முர்டோக்குடன் கைகோர்க்கும் சன் டிவி-ஆங்கில நாளிதழ் தொடங்க திட்டம்

மும்பை: உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சிகள்-பத்திரிக்கைகள் நிறுவனத் தலைவரான ருப்பர்ட் முர்டோக் தனது த சன் ஆங்கில நாளிதழை இந்தியாவில் வெளியிடவுள்ளார்.

இந்த திட்டத்தில் அவருடன் கைகோர்க்கப் போவது கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனமாகும்.

நியூஸ் கார்போரெசன் என்ற நிறுவனத்தின் கீழ் உலகெங்கும் பல முன்னணி தொலைக் காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்களை நடத்தி வருபவர் முர்டோக்.

இந்தியாவில் ஸ்டார் டிவியை நடத்துபவரும் இவரே.

இப்போது சன் டிவி குழுமத்துடன் இணைந்து த சன் நாளிதழை முதல் கட்டமாக தென் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறார் முர்டோக்.

சன் டிவி நிறுவனம் இப்போது பிற துறைகளிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய, சர்வதேச விமான சேவையிலும் இறங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தட்ஸ்தமிழ்

0 comments: