர் நடக்கவில்லை, ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்கும் அத்துனை வேலைகளையும் முடக்கிவிட்டிருந்தார். அவர்களுடைய மிகப்பிரபலமான வி2 வை இன்னும் அதிக திறனுள்ளதாக்கி, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளாக தயாரிக்கவும் சொல்லியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் இப்படி விட்டிருந்தால், அவர்கள் தயாரித்திருப்பார்கள், உலகம் நினைத்திருக்காத ஒன்று நிகழ்ந்திருக்கும், எப்படியோ அமேரிக்கா அந்தச் சிப்பர்களை உடைத்து அவர்கள் நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை முன்பே அறிந்து தாக்குதல்களை சமாளித்தது. இதில் இன்னொரு பிரச்சனை அதாவது, இப்படி தாங்கள் எனிக்மாவை உடைத்துவிட்ட விவரமும் தெரியக்கூடாது என்பதுதான் அது. இல்லையென்றால் அந்த சிப்பரை மாற்றி புதிதான ஒன்றை உபயோகிக்கி தொடங்கிவிடுவார்கள்.

நீர்மூழ்கிக் கப்பல்களுடனேயே செல்லும் விமானங்கள், அந்த இலக்கை சென்றடைந்ததும் திட்டம் சரியாக நிறைவேற்றப்பட்டதா, அல்லது தங்கள் தகவல் இடையில் மறிக்கப்பட்டு உடைக்கப்பட்டதா என்று கவனித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு அது தெரியாமலும் அதே சமயம் நீர்மூழ்கிக்கப்பல்களை விதிவசத்தாலே முறியடித்ததைப்போல் காட்டினர் நேசப்படையினர்.

இப்படியாக இரண்டாம் உலகப்போரின் முடிவையே மாற்றிய பெருமை அமேரிக்க கோட் பிரேக்கர்ஸ்க்கு உண்டு. இதன் மூலம் சொல்லப்போனால் ஜெர்மானியர்களுடைய அத்துனை விஷயங்களும் நேசப்படைகளுக்கு தெரிந்திருந்தது.

இப்படியே இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, அமேரிக்காவின் எஸ்ஐஎஸ்(SIS) எனப்படும் இந்த கிரிப்டோகிராபிக்கான பிரிவின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைத்துக்கொள்ளப்பட்டது, ஆனால் சிப்பர்களை உடைப்பதில் இவர்கள் பின்தங்கிவிடவில்லை, சூழ்நிலையும் இவர்களை விடவில்லை. இந்தச் சமயத்தில் தான் கோல்ட் வார்(Cold War) எனப்படும் குளிர்போர் என்று தமிழாக்கத்தில் நக்கலாக அழைக்கப்படும் ஒரு மறைமுக யுத்தம் அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்து வந்தது. இதன் முக்கிய காரணங்களில் ஒன்று, ஜெர்மனி. அதாவது இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர், ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி அமேரிக்க சார்பு நேசப்படைகளிடமும், ஒரு பகுதி இரஷ்யர்களிடமும் இருந்தது.

இதனால் உளவறிய அவர்கள் இரஷ்யர்களின் சிப்பர்களையும் உடைக்கவேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை. இதில் ஒரு விஷயத்தை கூறிப்பிடவேண்டும் அது இந்த எஸ்ஐஎஸ் எனப்படும் அமேரிக்க கிரிப்டோபிரிவு அமேரிக்க காங்கிரஸின் இரண்டே பேருக்கு மட்டும் தான் தன் விவரங்களை சொல்லிக்கொண்டு வந்திருந்தது. அதாவது முழு சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது போன்ற இரண்டாம் உலகப்போரைப்பற்றி விவகாரங்கள் எப்படி வெளியே தெரிந்ததென்றால் அமேரிக்கர்கள் இரண்டாம் உலகப்போரைப்பற்றிய சில கோப்புக்களை, வெளியிட்ட காரணத்தால் மட்டும் சாத்தியமானது. அதைப்போல் இரஷ்யர்களின் சிப்பர்களையும் உடைத்த விவரங்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து விவரமாகக் கிடைக்கலாம். ஆனால் இரஷ்யர்களின் சிப்பர்களை அமேரிக்கர்கள் உடைத்துவிட்டனர் என்பது உறுதி.

இதை வைத்துத்தான் இரஷ்ய அணுஆயுத ஏவுகணைகளை கியூபாவில் நிறுத்திவைத்த விவகாரத்தை அமேரிக்க அரசாங்கம் சாதுர்யமாக முறியடித்தது. அதுமட்டுமில்லாமல், இரண்டு ஜெர்மனிகளையும் இணைத்தது, பெர்லின் சுவரை உடைத்தது போன்ற இன்னபிற விவகாரங்களிலும் இதன் ஆளுமை பின்னால் இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமானால் இரஷ்யாவின் இரும்புத்திரைக்குள் அமேரிக்காவின் கை மிக நீண்டு இருந்திருக்கிறது.

ஆனால் 1970 களுக்குப்பிறகு, அமேரிக்க அரசு இந்த கிரிப்டோ விவகாரத்தை கொஞ்சம் நெருக்கிப்பிடித்தது, அதாவது அமேரிக்க கிரிப்டோ ஆட்கள் தங்கள் நாட்டினரின் செய்திகளையே உளவரிகிறார்கள் என்பது போன்ற விவரங்கள் வர அவர்களின் சுதந்திரம் குறைக்கப்பட்டது என சொல்லிக்கொள்கிறார்கள். (உண்மையில் சொல்லமுடியாது.) இப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்ட என்எஸ்ஏ(NSA) என அழைக்கப்பட்டு வரும் அமேரிக்காவின் கிரிப்டோ அலுவலகம் உலகத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியது.

அதேப்போல் அவர்களது நடவடிக்கைகள் மட்டும் கிடையாது, உள்ளிருக்கும் அமைப்பு பற்றிய எந்த ஒரு புகைப்படமோ இல்லை, அவர்கள் உபயோகிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றின் விவரங்களோ வெளியிடப்படவில்லை. உலகத்தையே அமேரிக்கா ஒற்றரிந்து வருகிறது என்பதுமட்டும் உண்மை. இடையில் சில சமயங்களில் அமேரிக்காவிற்கும் அடி சறுக்கியிருக்கிறது. அது இந்தியா போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்போகும் விவரமே தெரியாதது, மற்றும் செப். 11 தாக்குதல் போன்றவை ஆகும்.

செப். 11 தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஒரு அமேரிக்க அதிகாரி கூறுகையில், இந்த வகையான முறைகளால், இப்பொழுது 40 பிட்களுக்கு(40 bits) மேற்பட்ட கிரிப்டோகிராபியின் கீக்கள் இப்பொழுது வெளிநாட்டுக்கு தருவது/செல்வது கிடையாது. இதுபற்றி விவரமாக பிறகு பார்க்கலாம். தற்பொழுது கோல்டு வாரும் முடிந்துவிட்ட நிலையில் அமேரிக்க அரசாங்கம், இன்டர்நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்ற பிரச்சனைகளில் முக்கியத்துவம் அளித்துவருகிறது.

ஒன்றுமட்டும் உறுதியாக நம்பப்படுகிறது அது அமேரிக்காவிடம் தான் உலகத்தின் மிக வேகமான கணணியிருக்கிறது என்றும், அவர்கள் நினைத்தால் எல்லா தகவல் பரிமாற்ற விவகாரங்களிலும் தலையிடுவார்கள் என்பதும்தான் அது. இதைப்பற்றி அமேரிக்க மக்களிடம், கிரிப்டோ அதிகாரிகள் சொன்னபொழுது. அமேரிக்காவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று கூறுவதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஒருவழியாக இதன் முக்கியத்துவத்தை விவரித்தாகிவிட்டது, அடுத்து கொஞ்சம் விலாவரியாக, கொஞ்சம் டெக்னிக்கலாக பார்க்கலாம்.


-----------------------------


இன்னும் விவரமாக படிக்க,

எனிக்மாவை(Enigma) உடைத்தமுறை

U போட் களை முறியடித்த விதம்.

முத்துத்துறைமுக தாக்குதலைப் பற்றி

0 comments: